K. V

பாறை, பள்ளம்… ரூ.30 கோடி மைல்கல் மேம்பாலம் பணி தாமதம்…

கோவை மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு பைபாஸ் ரோடு பணிகள் நடக்கிறது. 3 பேக்கேஜ்களாக பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32 கி.மீ தூரத்திற்கு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூரத்திற்கு 13 சிறுபாலங்களுடன் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது, பைபாஸ் ரோட்டின் துவக்கமான மைல்கல் சுகுணாபுரம் மஞ்சு பள்ள ஓடை மீது புதிதாக மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. சுமார்…

Read More

கை ஏந்தாமல் சைகை காட்டி அசத்தும் காக்கி சட்டை…!

கோவை ஆர்எஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (50). திருநங்கையான இவர் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஹோம் கார்டு என்ற ஊர்காவல் படை காவலராக பணி செய்து வருகிறார். வின்சென்ட் ரோடு, ராஜ வீதி பகுதியில் இவர் பணி செய்கிறார். இவர் கூறியதாவது: நான் தங்க நகை வியாபார குடும்பத்தை சேர்ந்தவர். என் 14 வயதில் ஏற்பட்ட உடல் மாற்றத்தினால் பிரேம் என்ற பெயருடன் இருந்த நான் திரு நங்கையாக மாறி விட்டேன். மும்பை சென்று சில காலம்…

Read More

பழங்கால பெண்களின் அழியாத ஆபரணம் ‘சுடுமண் காதணிகள்’…!

மின்னும் ஜிமிக்கி, கலர் கலராய் கம்மல் என இன்றைய இள சுகளின் காதுகளில் பேஷன் அணிகலன்கள் அலங்கரித்து வருகிறது. ஆதி காலத்தில், அதாவது 5ம் நூற்றாண்டு காலத் திலேயே கொங்கு வட்டார பெண்களின் காதுகளை கம்மல்கள் அலங்-கரித்துள்ளன. இவை சுடுமண் காதணிகள் என அழைக்கப்பட்டன. செம்மண்ணில் டிசைன் உருவாக்கி சுடவைத்து காதில் அணிவது அந்த காலத்து பேஷன், மீன், புலி, வில், வாள் என விதவிதமான வடி வங்களை சுடு மண்ணில் உருவாக்கி காதில் அணிந்து வலம்…

Read More

168 ஆண்டு பொக்கிஷம்… கோவையில் பஞ்சு குடோன் பொதுப்பணித்துறை அலுவலகம் ஆனது…!

கோவையில் பிரிட்டீஷ் அரசின் ஆட்சி அதிகாரம் 1850ம் ஆண்டில் உச்சத்தில் இருந்தது. அந்த கால கட்டத்தில், கோவையில் பிரமாண்ட அலுவலகங்களும், குடியிருப்புகளும் உருவானது. கோவையில் பஞ்சு உற்பத்தி அதிகமாக இருப்பதை அறிந்த பிரிட்டீசார், அதனை சேமித்து மில்களுக்கு அனுப்ப திட்டமிட்டனர். இதற்காக நகரின் மையப்பகுதியில் 4,500 சதுரடி பரப்பில் 50 அடி உயரத்தில் பிரமாண்டமான கட்டடத்தை கடந்த 1858ம் ஆண்டில் கட்டினர். கான்கிரீட் வசதி இல்லாத அந்த காலத்தில் தேக்கு மரத்தை வைத்து அதன் மீது கான்கிரீட்…

Read More

37 ஆயிரம் தட்கல் மின் இணைப்பு என்னாச்சு…விவசாயிகள் ஏமாற்றம்

கோவையில் தமிழக விவசாயிகள் சங்க (சாதி, மதம், கட்சி சார்பற்ற) மாதாந்திர செயற்குழு கூட்டம் பேரூர் ஆறுமுக கவுண்டனூரில் நேற்று நடந்தது. இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி, துணை தலைவர் ரங்கநாதன், செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் மற்றும் அவரது அமைச்சரவையினருக்கு, 234 எம்எல்ஏக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளின் தீர்க்கப்படாத பிரச்னைகளை விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திருத்தவும் ரத்து செய்யவும் எம்எல்ஏக்கள்,…

Read More

அதிக வெப்ப தாக்குதல் பயிர் காக்க கோவை கலெக்டர் யோசனை…!

கோவை மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதை தொடர்ந்து பயிர்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்ட அறிவிப்பில், “ அதிக வெப்பநிலை காரணமாக மக்காசோளம், சோளம், நிலக்கடலை, எள், பயறு வகைகள் போன்ற வேளாண் பயிர்கள், மலர்கள் மற்றும் பழ பயிர்களில் மலர் உதிர்வு, காய்பிடிப்பு குறைவு, வெயில் கருகல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு மற்றும்…

Read More

கோவையில் ‘டிஜி காப் வாட்ஸ் அப்’ சேவை பயன்படுத்த போலீசார் விழிப்புணர்வு…!

கோவை மாவட்ட போலீஸ் சார்பில் பொதுமக்கள் போலீசாரை எளிதில் அணுகும் வகையில், ‘கோவை டிஜி காப் என்ற புதிய வாட்ஸ் அப் சாட்போட் சேவை கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது . பொதுமக்கள் 98400 91100 என்ற எண்ணை தங்கள் செல்போனில் சேமித்து, வாட்ஸ்அப் மூலம் ஹேய் (hi) என ஒரு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் இந்த சேவையைப் பொதுமக்கள் பெறலாம். இதற்கென தனியாக ஆப் எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த வாட்ஸ்அப் சாட்போட்…

Read More

பல்லடம் அருகே கார் லாரி விபத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி…!

சேலம் கடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனபால் ( 37). இவர் மனைவி மேனகா (35 ). இவர்களது மகள் கனிஷ்கா (17). மகன் சுர்ஜித் (12 ). மேனகாவின் சகோதரர் மகள் சினேகா (23). இவர்கள் ஐந்து பேரும் இன்று மதியம் காரில் பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர் . அப்போது வி ஜே நிறுவனம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி அதிவேகமாக கட்டுப்பாட்டை இறந்து குரூஸர் கார் மீது மோதியது ….

Read More

கோவையில் பள்ளி வாகனங்கள் விரைவில் ஆய்வு…

கோவை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் அதிகளவு இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களின் பிரேக், பாதுகாப்பு கருவிகள், வேக கட்டுபாட்டு கருவிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அடிக்கடி சோதனை நடத்தப்படுவது வழக்கம். அடுத்த மாதம் பள்ளிகள் துவக்கப்படவுள்ள நிலையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடத்தப்படவில்லை. மாவட்ட அளவில் 1200க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. இதில் சில வாகனங்கள் பள்ளி வாகனங்கள் என்ற பெயரில் வேறு சில பயன்பாட்டில் இருக்கிறது. தகுதி இல்லாத நிலையில்,…

Read More

கோவையில் டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வு…

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்பட்டு வருகிறது. எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முது நிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு பொது பொறியியல் நுழைவுத் தேர்விலும் (சீட்டா) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகளை தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகள் கடந்த…

Read More