கோவை கலெக்டர் அலுவலகத்தில் கல்வி கடன் வழங்கும் விழா

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன் மற்றும் பல்வேறு வங்கி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் கல்லூரி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் கல்வி பயில வங்கியில் சார்பில் கல்வி கடன் தொகை வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
