K. V

எப்எல் 2 பார் லைசன்ஸ் நிறுத்தம்….

கோவை மாவட்டத்தில் 295 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வந்தது. இவற்றில் 71 மதுபான கடைகள் பள்ளி, கல்வி நிறுவனங்கள் அருகே இருப்பதாக கூறி மூடப்பட்டது. இது தவிர எப்.எல்1 மற்றும் எப்.எல் 2, ஓட்டல் லாட்ஜ் உரிமம் பெற்ற 120க்கும் மேற்பட்ட தனியார் பார்கள் இயங்கி வருகிறது. மனமகிழ் மன்றம், ஓட்டல், லாட்ஜ்களில் செயல்படும் தனியார் பார்களை மாவட்ட கலால் துறை கண்காணித்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட அளவில் பல்வேறு இடங்களில் மனமகிழ் மன்றங்கள் பெயரில்…

Read More

கோவை ஜி.எச் அவலம்… ஸ்ட்ரக்சர், வீல் சேர் பரிதாபம்

கோவை அரச மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட சிகிச்சை பிரிவுகள் உள்ளது. தினமும் பல ஆயிரம் வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள் இந்த மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் சிகிச்சை முறையில் போதுமான மேம்பாடு செய்யப்படவில்லை. மருத்துவமனை வர்கத்தில் ஸ்டிரக்சர், வீல் சேர் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை . ஸ்டிரக்சரில் குளுக்கோஸ் ஸ்டாண்ட் மற்றும் ஆகசிஜன் சிலிண்டர் வைப்பதற்கு இடவசதி செய்யப்படவில்லை. மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை ஒரு வார்டில் இருந்து இன்னொரு வார்டுக்கு அழைத்துச் செல்வதற்கும் ஸ்கேனிங்…

Read More

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு…

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்களின் கூட்டு குழு கூட்ட முடிவின்படி வரும் 28 -ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், கோவை காட்டூர் பகுதியில் கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில், மாநில தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இதில், ஏடிபி மாவட்ட பொருளாளர் தங்கவேல், செயலாளர் சுதாகர், மாநில இணை செயலாளர் மாரிமுத்து, எல்பிஎப் மாவட்ட…

Read More

பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை…

கோவை பாரதியார் பல்கலையின் மாணவர் சேர்க்கை நடப்பாண்டில் அதிகரித்துள்ள நிலையில், 17 நாடுகளை சேர்ந்த 65 வெளிநாட்டு மாணவர்கள் பல்கலையில் படித்து வருகின்றனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தற்போது 38 துறைகள் செயல்பட்டு வருகின்றன. இத்துறைகளில் பல்வேறு இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் பல்வேறு படிப்புகளில் மொத்தம் 2,434 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில், 1,618 மாணவ, மாணவியர் பல்வேறு படிப்புகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். கடந்த கல்வியாண்டில் 1,472 மாணவர்கள் சேர்ந்திருந்த…

Read More

கனமழையால் கோவை குற்றாலம் மூடல்

தமிழக கடலோர பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து, மேற்குதொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கோவை குற்றால அருவியில் இன்று காலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து…

Read More

தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க லைசன்ஸ்… போலீஸ் அறிவிப்பு

கோவை மாநகரப் பகுதியில் வரும் நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு உரிமம் பெற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோவை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்பும் மனுதாரர்கள், வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவத்தில் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற…

Read More

ரெண்டு லாரிக்கு ஒரே நம்பர் பிளேட்…

கோவை மதுக்கரை அடுத்த நவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் லாரி வைத்துள்ளார். இவரது லாரியின் பதிவு எண் நம்பர் பிளேட் உடன் உக்கடம் லாரி பேட்டையில் ஒரு லாரி நின்று உள்ளது. இதை கந்தசாமியின் நண்பர் ஆறுச்சாமி என்பவர் பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் கந்தசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த கந்தசாமி, உக்கடம் லாரி பேட்டைக்கு சென்று பார்த்த போது அவரது நம்பர் பிளேட் பதிவு எண்ணுடன் அந்த லாரி நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. தனது வாகன…

Read More

தாய் கார் தராததால் மகன் தற்கொலை…!

கோவை வேலாயுதம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தீபா (46). இவர் மகன் ரவிவர்மா(22). பி.இ படித்து முடித்துள்ள ரவிவர்மா, நேற்று முன் தினம் காலை வெளியே செல்வதற்காக தனது தாயிடம் காரை கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாததாலும், காரை ஓட்ட போதுமான பயிற்சி மற்றும் அனுபவம் இல்லாத காரணத்தினாலும் காரை கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரவிவர்மா, தனது தாய் வெளியே சென்ற பின்னர் அவருக்கு செல்போனில் வீடியோ…

Read More

இன்ஸ்டாவில் பெண்ணுக்கு டார்ச்சர்… வாலிபருக்கு குத்து…!

கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் ஜெம் நகரில் ஒரு பியூட்டி பார்லர் உள்ளது. இங்கே நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த பினோ கோனாயக் (23) என்பவர் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர், ஆவாரம்பாளையம் ரோட்டில் நண்பர்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே மாநிலத்தை சேர்ந்தவர் பிரகாஷ்பாம் (22). இவர், வெங்கிட்டபுரத்தில் தங்கியிருந்து கோவையில் சமையல் தொழில் செய்து வருகிறார். பிரகாஷ் பாம்மின் உறவினர் பெண்ணுடன் பினோ கோனாயக் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பில் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில்…

Read More

பரிகாரம் செய்வதாக பழகி பலாத்காரம் : கோவை ஜோதிடர் மீது பெண் புகார்…!

திருப்பூரைச் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக என் பெற்றோர் பல்வேறு கோவில்களில் பரிகாரம் செய்தல், ஜாதகம் பார்த்தல் போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வந்தனர். எனக்கு திருமண வரண் கிடைக்காததால், எனது பெற்றோர் விரக்தியில் இருந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் மூலம் கோவை மாவட்டம்…

Read More