K. V

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி வேன் டிரைவர் கைது…!

கோவையை சேர்ந்த 6 வயதான சிறுமி, தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியின் தந்தை உயிரிழந்ததால், தாயார் சிறுமியை தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், அந்த சிறுமியின் தாயார் கோவை வந்தார். பின்னர் அவர் தனது மகளை தன்னுடன் பெங்களூருவுக்கு அழைத்துச்சென்றார். அவர் தனது மகளை கவனித்தபோது அவர் மிகவும் சோர்வுடன் இருந்தார். உடனே அவர் தனது மகளிடம்…

Read More

கோவையில் தேர்தல் காலத்தில் 834 புகார் மனுக்கள் குவிப்பு

கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் வாரம் தோறும் திங்கட்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மாவட்ட அளவில் குறை தீர்ப்பு முகாம்கள் மூலமாக 17,000க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் இதுவரை 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் மார்ச், ஏப்ரல் மாதங்களில் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் பெறுவதற்காக பெட்டி வைக்கப்பட்டது. இந்த…

Read More

கனமழையால் கோவை ஏர்போர்ட் காம்பவுண்ட் இடிந்தது: விமான சேவை ரத்து

கோவை விமான நிலையம் பீளமேடு பகுதியில் அமைந்துள்ளது. இந்த வளாகம் 16,400 சதுர மீட்டர் பரப்பில் இருக்கிறது, 24 செக் இன் கவுண்டர்கள், 12 குடிவரவு கவுண்டர்கள், 6 செக்யூரிட்டி பகுதி வழியாக சோதனை நடக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கும் இங்கேயிருந்து விமானம் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலைய வளாகம் முழுவதும் 12 அடி உயரத்திற்கு மேல் காம்பவுண்ட் சுவர் அமைத்து பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று…

Read More

கோவை மாவட்டத்தில் 4.76 லட்சம் மகளிர் உரிமைத்தொகைக்காக காத்திருப்பு…

கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருந்தது. கடந்த 2023ம் ஆண்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 4,25,705 பயனாளிகளுக்கு ரூ.1000 வீதம் ஒரு வருடத்திற்கு 510 கோடியே 84 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மகளிருக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஜீலை மாதம் முதல் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களின் மூலம்பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மகளிர் உரிமைத்தொகை கோரிய…

Read More

கோவையில் மூடிய டாஸ்மாக் பாரில் சரக்கு: குடி பிரியர்களை விரட்டிய போலீசார்…!

கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் கடைகள் இருந்தது . இதில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பின்னர் மாநில அளவில் 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவதற்கு உத்தரவு வழங்கியது. கோவை மாவட்டத்தில் 69 டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டது. இதன்படி டாஸ்மாக் மதுபான கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை பத்துக்கு மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. டாஸ்மாக் மதுபான கடைகளை மூட 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.இந்த…

Read More

கோவையில் இளம்பெண்ணுடன் பழகிய வாலிபரை கடத்தி தாக்குதல்

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள எல்.ஜி.பி நகர் புதூர் வீதியை சேர்ந்தவர் ரித்தீஸ்வரன் (19). இவர், சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாலில் பணிபுரிந்து வருகிறார். அதே மாலில் சின்ன வேடம்பட்டியை சேர்ந்த 19 வயது இளம்பெண் வேலை செய்து வந்தார். அந்த இளம்பெண்ணுடன், ரித்தீஸ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரித்தீஸ்வரன் அந்த இளம்பெண்ணிடம் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பெற்றதாக தெரிகிறது. அதை திருப்பிக் கொடுப்பதில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த…

Read More

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஏஐ பாடத்திட்டம் அறிமுகம்…

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பாடத்திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ஆக்னடிக் செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்) போன்ற தொழில்நுட்பங்களை கொண்ட பாடங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலையில் 40 துறைகள் உள்ளன. பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் உட்பட 147 இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் இளங்கலை, முதுகலையில் பல்வேறு…

Read More

கோவை பஸ்ஸில் மயக்க சாக்லேட் கொடுத்து மூதாட்டியிடம் நகை பறிப்பு…

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி லட்சுமி (70) முன்னாள் அரசு ஊழியர். இவரது மகன் ராஜேஷ் (31) கோவை கணபதி பகுதியில் தங்கிருந்து தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 12ம் தேதி லட்சுமி தனது பேரனை பார்க்க ஈரோட்டில் இருந்து அரசு பஸ்சில் கோவைக்கு புறப்பட்டார். அவரது அருகில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். லட்சுமியுடன் பேச தொடங்கிய அவர், தனது பையில் இருந்து ஒரு சாக்லேட்டை…

Read More

கோவையில் குடிநீர் பஞ்சம் தடுக்க கலெக்டர் உத்தரவு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோக பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, ஊராட்சி உதவி இயக்குநர்கள் செந்தில்வேல், பேரூராட்சி உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம்,…

Read More

மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் தொடரும் குற்றங்கள்…

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு 26 கி.மீ தூரம் அமைந்துள்ளது. இந்த ரோட்டின் முதல் 4 இ.மீ தூரம் மதுக்கரை போலீஸ் எல்லைக்குள்ளும். 2 கி.மீ தூரம் போத்தனூர் போலீஸ் எல்லைக்குள்ளும், 7 கி.மீ தூரம் செட்டிபாளையம் போலீஸ் ஏரியாவிற்குள்ளும், 5 கி.மீ தூரம் சிங்காநல்லூர் போலீஸ் ஏரியாவிலும், 4 கி.மீ தூரம் சூலூர் போலீஸ் ஏரியாவிலும், 4 கி.மீ தூரம் பீளமேடு போலீஸ் ஏரியாவிற்குள்ளும் அமைந்துள்ளது. நகர், புறநகர் போலீசார் பைபாஸ் ரோட்டை பங்கு…

Read More