K. V

செந்தில் பாலாஜி ஜெயிப்பாரா…

jai .. . chief correspondent கோவை மாவட்டத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதியில் புளியகுளம், சவுரிபாளையம், மருதூர், ராமகிருஷ்ணாபுரம் , கணேசபுரம், ராமநாதபுரம் , காமராஜர் ரோடு, அனுப்பர்பாளையம் , ரங்கநாதபுரம், காந்திபுரம், சித்தாபுதூர், ராம் நகர் , என் ஹெச் ரோடு, இஸ்மாயில் வீதி, பெரிய கடைவீதி ,ஈஸ்வரன் கோயில் வீதி ,ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, ஒக்கலிகர் வீதி, ம ந க வீதி , பவள வீதி , குலாலர் வீதி , தெப்பக்குளம்…

Read More

கோவை மாவட்டத்தில் வரும் 12ம் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு மற்றும் கையேடு விநியோகம்…

கோவை மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 23ம் தேதி வாக்கு பதிவு நடக்கவுள்ளது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பூத் லெவல் ஆபீசர்கள் மூலமாக வீடு வீடாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் போட்டோவுடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்பட்டது. இப்போது போட்டோ பூத் சிலிப் கிடையாது. அதற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு போட்டோ இன்றி வழங்கப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகளுக்கான வாக்காளர் தகவல் சீட்டு…

Read More

வாக்குச்சாவடி பாதுகாப்பில் உஷார்… கோவை போலீசாருக்கு பயிற்சி வகுப்பில் உத்தரவு

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்களில் ஒட்டு சாவடி பணியில் உள்ள போலீசாருக்கான ஆலோசனை, பயிற்சி கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் மற்றும் பல்வேறு தேர்தல் பிரிவு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 500 க்கும் மேற்பட்ட தேர்தல் பணி போலீசார் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாநகர், மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஓட்டு சாவடிக்கும் ஒரு போலீசார் பணியில் இருப்பார்கள்….

Read More

தேர்தல் முறைகேடு வழக்குகளை பதிவு செய்யாத கோவை போலீசார்…!

Jayachandran – chief correspondent.. கோவை நகர், புறநகரில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது தவிர நகர், புறநகர் போலீசாரும் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் 15ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இருந்து இதுவரை சுமார் 8 கோடி ரூபாய்க்கு பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கட்சி சார்பில் பதுக்கிய அண்டா, குண்டா,…

Read More

ஓடியாடி உழைப்பது இன்ஜினியர் சந்திரசேகர்… ஜெயிக்க போவது வானதி சீனிவாசன்…

கோவை மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் அதிகமாக வாழும் பகுதி கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி. சங்கனூர் ,ரத்தினபுரி, கணபதி, மணியகாரன் பாளையம், கே கே புதூர், சாய்பாபா காலனி, நல்லாம்பாளையம் ,சீரநாயக்கன்பாளையம் ,வடவள்ளி, முல்லை நகர், மருதமலை, கலிக்கநாயக்கன்பாளையம், பொம்மணாம் பாளையம் போன்ற பகுதிகள் இந்த தொகுதியில் இருக்கிறது. 297 ஓட்டு சாவடி, சுமார் மூன்று லட்சம் வாக்காளர்கள் கொண்டது இந்த தொகுதி. இங்கே எந்த கட்சியினரும் எந்த வேலையும் செய்யவில்லை.அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணி…

Read More

கோவை மாவட்டத்தில் 100% ஓட்டுப்பதிவு சாத்தியமா…!?

கோவை மாவட்டத்தில் 27.12 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. வரும் 3ம் தேதி மாவட்டத்தில் ஓட்டு பதிவு நடக்க உள்ளது. தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் வாக்குப்பதிவு என்பதை வலியுறுத்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறது. மாவட்ட அளவில் ஹாரன் பில் பறவை தோற்றத்தில் ‘ஓட்டு வீரன்’ என்ற லோகோ உருவாக்கப்பட்டு பொது இடங்கள், கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் எஸ்ஐஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்கத்…

Read More

கோவை மாவட்டத்தில் 130 பேர் வேட்பு மனு தாக்கல்

கோவை மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் முதல் நாளான 30ம் தேதி 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடந்த 2ம் தேதி…

Read More

கோவை மாவட்டத்தில் அதிக தொகை ஷேர் செய்த வங்கி கணக்குகள் பட்டியல் தயார்…

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவு சார்பில் ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் கமிஷன் உத்தரவின்படி மாவட்ட அளவில் முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் மூலமாக கடந்த ஆறு மாதங்களில் அதிக அளவு பணம் ஷேர் செய்யப்பட்ட வங்கி அக்கவுண்ட் மற்றும் அதிக நபர்களுக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்ட அக்கவுண்ட் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று தனிநபர் வங்கி கணக்கு…

Read More

கோவையில் திருடர்களுக்கு பயந்து 247 கிராம் தங்க நகைகளை பேக்கில் கொண்டு வந்த போது மடக்கி பிடித்த பறக்கும் படை…!

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர் . மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 15ம் தேதி முதல் இன்று வரை 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய சான்றுகளுடன் பணத்தை, பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய்க்கு…

Read More

வெள்ளிங்கிரி மலையில் டிரைவர் சாவு

சென்னை பரங்கிமலை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (35). வேன் டிரைவரான இவர் தனது நண்பர்கள் சிலருடன் நேற்று கோவை வந்தார். இரவு இவர் பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறினார். இரண்டாவது மலை ஏறிய போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதத்தில் வெள்ளிங்கிரி மலை ஏறிய சிலருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பதாக தெரிகிறது. இதுவரை ஐந்து பேர் உயிரிழந்து விட்டனர். மலையேறும்…

Read More