கோவையில் ‘எப் எல் 2’ பார்கள் மூடலையே…கலெக்டரிடம் டாஸ்மாக் ஊழியர்கள் புகார்…

கோவை மாவட்டத்தில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று போராட்டம் நடத்தி புகார் மனு அளித்தனர்.

அதில் கோவை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத் தலங்கள் அருகே சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு செயல்படும் மதுபான கடைகள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது .இதன்படி கோவை மாவட்டத்தில் 69 மதுபான கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் அதே 500 மீட்டர் தூர எல்லைக்குள் எஃப் எல் 2 என்ற தனியார் மதுபான பார்கள் செயல்பட்டு வருகிறது . இந்த மதுபான பார்கள் மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . மாவட்ட அளவில் வேலாண்டிபாளையம் புளியகுளம் சுந்தராபுரம் பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் 28 எப்எல் 2 மதுபான பார்கள் செயல்படுகிறது .

இவற்றை உடனடியாக முடிவதற்கு மாவட்ட நிர்வாகம் கலால் துறை டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு நியாயம் தனியார் பார்களுக்கு வேறு ஒரு நியாயம் என்பது சரியல்ல. சரி சமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *