K. V

ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கோவையில் 10 புகார் பதிவு…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை பெற கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டது. இதில் 10 சட்டமன்ற தொகுதிகள் கண்காணிக்கப்படுகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படைகளை கண்டறிய ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் பிரிவும் துவக்கப்பட்டது. தினமும், ஒவ்வொரு வாகனமும் எந்த ஏரியா வழியாக சென்று வருகிறது என இதில் கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையில் 1950, 1800 425 0086 என்ற இலவச தொடர்பு எண், 0422 2300156, 0422 2300157 என்ற தொலைபேசி எண்கள்…

Read More

ஓட்டு போட ராட்சத பலூனில் விழிப்புணர்வு..

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஓட்டு போட வலியுறுத்தி மாவட்ட தேர்தல் பிரிவின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பவன்குமார் வாகனத்தை துவக்கி வைத்தார். இந்த வாகனம் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று, வாக்காளர் விழிப்புணர்வு குறித்த தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும். பார்முலா கார் ரேசர் நரேன் கார்த்திகேயன், கோவை…

Read More

வேட்பு மனுக்கள் நிராகரிக்க நிபந்தனைகள் விதித்து உத்தரவு

கோவை கோவை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் சட்ட மன்ற தொகுதிகள் வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் எந்தெந்த சட்ட மன்ற தொகுதிக்கு எங்கு வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரும் 30ம் தேதி முதல் ஏப்ரல் மே தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கவுள்ளது. அரசு விடுமுறை நாட்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியாது. அலுவலக நாட்களில் காலை 11 மணி…

Read More

கோவை மாவட்டத்தில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டால் கூடுதல் ஓட்டு மெஷின்கள் வரவழைத்த திட்டம்

கோவை மாவட்டத்தில் தொகுதிகளில் 3563 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மேட்டுப்பாளையம் தொகுதிக்கு 360 ஒட்டு சாவடிகள், சூலூரில் 385 ஓட்டு சாவடிகள். கவுண்டம்பாளையத்தில் 547 ஓட்டு சாவடிகள், கோவை வடக்கில் 339 ஒட்டு சாவடிகள், தொண்டாமுத்தூரில் 371 ஓட்டு சாவடிகள், கோவை தெற்கில் 233 ஓட்டு சாவடிகள், சிங்காநல்லூரில் 358 ஓட்டு சாவடிகள், கிணத்துக்கடவில் 377 ஓட்டு சாவடிகள், பொள்ளாச்சியில் 281, வால்பாறையில் 262 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. 10 சட்டமன்ற தொகுதிகளில் 8,391 ஓட்டு பதிவு…

Read More

கோவை அதிமுகவில் பாஜக சீட் ஒதுக்கீட்டால் சிக்கல்…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் கோவை வடக்கு பாஜகவுக்கு ஒதுக்கீட்டாங்களாம். கோவை தெற்கு தொகுதியின் பாஜகவின் சிட்டிங் எம்எல்ஏ வானதி சீனிவாசன் நின்னா தோத்து போயிருவாங்கன்னு ‘பீல்ட் சர்வே’ எடுத்தப்போ தெரிஞ்சு போச்சாம். பயந்து போன வானதி வடக்கு தொகுதி கேட்டு அடம் புடுச்சாராம் ஆனா தர மறுத்துட்டாங்களாம். மேலிடத்திற்கு தகவல் போயி கட்டாயம் வடக்கு தான் வேணும்னு கேட்டு வாங்கி அறிவிச்சாங்களாம். ஆனா பக்காவா இருந்த அதிமுக கூட்டணி சீட்டு மொத்தமாக விரிசல் ஆகி…

Read More

கோவையில் தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்த 3.10 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைப்பு

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் குலூர் உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை 4.55 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய சான்றுகளுடன் பணத்தை, பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான…

Read More

கோவையில் ஓட்டு சாவடிகளில் சாமியானா, மருத்துவ குழு…

ஓட்டு சாவடி பைல் படம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகள் தயார் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பவன்குமார், தேர்தல் பிரிவு அதிகாரிகள், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஓட்டு சாவடிகளை நல்ல முறையில் தயார் செய்ய வேண்டும். குடிநீர், கழிவறை, மின் விளக்கு, சாய்வு தளம் போன்றவை முறையாக…

Read More

கோவையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அதிரடி டெஸ்ட்…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த தொகுதிகளில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. இதற்கு துணை கலெக்டர் அந்தஸ்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ஆர்ஓ), தாசில்தார் அந்தஸ்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ஏஆர்ஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு தொகுதிக்கு ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட அளவில் 30 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் இவர்களிடம் தான் வேட்பாளர்கள் வேட்பு மனு…

Read More

கோவையில் தேர்தல் சோதனை: 10 நாளில் 4.51 கோடி ரூபாய் பறிமுதல்…!

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை 31.97 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை தெற்கு தொகுதியில் பறக்கும் படையினர் சோதனை செய்த போது பில் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 16 டேபிள் பேன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்…

Read More

ஓட்டு மெஷின்களை பத்திரமா கொண்டு போகணும்.. கோவையில் தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவு

கோவை ஆர்.எஸ் புரம் மாநகராட்சி கலை அரங்கத்தில் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பவன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் 366 மண்டல தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர். பயிற்சியின் போது அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு மண்டல அலுவலருக்கும் 10 முதல் 15 ஓட்டு சாவடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது….

Read More