ரேஷன் அரிசி தரமா…? குத்தூசி போட்டு சோதித்த கலெக்டர்..!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தமிழக நுகர் பொருள் வாணிப கழக குடோனில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று ஆய்வு நடத்தினார் . இதில் ரேஷன் அரிசி, பருப்பு ,சர்க்கரை ,பாமாயில் தரம் தொடர்பாக பரிசோதனை செய்தார். தற்போது கடும் குளிர்காலமாக இருப்பதால் உணவுப் பொருட்கள் தரமாக இருக்கிறதா, கெட்டுப் போய் உள்ளதா, செல் பூச்சி தாக்குதல் இருக்கிறதா , உணவுப் பொருள்கள் சரியான முறையில் கையாள்கிறார்களா என கலெக்டர் ஆய்வு செய்தார். கோவை மாவட்டத்தில்…

Read More

ஊதியத்திற்கு போராடிய சத்துணவு ஊழியர்கள் உணவுக்கு வாடிய மாணவர்கள்..!

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கோவை மாவட்ட கிளை சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று துவங்கியது. இதில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஐந்து ஆண்டு பணி முடித்த சமையல் உதவியாளர்களுக்கு உடனடியாக சமையலராக பதவி உயர்வு தர வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ஒன்பதாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் . காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். கேஸ் சிலிண்டரை நேரடியாக…

Read More

பில்லூர் குழாய் டுமீலு.. ரோடு டமாரு..

கோவை மேட்டுப்பாளையம் ரோடு பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரம் பகுதியில் பிரதான பில்லூர் குடிநீர் குழாயில் இன்று உடைப்பு ஏற்பட்டது. மெயின் ரோட்டில் 1500 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட பைப் உடைந்ததால் அந்தப் பகுதி ரோடு பள்ளமாக மாறியது. மேலும் குடிநீர் வீணாகி ரோட்டில் ஆறாக ஓடியது. இது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் குடிநீர் விநியோகத்தை நிறுத்தினர். குழாய் சீரமைப்பு பணிகள் உடனடியாக துவக்கப்பட்டது. குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில்…

Read More

பத்திரம் பதிவுக்கு பணம் குவியுது..

கோவை வடக்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இன்று அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் பதிவு செய்ய 4 மாதமாக அனுமதி வழங்கவில்லை. பத்திரப்பதிவில் லஞ்சம் கேட்டு நெருக்கடி தரும் வகையில் இப்படி செய்வதாக ஓய்வு பெற்றவர்கள் புகார் அளித்தனர். அரசு போக்குவரத்துக் கழகத்தில் தடையின்மை சான்று கேட்கிறார்கள். பணி ஓய்வு பெற்ற பின்னர் எப்படி அரசு துறையில் தடையின்மை சான்று தருவார்கள். இந்தத் துறையில்…

Read More

பாறை வெடியால் பதறுது இரும்பறை..!

மேட்டுப்பாளையம் இரும்பறை பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் மற்றும் அந்த பகுதி மக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில், “மேட்டுப்பாளையம் இரும்பறை ஓதிமலை செல்லும் வழியில் இரண்டு கல் குவாரி இருக்கிறது. இந்த கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கற்கள் வெடி வைத்து எடுக்கப்படுகிறது. நீர் பாதை, வண்டிப்பாதை மறிக்கப்பட்டு கற்களை எடுத்து வருகிறார்கள். பொதுமக்களின் வீடுகளுக்கு குறைந்த பட்ச பாதுகாப்பு , தூர இடைவெளி கடை பிடிக்கவில்லை. மிக குறைந்த…

Read More

தரையில் படுத்து தர்ணா போராட்டம்

கோவில் பாளையம் கொண்டையம் பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்( 70 ) என்பவர் அளித்த புகார் மனுவில்எனக்கு சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனத்தினர் போலி ஆவணம் தயாரித்து அபகரித்து விட்டனர். இது தொடர்பாக பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. போலீசில் புகார் அளித்தோம் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் கலெக்டரை சந்தித்து புகார் தெரிவிக்கலாம் என வந்தேன். பல லட்ச ரூபாய் மதிப்புள்ள எனது நிலத்தை எனக்கு மீட்டு தர…

Read More

மனுக்களுக்கு மலர்வளையம் வைத்ததால் பரபரப்பு..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டம் நடத்தப்பட்டது .இதில் கோவை வடக்கு தெற்கு மதுக்கரை சூலூர் மற்றும் பேரூர் தாலுகா எல்லைப் பகுதியில் வசித்து வரும் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச மனை பட்டா கேட்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மனு கொடுத்து வரப்பட்டது . ஆனால் இந்த மனுக்களுக்கு எந்த தீர்வும்…

Read More

கோவை துணிக்கடை வளாகத்தில் கஞ்சா செடி

கோவை காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் பிரபலமான துணிக்கடையின் வாகன நிறுத்துமிடம் இருக்கிறது. இங்கே 3 அடி உயரத்தில் கஞ்சா செடி இருந்தது. இது தொடர்பாக கஞ்சா செடியின் போட்டோவுடன் தகவல் பரவியது. ரத்தினபுரி போலீசார் அங்கே சென்று விசாரித்தனர். நன்கு செழிப்பாக வளர்ந்த கஞ்சா செடியை வேறுடன் பிடுங்கி நேற்று அகற்றினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா செடி விவகாரம் சமூக வலை தளங்களில் வீடியோ பதிவுடன் வைரலாகியது. செடியை…

Read More

இன்ஜினியர் சந்திரசேகர் தலைமையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா..!

கோவை வடவள்ளி வி என் ஆர் நகர் , பொம்மனாம்பாளையம், நவாவூர் பிரிவு உள்பட பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆர் 109 பிறந்தநாள் விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது. மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். அவிநாசி ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் செம வேலுச்சாமி, எம்எல் ஏ அம்மன் அர்ஜுனன் , கேஆர்…

Read More

செட்டிபாளையத்தில் முறைகேடாக மது விற்ற2 பேர் கைது

திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவை செட்டிபாளையம் மதுக்கரை நிலம்பூர் பைபாஸ் ரோடு பகுதியில் உள்ளடாஸ்மாக் கடை அருகே முட்புதர் மறைவில் மது பாட்டில்களை பதுக்கி வைத்துவிற்பனை செய்வதாக புகார் வந்தது. கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் செட்டிபாளையம் போலீசார் சோதனை நடத்தினர். மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்த தேவகோட்டையை சேர்ந்த பிரபு, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.இவர்களிடம்…

Read More