K. V

கோவையில் தேர்தல் செலவு ரூ.30 கோடி…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்தல் பேப்பர்கள் பெறப்பட்டது. இது தவிர பல்வேறு பொருட்கள், விழிப்புணர்வுக்கான பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. மாவட்ட அளவில் 3540 ஓட்டு சாவடிகள் தயார் செய்யப்பட்டது. தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டது. அங்கே 300 கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. இரும்பு தடுப்புகள், கவுண்டிங் சென்டர் வளாகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஸ்ட்ராங்…

Read More

எஸ்.பி வேலுமணிக்கு இறங்கு முகம்… செ. ம வேலுசாமி குரூப் வசம் அதிமுக…

கோவை மாவட்ட அதிமுகவில் கடந்த 15 ஆண்டாக எஸ்.பி வேலுமணியின் ஆதிக்கம் தான் இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டில் விபத்து சம்பவத்தை தொடர்ந்து அப்போது கோவை மாநகராட்சியின் மேயராக இருந்த செ.ம வேலுச்சாமியின் பதவி பறிக்கப்பட்டது. சீனியரான செ.ம வேலுச்சாமி இரு முறை அமைச்சராக இருந்தவர். தனக்கு பதவி பறிபோன பின்னர் செ.ம வேலுச்சாமியின் அரசியல் செல்வாக்கு சரிந்தது. இவரின் ஜூனியராக இருந்த எஸ்.பி வேலுமணி கட்சியை தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தார். கட்சி விசுவாசத்தில் தீவிரமாக…

Read More

கோவையில் நடைபாதை வியாபாரிகள் மடியேந்தி போராட்டம்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட சாலையோர வியாபார கடை வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கடந்த சில ஆண்டாக சாலையோர வியாபாரிகளுக்கான நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. மத்திய அரசு வழங்கியுள்ள நிதி எதுவும் சாலையோர வியாபாரிகளுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் பலமுறை கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். 50க்கும்…

Read More

கோவையில் சிறுவனை அடித்து கொலை செய்து புதைத்த கொடூரம்…

கோவை இருகூர் பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா . கூலி தொழிலாளி. இவரது மகன் தவிஸ் (13 ). இவர் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்த வந்தார் . கடந்த 15ம் தேதி இவர் மீன்பிடிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றார் .திரும்ப அவர் வீட்டுக்கு வரவில்லை. இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் சிறுவன் தொடர்பான பல்வேறு தகவல்கள் கிடைத்தது. சிறுவன் அதே…

Read More

டாஸ்மாக் கடையை மூட சொல்லுங்க… கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொது நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர் அதில் தடாகம் ரோடு கோவில் மேடு பஸ் ஸ்டாப் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது இதற்கு அருகே 3 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. சமீபத்தில் தமிழக அரசு பள்ளி வழிபாட்டுத்தலங்கள்…

Read More

கோவை குளக்கரையில் நிர்வாண நிலையில் ஆண் கொலை…!

கோவை சூலூர் ஆச்சான் குளம் கரை பகுதியில் இன்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது . நிர்வாண நிலையில் இந்த சடலம் குளக்கரையில் தூக்கி வீசப்பட்டிருந்தது. இது தொடர்பாக நீலாம்பூர் போலீசில் புகார் தரப்பட்டது .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த நபர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. அடிதடி மோதல் ஏற்பட்டதில் அந்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம். கொலை…

Read More

கோவையில் ஆன்லைன் டிரேடிங் ரூ.72 லட்சம் போச்சு…

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 50 வயது நபர் தனது தந்தையின் நிறுவனத்தில் மேலாளராக இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வாட்ஸ் அப் எண் ஒரு வாட்ஸ் அப் குழுவில் மர்ம நபர்களால் இணைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த வாட்ஸ் அப் குழுவில் முன்னணி நிறுவனங்களில் பங்குகளை வாங்குவது, விற்பது குறித்து பகிர்ந்து வந்துள்ளனர். அதன்பின் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், அவரிடம் முதலீடு செய்து ஆன்லைன் டிரேடிங் செய்து வந்தால் அதிக லாபம்…

Read More

கவுண்டம்பாளையம், குனியமுத்தூர் பகுதியில் நாளை மின்தடை…

கோவை மின் பகிர்மான வட்டம் செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை (18ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நல்லாம்பாளையம் ஹவுசிங் யூனிட், ஏஆர் நகர்,தாமரை நகர், ஓட்டுநர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர்,தயாள் வீதி, தீயணைப்பு பகுதி, நல்லாம்பாளையம்…

Read More

690 கிலோ குட்கா பதுக்கியவர் கைது

கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீசார் தெலுங்கு வீதியில் இன்று வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர், அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகம் அடைந்த போலீசார், அவரது இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்….

Read More

கோவை போலீசில் வாக்கி டாக்கி மக்கர்…!

கோவையில் மாநகரில் போலீஸ் கமிஷனர் தலைமையில் வடக்கு மற்றும் தெற்கு துணை கமிஷனர்கள், போக்குவரத்து துணை கமிஷனர், ஆயுதப்படை துணை கமிஷனர், தலைமையிடத்து துணை கமிஷனர், 18 உதவி கமிஷனர்கள் மற்றும் 54 இன்ஸ்பெக்டர்கள், 115 எஸ்ஐ.,க்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இதில் சைபர் கிரைம், பொருளாதார குற்றப்பிரிவு, லஞ்ச ஒழிப்பு துறை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போன்ற பல்வேறு தனிப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன்களை தவிர 20 சட்டம் ஒழுங்கு போலீஸ்…

Read More