K. V

கோவை மாவட்டத்தில் ஓட்டு சாவடிகளுக்கு வீல் சேர் ரெடி. ..

கோவை மாவட்டத்தில் சட்ட மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம்.கவுண்டம்பாளையம்,சூலூர் உள்பட மொத்தம் 10 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளது. இதில் 3,563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. = மாவட்டத்தில் மொத்தம் 1,062 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் விருப்பம் இருந்தால் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்காளிக்கலாம் அல்லது வீட்டில் இருந்தப்படியே தபால் ஓட்டு போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்கு நேரில் வரும் முதியவர்கள், வயதானவர்கள் நடக்க முடியாதவர்கள்,…

Read More

நாளை வரை வாக்காளர்களாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் 26.98 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க ஆன்லைன், ஆப்லைன் மூலமாக பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டது. www.voters.eci.gov.in என்ற வெப்சைட்டில் ஆதாரங்களுடன் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எஸ்ஐஆர் என்ற சுருக்க திருத்த பணிகள் முடிந்த சுமார் 1.22 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர். கடந்த ஆண்டிலிருந்து இதுவரை 6.50 லட்சம் பேர் பட்டியலிருந்து நீக்கப்பட்டனர். மாவட்ட அளவில் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களும்,…

Read More

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேர் பழுது: தேரோட்டம் நடத்துவதில் சிக்கல்…!

தமிழகத்தின் காசி என்ற பெருமையைக் கொண்டது பேரூர் பட்டீஸ்வரர் கோயில். பிறவா பனை இரவா புளி, எலும்பு கல்லாவது, புழுக்காத சாணம், வலது காது மேல்நோக்கி இருப்பதுபோன்ற ஐந்து அதிசயங்கள் கொண்டது இந்த கோவில். இந்தக் கோயிலில் வழிபாடு செய்பவர்கள் பிறவி பயன் பெறுவார்கள் என்று ஐதீகம் உண்டு.இறந்தோருக்கு சடங்கு செய்ய பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கே வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்….

Read More

தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ் பி வேலுமணி போட்டி…!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் 23 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. இன்று மாலை அஷ்டமி துவங்கும் நிலையில் முன்கூட்டியே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் முன்னாள் அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் இடம் பெற்றுள்ளனர். எடப்பாடி தொகுதியில் எடப்பாடி யார் போட்டியிடுகிறார். கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் வழக்கம்போல் மண்ணின் மைந்தனான எஸ் பி வேலுமணி போட்டியிடப் போகிறார் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த முதல்…

Read More

கோவை மாவட்டத்தில் ‘ஆதிதிராவிடர் காலனி’ என ரசீது வழங்கிய அதிகாரிக்கு நோட்டீஸ்…!

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் எல்லைக்குட்பட்ட வடவள்ளி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி என்று குடிநீர் கட்டண ரசீது வழங்கியுள்ளது . வடவள்ளி செயல் அலுவலர் குடிநீர் கட்டணம் செலுத்திய பொதுமக்களுக்கு 23.03.2026 தேதியில் ரசீது வழங்கியுள்ளார். அதில் வேலப்பநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடர் காலனி என்று குறிப்பிட்டு ரசீது வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் வரப்பெற்ற தகவலின் பேரில், தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல ஆணையம் தாமே முன் வந்து இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. அரசாணை (நிலை)…

Read More

கோவையில் 20 கிலோ தங்க கட்டியை தடையின்றி அனுப்பிய தேர்தல் அதிகாரிகள்…!

கோவை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலையான கண்காணிப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வந்தது. அதனை சோதனை செய்து பார்த்தபோது தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் சந்தேகம் இருப்பதாக…

Read More

கோவையில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு…

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் ஓட்டு போடுவதை வலியுறுத்தும் வகையில் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ரங்கோலி மூலமாக தேர்தல் விழிப்புணர்வு பணி இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்தியா மேப் வடிவத்தில் வாக்காளர்கள் நின்று கட்டாயம்…

Read More

கோவை வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் ‘இன்ஜினியர் சந்திரசேகர்’ போட்டி…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இடையே இட ஒதுக்கீடு நிறைவு பெற்றுள்ளது. அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற , தொடர்ந்து மக்கள் பணியில் தீவிரம் காட்டி வரும் அதிமுக பிரமுகர்களை களம் இருக்க தலைமை முடிவு செய்துள்ளது. கோவை வடக்கு தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் பலர் சீட் விண்ணப்பம் வழங்கியிருந்தனர்.இதில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ‘இன்ஜினியர் சந்திரசேகர்’ தேர்வு பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

Read More

கோவை மாவட்டத்தில் வாக்காளர் புகார்களை பதிவு செய்ய வீடியோ குழு…

கோவை மாவட்டத்தில் வீடியோ கண்காணிப்பு குழுவிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இரண்டு குழுக்கள் என்ற விகிதத்தில் இந்த வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு அலுவலரும் ஒரு வீடியோ கிராபரும் இருப்பார். இந்த குழுவினர் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் பிரச்சார மேடை தெருமுனைப் பிரச்சாரம் உள்பட அனைத்து விதமான பிரச்சாரங்களையும் அங்கே நடக்கும் உரையாடல்களையும் வீடியோ பதிவு செய்வார்கள். தேவைப்பட்டால் அந்தப் பகுதியில் உள்ள வாக்காளர்களின் வாய்மொழி வாக்குமூலங்களையும் பதிவு செய்யவார்கள்….

Read More

கோவை மாவட்டத்தில் தேர்தல் ஊர்வலம் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு…

கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சியினருக்கு பல்வேறு கட்டுபாடுகள், விதிமுறைகள் வழங்கி தேர்தல் பிரிவினர் உத்தரவு வழங்கியுள்ளனர் இதில் அரசுக்கு சொந்தமான கட்டடங்கள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்கள் கூட்டுறவுத்துறை இடங்கள் போன்றவற்றில் அரசியல் தொடர்பான கூட்டங்கள் நடத்தக்கூடாது. கல்வித்துறை அலுவலகங்கள், மைதானங்கள், நிறுவனங்கள் எதிலும் அரசியல் நடவடிக்கை ஊர்வலங்கள் நடத்த அனுமதி கிடையாது. உள்ளூர் சட்டத்தை தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி எந்த அரசியல் கட்சியும் இயக்கமும் வேட்பாளர்களும் செய்யக்கூடாது. அப்படி அவர்கள் விளம்பரம் செய்திருந்தால் அவற்றை அகற்ற…

Read More