K. V

கோவையில் ஓடும் பஸ்ஸிலிருந்து மாணவி காயம்

திருப்பூரில் இருந்து கோவைக்கு இன்று அதிகாலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். அப்போது அந்த பஸ்சில் கல்லூரி மாணவி ஒருவரும், அவருடன் வாலிபர் ஒருவரும் பயணம் செய்தனர். பஸ்சில் இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தனர். சிறிது நேரத்தில் பஸ்சுக்கு உள்ளேயே இருவருக்கும் திடீரென்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அவர்களை சமாதானம் செய்துள்ளனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்தபடியே பஸ்சில் பயணம் செய்துள்ளனர். இதற்கிடையே…

Read More

கோவை விமான நிலையத்தில் 66 லட்ச ரூபாய் மதிப்பிலான இ சிகரெட் பறிமுதல்..!

கோவை விமான நிலையத்தில் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்திய போது முறையான வரி செலுத்தாமல் கோவைக்கு கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இ சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது . மொத்தமாக 11 விமான பயணிகளிடம் இருந்து 66 லட்ச ரூபாய் மதிப்புள்ள 895 வெளிநாட்டு சிகரெட் மற்றும் இ சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றுக்கு முறையாக வரி செலுத்தி கொண்டு வர வேண்டும். தடையை மீறி மோசடியாக…

Read More

கோவை வனப்பகுதியில் சண்டை போட்ட ஆண் யானை சாவு

கோவை மேட்டுப்பாளையம் பில்லூர் வனப்பகுதியில் இரண்டு ஆண் யானைகளுக்கு இடையே நேற்று சண்டை ஏற்பட்டது. இதில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பலத்த காயங்களுடன் நீரோடை பகுதியில் இறந்து கிடந்தது. இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையின் இறப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றிக்கொண்டு இருக்கின்றன . ஒரு கூட்டத்திற்கும் இன்னொரு கூட்டத்திற்கும்…

Read More

கோவை மேற்கு பைபாஸ் ரோடு அதிரடியாக மூடல்..!

கோவை மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 250 கோடி ரூபாய் செலவில் 11.80 கிலோமீட்டர் தூரத்திற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டிருந்தது. பணிகள் முடிக்கப்பட்டு வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்திற்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் பைபாஸ் ரோடு திறப்பு விழா செய்யாமலேயே அதிக அளவு வாகனங்கள் இந்த ரோட்டில் இயங்கி வந்தது ‌ சமீபத்தில் கோவைப்பதூர் அறிவொளி நகர் பகுதியில் ஆட்டோ மற்றும் சரக்கு ஆட்டோ மோதியதில் கல்லூரி மாணவி ஒருவர் இறந்தார்…

Read More

கோவை ரயிலில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை மார்க்கமாக ரயில்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக அடிக்கடி புகார் வருகிறது. இதை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் , போதைப்பொருள் தடுப்பு போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை திருப்பூரிலிருந்து கோவை நோக்கி வந்த லோகமானியா திலக் எக்ஸ்பிரஸ் ரயிலை கோவை ரயில் நிலையத்தில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் சந்தேகப்படும் வகையில் ஒரு பெட்டியில் ரெக்ஸின் பேக் இருந்தது. அதை திறந்து பார்த்தபோது திறந்து பார்த்தபோது அதில்…

Read More

கோவை மாவட்டத்தில் தேர்தல் செலவு கண்டறிய புதிய திட்டம் ..

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. இதற்காக விரைவில் தேர்தல் கணக்கு பிரிவு துவக்கப்படவுள்ளது வேட்பாளர்கள் 7 நாளுக்கு ஒரு முறை செலவு கணக்கு சமர்ப்பிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கடந்த தேர்தலின் போது சில வேட்பாளர்கள், செலவு கணக்கு தாக்கல் செய்த போது சில செலவுகளுக்கான ஆதாரங்களை ஒப்படைக்கவில்லை. வீடியோ ஆதாரம் காட்டி கணக்கு கேட்ட போதும் அதற்கு நாங்கள் எந்த தொகையும் வழங்கவில்லை என கட்சி வேட்பாளர்கள் தரப்பில் மறுப்பு தெரிவித்தனர். இதனால்…

Read More

கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் ஏமாற்றம்

கோவை மாநகராட்சியில் ஆண்டு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை மேயர் ரங்கநாயகி கவுன்சில் கூட்டத்தில் அறிவித்தார். அவர் கூறியதாவது ; மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பழுதடைந்த கட்டிடங்களில் தேவையான மராமத்து பணிகளை மேற்கொள்ள இந்த நிதி ஆண்டில் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களில் சுகாதார நிலையம் மேம்படுத்த ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் உடல்…

Read More

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு விரைவில் 20 நோடல் ஆபிஸர்கள்..!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தேர்தல் அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பல்வேறு சிறப்பு பிரிவுகள் ஓட்டு சாவடி அலுவலர்கள் என பல்வேறு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாவட்ட அளவில் தேர்தல் அலுவலர்களின் கட்டுப்பாட்டில் பணிகள் ஒப்படைக்கப்படும் . குறிப்பாக மாவட்டத்தில் உள்ள முக்கிய தேர்தல் பணிகள்…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு குவிந்த பெண்கள்..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், வழக்கத்தை விட அதிகளவு பெண்கள் வந்திருந்தனர். மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பங்களை குவித்து வந்தனர். இதனால் அதிகாரிகள் தவிப்படைந்தனர். தமிழக அரசு எற்கனவே மகளிர் உரிமை தொகை பெற்று வரும் பெண்களின் வங்கி கணக்கில் முன் தொகை உள்பட 5 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தது. இது மகளிர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் மகிழ வைத்தது. மாநில…

Read More

கோவையில் தொழிற்சாலைகளால் நச்சுப் புகை, நாற்றம்: கலெக்டர் அலுவலகத்தில் புகார்..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த கணினி ஆசிரியர்கள் உரிமை சங்கத்தை சேர்ந்த பட்டதாரி பெண்கள் புகார் மனு அளித்தனர். அதில், “தமிழக அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கொண்டு வர வேண்டும். தமிழக அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கான தனி பாடப்புத்தகங்கள் கொண்டு வந்து அதற்கான கனி பாடவேளைகள்…

Read More