K. V

பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ம் தேதி கோவை வருகை…!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ம் தேதி கோவை வருகிறார். கோவை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பீளமேடு கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. பொதுக் கூட்டத்தில் கோவை மற்றும் அவிநாசி தொகுதியை சேர்ந்த இரண்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் மற்றும் 9 அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பேச உள்ளார்….

Read More

கோவை டாஸ்மாக் பாரில் ஊழியர் அடித்து கொலை: 2 பேர் கைது…!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (60). இவர் கோவை வெரட்டி ஹால் ரோடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை செய்து வந்தார். இன்று மதியம் அவர் கடையில் பணியில் இருந்தார் . அப்போது கோவை இடையர் வீதி பகுதியை சேர்ந்த காய்கறி கடை வியாபாரி பிரபு (28) மற்றும் தெலுங்கு வீதியை சேர்ந்த மனோஜ் (27) ஆகியோர் மது குடிக்க வந்தனர். நெருங்கிய நண்பர்கள் ஆன இவர்கள் அடிக்கடி இங்கே மது குடப்பதாக…

Read More

அண்ணாமலை பீஸ் போன பல்பு; செந்தில் பாலாஜி அதிரடி பேட்டி…!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று உக்கடம் கெம்பட்டி காலனி, கோழிக்கடைசந்து, நாடார் வீதி, நாட்டை சந்து, பாளையம் தோட்டம், திருவள்ளுவர் நகர், உப்புமண்டி, பாரதி நகர், எல்ஜி தோட்டம், முத்து மாரியம்மன் கோயில் வீதி, பட்டக்கார அய்யாசாமி வீதி, தர்மராஜா கோயில் வீதி, பஜனை கோயில் வீதி, முனியப்பன் கோயில் சந்து, செட்டிவீதி, செல்வபுரம், காட்டேரி தோட்டம், சாமி அய்யர் புது வீதி, பாலாஜி அவென்யூ, அசோக் நகர், சாவித்ரி…

Read More

கோவையில் ‘பேலட் பேப்பர்’ அச்சடிக்கும் பணி தீவிரம்

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் யார் என கடந்த 9ம் தேதி மதியம் 3 மணிக்கு இறுதி செய்யப்பட்டது. மாவட்ட அளவில் 183 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய ஓட்டு மெசின் தாள் (பேலட் பேப்பர்) அச்சடிக்க ஆர்டர் தரப்பட்டுள்ளது. ஒரிரு நாளில் இந்த பேலட் பேப்பர்…

Read More

27.44 லட்சம் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு விநியோகம் துவக்கம்…!

கோவை மாவட்டத்தில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வரும் 23ம் தேதி வாக்கு பதிவு நடக்கவுள்ளது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பூத் லெவல் ஆபீசர்கள் மூலமாக வீடு வீடாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் போட்டோவுடன் கூடிய ‘பூத் சிலிப்’ வழங்கப்பட்டது. இப்போது போட்டோ பூத் சிலிப் கிடையாது. அதற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு போட்டோ இன்றி வழங்கப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகளுக்கான வாக்காளர் தகவல் சீட்டு…

Read More

நாளை முதல் 85 வயதானவர்கள் தபால் ஓட்டு போடலாம்…

கோவை மாவட்டத்தில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில் வீடுகளுக்கு சென்று தபால் ஒட்டு பதிவு செய்ய தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே படிவம் 12டீ விண்ணப்பம் மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதியில் 7583 மூத்த வாக்காளர்கள் (85 வயது கடந்தவர்கள்), 1692 மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. படிவத்தில் விண்ணப்பிக்காதவர்கள் தபால் வாக்களிக்க இயலாது. பூர்த்தி செய்த வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரிக்க வாக்கு பதிவு அலுவலர்…

Read More

கோவையில் ஓட்டு சாவடிகளுக்கு அழியாத மை பாட்டில்கள் வந்தது

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் ஓட்டு சாவடிகளில் பயன்படுத்தும் ஆவணங்களை அனுப்பி வைத்து வருகிறது . கடந்த சில நாட்களில் 60க்கும் மேற்பட்ட ஓட்டு சாவடி ஆவணங்கள் வந்து சேர்ந்தது . தற்போது மைசூரில் இருந்து அழியாத மை பெறப்பட்டிருக்கிறது. இந்த மை பாட்டில்கள் கோவை மேட்டுப்பாளையம் ,கவுண்டம்பாளையம், சூலூர், சிங்காநல்லூர் ,கோவை தெற்கு, கோவை வடக்கு, கிணத்துக்கடவு ,தொண்டாமுத்தூர் பொள்ளாச்சி, வால்பாறை…

Read More

ஜனநாயகன் படம் வெளியானதுக்கு எங்களுக்கு சம்பந்தமில்லை…அண்ணாமலை பேட்டி

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது; தமிழகம் முழுவதும் கஞ்சா பழக்க வழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை மக்கள் வைக்கிறார்கள். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சரியாக நடக்க வேண்டும். மக்கள் நன்றாக கவனித்து பார்க்கிறார்கள். திருமாவளவன் பொறுமையாக…

Read More

ஓட்டு போட மாட்டோம் என கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

கோவையில் கணபதி மாநகரை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 35 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியது. அங்கு இருந்த நிலத்தை கையகப்படுத்தி அங்கு உயர், மத்திய மற்றும் குறைந்த வருவாய் பிரிவுகளில் 1,005 வீடுகளை கட்டியது. அதற்கு உரிய தொகை உரிமையாளர்களிடம் பெறப்பட்டது. ஆனால் அதற்கான பத்திரங்களையும், தடையில்லா சான்றையும் இதுவரை வழங்கவில்லை. இதனால் கணபதி மாநகர் வீட்டு உரிமையாளர்கள் கூட்டுக்குழு தொடங்கி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கணபதி மாநகர் வீட்டு உரிமையாளர்கள் கூட்டுக்குழுவினர் இன்று காலை தங்கள்…

Read More

கோவை மாவட்டத்தில் 183 வேட்பாளர்கள் போட்டி, 20 பேர் வாபஸ்…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில் மேட்டுப்பாளையத்தில் 48 பேரும், சூலூரில் 32 பேரும், கவுண்டம்பாளையத்தில் 33 பேரும், கோவை வடக்கில் 49 பேரும், தொண்டாமுத்தூரில் உச்சபட்சமாக 77 பேரும், கோவை தெற்கில் 61 பேரும், சிங்காநல்லூரில் 44 பேரும், கிணத்துக்கடவில் 43 பேரும், பொள்ளாச்சியில் 34 பேரும், வால்பாறையில் 29 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட அளவில் 450 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில்…

Read More