K. V

கோவை அப்பார்ட்மெண்டில் கை கால் கட்டி போட்டு மூதாட்டி கொலை..!

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு பிரபல அப்பார்ட்மெண்டில் இன்று காலை மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது . இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த வீட்டில் ஆயுர்வேத டாக்டர் ராம்குமார் குட்டி என்பவரின் தாய் கஸ்தூரி (80) கை கால் கயிறால் கட்டி போட்ட நிலையில் இறந்து கிடந்தார் . அவரது கழுத்து பகுதியில் காயம் இருந்தது . வாயில் துணி வைத்து அடைத்து…

Read More

கோவையில் ஜாலி வாக்கிங் வந்த யானை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் தென்றல் நகர் பகுதியில் இன்று இரவு பெண் யானை ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. குடியிருப்பு பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு தேடி இந்த யானை சுற்றியது. வீட்டின் முன்பு இருந்த வாழைமரம் மற்றும் தென்னை மரத்தின் மட்டைகளை சாய்த்து ருசித்து சாப்பிட்டது . பொதுமக்கள் சத்தம் போட்டு விரட்டிய போது அதை கண்டு கண்டுகொள்ளாமல் யானை மெதுவாக வீதிகளில் சுற்றிக் கொண்டிருந்தது. இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு அந்தப் பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்….

Read More

கோவையில் குப்பைக்கு போன 5.5 டன் குட்கா..!

கோவை காட்டூர் சாய்பாபா காலனி செல்வபுரம் துடியலூர் பீளமேடு கவுண்டம்பாளையம் கரும்பு கடை போலீஸ் ஸ்டேஷன்களில் கடந்த சில மாதங்களில் குட்கா பான்பராக் கணேஷ் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 43 வழக்குகளில் 5.5 டன் எடையிலான போதைப்பொருட்கள் கோவை மாநகர போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்த போதை பொருட்கள் அனைத்தும் இன்று வெள்ளலூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் குழி தோண்டி தீ வைத்து அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 55 லட்சம்…

Read More

கோவையில் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற வழிப்பறி திருடன் மீது துப்பாக்கி சூடு..!

பாலமுருகன். . கோவை புறநகர் பகுதியில் கல்லூரி மாணவர்களை மிரட்டி பல்வேறு பகுதியில் பணம் மற்றும் பல்வேறு பொருட்களை வாலிபர் ஒருவர் பறித்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சூலூர் கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழிப்பறியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (26) என்பவர் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் மீது 30க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில்…

Read More

கோவையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு :மர வியாபாரி கைது

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (45). மர வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். இந்த வாடகை வீட்டில் வசித்த 15 வயது மாணவி ரவிக்குமார் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ரவிக்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக நேற்று மாணவி தனது குடும்பத்தினரிடம் இந்த விவரங்களை கூறி அழுதுள்ளார். இது…

Read More

கோவை மாநகரில் தடையின்றி குடிநீர் வரும்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்ட அறிவிப்பு; கோவை மாநகராட்சி பகுதிகளில் சிறுவாணி, பில்லூர் 1,2,3 ஆழியாறு ,பவானி குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் பெறப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது . மாநகர் முழுவதும் தடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் மூலமாக 1.32 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மாநகர் முழுவதும் 35 கோடி லிட்டருக்கு அதிகமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிறுவாணி அணையில் இருந்து…

Read More

கோவை மதுக்கரை பைபாஸ் ரோடு பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து.. !

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு கற்பகம் கல்லூரி அருகே சரவணகுமார் என்பவருக்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இன்று மதியம் அந்த குடோனில் திடீரென தீ பிடித்தது. தீ வேகமாக பரவிய நிலையில் அந்த வளாகம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையம் மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும்…

Read More

கோவையில் குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய இரண்டு பேர் கைது

லஞ்சம் வாங்கி கைதான மோகன் கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பு பெற லஞ்சம் அதிகளவு பெறப்பட்டு வருகிறது. மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் விண்ணப்பித்தால் அதற்கு அதிகாரிகள் , குடிநீர் வழங்கல் பிரிவினர் பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தொடர்ந்து புகார் சென்றது . இன்று காந்தி பார்க் பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்பு…

Read More

கோவையில் எஸ் பி வேலுமணிக்கு எதிராக போஸ்டர்..!

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மீண்டும் அதிமுக ஆட்சி, மக்கள் எதிர்பார்ப்பு என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தனது ஆதரவாளர் மூலமாக இந்த போஸ்டர் ஒட்டி இருப்பதாக தெரிகிறது. இதற்கு போட்டியாக திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி நம்ம தான் ஜெயிக்கிறோம் நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம் என பல இடங்களில் போஸ்டர் ஒட்டி இருக்கிறார். அதிமுக மற்றும் திமுக இடையே இந்த போட்டி போஸ்டர்கள் பரபரப்பு…

Read More

கோவையில் ஓடும் பஸ்ஸில் 5.20 லட்ச ரூபாய் திருட்டு..

கோவை கணபதி நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி (40). இவர் அதே பகுதியில் சொந்தமாக வீடு கட்டிக் கொண்டிருந்தார் ‌ . வீடு கட்டுவதற்கு பணம் தேவைப்பட்ட நிலையில் தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் சென்று மனைவியின் தங்க நகைகளை அடமானம் வைத்து 5.20 லட்ச ரூபாய் வாங்கினார் . அந்த பணத்துடன் சிவகங்கை மாவட்டத்திலிருந்து இரவு நேரத்தில் ஆம்னி பஸ்ஸில் வந்து கொண்டிருந்தார். பஸ்ஸின் மேல் பகுதியில் இருந்த ரேக்கில் பெட்டியை வைத்து கீழே…

Read More