K. V

கோவை போலீசில் மாஸ்டர் கமாண்ட் கன்ட்ரோல் சென்டர்…!

கோவை மாவட்ட போலீஸ் சார்பில், பொதுமக்களின் பாதுகாப்பு, அவசரகால பதில் நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு சைபர் குற்ற கண்காணிப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான காவல் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல் அலுவலகத்தில் மாஸ்டர் கமாண்ட் மற்றும் கன்ட்ரோல் சென்டர் (MCCC) நிறுவப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி கோவை சரக…

Read More

கோவை வெஸ்டர்ன் ரிங் ரோடு பணியில் ராயல்டி ரூ.30 கோடி மோசடியா…?!

கோவை மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.80 கி.மீ தூரத்திற்கு மேற்கு புறவழிச்சாலை (வெஸ்டர்ன் ரிங் ரோடு) அமைக்கப்பட்டது. 250 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த பைபாஸ் ரோடு போடப்பட்டதில் விதிமுறை மீறல் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. ரோடு போடும் போது கிராவல் மண் எடுத்தால் ஒரு டன்னிற்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் என ராயல்டி தொகை (சீனரேஜ் கட்டணம்) செலுத்த வேண்டும். ஆனால் இந்த கட்டணத்தை கனிம வளம் மற்றும் புவியியல்…

Read More

பிஎல் படிச்ச ஜோசிய டாக்டருங்க… தவெக பெண் எம்எல்ஏ பேட்டி …

கோவை கவுண்டம்பாளையம் தவெக எம்எல்ஏ கனிமொழி நேற்று மருத்துவமனை மற்றும் பொது இடங்களில் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் நாய்கடி பிரச்னைக்கு, தெரு நாய்கள் பெருகி வருவதை குறைக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும், அரசு மருத்துவமனைகள் 80 சதவீதம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆட்கள் பற்றாக்குறை மற்றும் சில பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றார். மருத்துவம் படிக்காமல் டாக்டர் என தனது பெயருக்கு முன்னால் போட்டு கொண்டிருப்பது ஏன்? என நிருபர்கள் கேட்ட போது,…

Read More

கோவையில் பார்சலில் போதை, வெடி பொருட்கள் சப்ளை ஆகிறதா… போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை…!

கோவை மாநகர காவல் துறை சார்பாக, மாநகரப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு பார்சல் டெலிவரி செய்யும் நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கொரியர் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பார்சல்கள் பெறப்படும் மற்றும் சேமிக்கப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயமாக பொருத்தப்பட்டு, அதன் பதிவுகள் குறைந்தது 30 நாட்கள் பராமரிக்கப்பட…

Read More

‘ஷோபா மாடல்’ மீட்டிங்கில் தவெக பெண் எம்எல்ஏ அதிரடி…!

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தவெகவில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் கனிமொழி சந்தோஷ். இவர் சமீபத்தில் தனது வீட்டில் கவுண்டம்பாளையம் பகுதி பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் பொது இடங்களில் சுகாதார பணிகள் சிறப்பாக செய்ய வேண்டும். நோய் தொற்று இல்லாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். நகர்ப்பகுதி சுத்தமாக இருக்க வேண்டும் என உத்தரவுகளை வழங்கினார். அப்போது அவர் தனது வீட்டில் சொகுசு சோபாவில்…

Read More

கோவை மாநகராட்சியில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்…

கோவை மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை வழங்கினர். இவற்றில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் என ஐந்து…

Read More

கோவையில் நின்ற லாரியில் ஆண் சடலம்

கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஒரு லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியது . இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த டிரைவர்கள் லாரி மீது ஏறி பார்த்தனர் . அப்போது அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இது தொடர்பாக உக்கடம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நபருக்கு சுமார்…

Read More

கோவையில் ‘எப் எல் 2’ பார்கள் மூடலையே…கலெக்டரிடம் டாஸ்மாக் ஊழியர்கள் புகார்…

கோவை மாவட்டத்தில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று போராட்டம் நடத்தி புகார் மனு அளித்தனர். அதில் கோவை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத் தலங்கள் அருகே சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு செயல்படும் மதுபான கடைகள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது .இதன்படி கோவை மாவட்டத்தில் 69 மதுபான கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதே 500 மீட்டர் தூர எல்லைக்குள் எஃப் எல் 2 என்ற தனியார் மதுபான…

Read More

கோவையில் கள்ள நோட்டு கும்பல் கைது… 200 ரூபாய் அச்சடித்தது எப்படி…

கோவை மாநகரப் போலீசார் போதைப்பாக்கு மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று சுகுணாபுரம் பகுதியில் கரும்புக்கடை போலீசார் சோதனை செய்தபோது கரும்பு கடை பகுதியை சேர்ந்த பைசல் (37) சதாம் உசேன் (28) மற்றும் போத்தனூர் சேர்ந்து ஹக்கீம் (51) ஆகியோர் இரண்டு கிராம் மெத்தபட்டமின் போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் தீவிரமாக விசாரித்த போது இவர்கள் கள்ள ரூபாய் நோட்டு…

Read More

கோவையில் வீட்டு வேலைக்கு வருபவர்கள் குற்றவாளிகளா என கண்டறிய உத்தரவு…

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று மாநகரப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு டிரைவர் வீட்டு வேலை செய்யும் நபர்கள் மற்றும் செக்யூரிட்டி வேலை செய்யும் நபர்களை அனுப்பிவைக்கும் (Man Power Agency & Security) நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் கண்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்து தனியார் நிறுவனங்களும் அரசின் விதிமுறைகளின்படி முறையாக பதிவு செய்யப்பட்டு அதற்குரிய…

Read More