கோவையில் பைக் திருடர்கள் 6 பேர் கைது..! சைடு லாக் உடைத்து கைவரிசை

கோவை நீலிக்கோணம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டு போனது சம்பந்தமாக சிங்காநல்லூர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருட்டு போன வாகனத்தை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இதில் தூத்துக்குடி சாத்தான் குளத்தை பூர்வீகமாக கொண்ட வெள்ளக்கிணறு பாரதி நகரில் வசிக்கும் தங்க இசக்கி (21), இசக்கி முத்து (22), திருச்சி அரிய மங்கலத்தை சேர்ந்த தீபக் (20), சின்ன வேடம்பட்டியை சேர்ந்த மனோஜ் (23) ஆகியோர் ஈடுபட்டது கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கண்டறியப்பட்டது. 4…

Read More

கஞ்சா வியாபாரிக்கு 5 ஆண்டு சிறை

திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் பவானி நகர் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பையுடன் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த அறிவுச்செல்வம் (43) என்பது தெரியவந்தது. அவர் வைத்திருந்த பையைச் சோதனை செய்ததில் 5 கிலோ 250 கிராம் கஞ்சா…

Read More

கோவை மேற்கு ரிங் ரோடு: முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்..

கோவை மதுக்கரை பகுதியில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கு ரிங் ரோடு (Coimbatore Western Ring road) அமைக்கும் பணி கடந்த 2024ம் ஆண்டு துவக்கப்பட்டது. மூன்று பேக்கேஜ் முறையில் பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழி பாதையாக ரோடு போடும் பணி நடத்தப்பட்டது. 250 கோடி ரூபாய் மதிப்பில் நடத்தப்பட்டு வந்த பணி தற்போது நிறைவு…

Read More

கோவை உக்கடம் புதிய பஸ் ஸ்டாண்ட்: தமிழக முதல்வர் திறந்தார்

கோவை உக்கடம் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வந்தது. இங்கே உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கப்பட்ட நிலையில் பஸ் ஸ்டாண்ட் பகுதி இடிக்கப்பட்டது. இதற்கு பதிலாக செல்வபுரம் பைபாஸ் ரோடு பகுதியில் இருந்த மீன் மார்க்கெட் மற்றும் குடியிருப்பு பகுதி இடிக்கப்பட்டு 13 கோடி ரூபாய் செலவில் உக்கடம் முனையம் 1 என்ற பெயரில் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி நடந்தது. கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் செல்லும் வகையில் டவுன்…

Read More

50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பணம் இருந்தால் பறிமுதல்.. தேர்தல் கமிஷன் உத்தரவு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு குழு (மானிட்டரிங் கமிட்டி) அதிகாரிகளின் கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், வருவாய்த்துறை, வணிக வரி, உள்ளாட்சி, வருமான வரி உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் தேதி அறிவித்ததும் நடைமுறைக்கு வந்து விடும். எனவே கண்காணிப்பு அதிகாரிகள் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படை, வீடியோ கண்காணிப்பு படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்….

Read More

கோவையில் மசாஜ் சென்டரில் நள்ளிரவில் தீ

கோவை சுங்கம் பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வந்தது. இன்று நள்ளிரவு இந்த மசாஜ் சென்டரில் திடீரென தீப்பிடித்தது. தீ பக்கத்தில் உள்ள கட்டடங்களுக்கு பரவும் நிலைமை இருந்தது. இது தொடர்பாக கோவை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின் ஒயர் பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மசாஜ் சென்டரில் இருந்த பொருட்கள் படுக்கை மற்றும் பல்வேறு…

Read More

கோவை மேற்கு பைபாஸ் ரோடு நாளை தமிழக முதல்வர் திறக்கிறார்..!

கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கு பைபாஸ் ரோடு (Coimbatore Western Ring road) அமைக்கும் பணி கடந்த 2024ம் ஆண்டு துவக்கப்பட்டது. மூன்று பேக்கேஜ் முறையில் பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழி பாதையாக ரோடு போடும் பணி நடத்தப்பட்டது. 250 கோடி ரூபாய் மதிப்பில் நடத்தப்பட்டு வந்த பணி தற்போது…

Read More

சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் இந்தி வார்த்தைகள் அழிப்பு

கோவை சிங்காநல்லூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் பொதுமக்கள், பயணிகள் தெரிந்து கொள்ள வசதியாக ரயில் நிலையம் மற்றும் சிங்காநல்லூர் என்ற பெயர் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி எழுத்துக்களில் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இதில் இந்தி வார்த்தைகள் அனைத்தும் கருப்பு மையால் சிலர் அழித்து விட்டார்கள். ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் இந்தி வார்த்தைகள் கருப்பு மையால் அழிக்கப்பட்டு இருந்தது . இது தொடர்பாக ரயில்வே போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் கருப்பு மையால் அழித்த…

Read More

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: பிரியாணி புரோட்டா விலை உயர்வு..!

வணிக கேஸ் சிலிண்டர் அட்ரஸ் பற்றாக்குறை மாநில அளவில் அதிகரித்துள்ளது . கோவை மாவட்டத்தில் சிலிண்டர் கிடைப்பது அரிதாகிவிட்டது. இதனால் இருப்பில் உள்ள சிலிண்டர்களை வைத்து சமையல் செய்து உணவு பண்டங்களை விற்பனை செய்ய வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. நகரில் உள்ள 500க்கும் மேற்பட்ட பெரிய ஹோட்டல்களில் பிரதானமான மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகள் செய்ய முடியாத சூழல் இருப்பதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஹோட்டல்களில் சாப்பிட பொதுமக்கள் வழக்கம்போல் கூட்டமாக குவிந்து வருகிறார்கள். வணிக சிலிண்டர்…

Read More

கோவையில் கடந்த மாதம் 28 பேர் விபத்தில் சாவு

கோவை நகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விபத்துகளில் 28 பேர் உயிரிழந்தனர். இதில் எட்டு பேர் லாரி மற்றும் பஸ்ஸில் மோதி இறந்துள்ளனர் . ஆறு பேர் கனரக வாகனங்களில் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர். ரோட்டை கடக்க முயன்றவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிவேகமாக செல்பவர்கள் விபத்தில் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. விபத்து களை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கோவை நகரில் பழுதான ரோடுகள் தோண்டப்பட்ட குழிகள் மேம்பாலம் மற்றும் சாலை…

Read More