டாஸ்மாக்கில் அசுத்தம்: சரி பண்ணாம அலட்சியம்…

கோவை மாவட்டத்தில் 229 டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் ‘பார்’கள் உள்ளன. இந்த கடைகள், ‘பார்’கள் உள்ள பகுதிகளில் அசுத்தம் அதிகமாகி விட்டது. குப்பை, மது பாட்டில், உணவு பொருட்களால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளை அகற்றாமல் குப்பையோடு குப்பையாக ‘பார்’களை நடத்தி வருகிறார்கள். மேலும் சிலர், போதை ஏறி, சாலையோரம் மற்றும் ‘பார்’ வளாகங்களில் கிடக்கிறார்கள், அசுத்த சூழலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘பார்’களில் சுகாதார சீர்கேட்டுன் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்களுக்கு…

Read More

அவிநாசி ரோடு மேம்பாலம்: வாஹன் வெப்சைட்டில் விதிமுறை மீறல்களுக்கு அபராதம் போட தடை…

கோவை அவினாசி ரோட்டில் ஏஐ கேமராவில் பதிவாகும் வாகன விதிமீறல்களுக்கு மத்திய அரசின் வாகன் வெப்சைட் தளத்தில் அபராதம் விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 1791 கோடி ரூபாய் செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழி பாதையாக 17.25 மீட்டர் அகலத்தில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் இரண்டாவது நீண்ட மேம்பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த மேம்பாலத்தில் வேகக் கட்டுப்பாடு…

Read More

face recognising: மாறு வேடத்தில் சுற்றும் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்…

face recognition system மூலமாக கைதான கார்த்திக்… கோவை நகர், புறநகரில் மாறு வேடத்தில் சுற்றும் குற்றவாளிகளை பேஸ் ரெககனிஷன் முறையில் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை நகர், புறநகரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்ட நபர்கள் பலர் ஜாமீனில் வருகின்றனர். சிலர் மீண்டும் போலீசில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாகி விடுவார்கள். திருட்டு, கொலை, போதை பொருள் கடத்தல்…

Read More

பிரதமர் உருவ பொம்மை விவகாரம் தொடர்பாக பாஜக புகார்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் இன்று புகார் மனு வழங்கப்பட்டது. கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் ரமேஷ் குமார், நந்தகுமார் உள்பட கட்சியினர் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர். அப்போது அவர்கள்மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மருத்துவகல்லூரி நுழைவுத்தேர்வான நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பாக அமைந்துள்ளது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நனவாகியுள்ளது. ஆனால் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட…

Read More

பாழாகி போச்சு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கட்டடம்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலக பிரிவு அமைந்துள்ளது. இதில், பழைய மற்றும் புதிய கட்டடம் இருக்கிறது. புதிய கட்டடத்தில் அலுவலக பிரிவு செயல்படுகிறது. 70 ஆண்டிற்கு முன் கட்டிய பழைய கட்டடத்தில் மாற்று திறனாளிகளுக்கான பொருட்கள், பல்வேறு ஆவணங்கள், பயிற்சிகள், மருத்துவ சோதனைகள் நடக்கிறது. மாற்று திறனாளிகள் அதிக நேரம் பழைய கட்டடத்தில் தான் காத்திருக்கின்றனர். இந்த கட்டடத்தின் கூரைகள் கீழே சரிந்து விழும் நிலையில் இருக்கிறது. மழை காலங்களில் கட்டடத்திற்குள் தண்ணீர்…

Read More

கோவை மாநகராட்சியில் 132 டெண்டர் ரத்து

கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் 100 வார்டுகளில் பல்வேறு திட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. முன்னதாக இந்த பணிகளுக்கு மாநகராட்சி. நிர்வாகத்தின் அனுமதி (ஏ சேங்சன்) வழங்கப்பட்டது. இந்த பணிகளுக்கு சி சேங்சன் அதாவது கவுன்சில் கூட்டத்தில் வைத்து தீர்மான ஒப்புதல் தரப்படவில்லை. மாநகர் முழுவதும் மழை நீர் வடிகால், தடுப்பு சுவர், போர்வெல், கழிவறை என பல்வேறு திட்ட பணிகள் துவக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இதில் சில திட்ட பணிகள் ரத்து…

Read More

ஆளில்லாத வீடுகள்… 3 லட்சம் பேரிடம் கைரேகை வாங்க ரேஷன் கடை ஊழியர்கள் தீவிரம்

கோவை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை கார்டுகள் மற்றும் முன்னுரிமையற்ற கார்டுகள் பெற்றுள்ள ரேஷன்கார்டுதார்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் கைரேகை (பயோ மெட்ரிக்) அல்லது கண்கருவிழி பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டு, முன்னுரிமை கார்டு, முன்னுரிமையற்ற கார்டுகள் என 95 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளது. 3,97,782 ரேஷன் கார்டுகள் விற்பனை முனைய இயந்திரத்தில் பயோ மெட்ரிக்…

Read More

காத்து வாங்குது காஸ் பாரஸ்ட் மியூசியம்…

கோவை வனக்கல்லூரி வளாகத்தில் காஸ் பாரஸ்ட் மியூசியம் அமைந்துள்ளது. இதில் வன விலங்குகளின் உடல் பாகங்கள், எலும்பு, தோல், பல்வேறு வன பொருட்கள், மரங்கள், வேர், அரிதான பொருட்கள், பழங்கால வனத்துறையினர் பயன்படுத்திய வேட்டை கருவிகளான ஈட்டி, ரம்பம், கத்தி, அரிவாள், கோடாரி, 100 ஆண்டுகளுக்கு முந்தைய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், பழங்கால கற்கள், வேதிப்பொருட்கள் குடுவையில் வைக்கப்பட்ட பாம்பு போன்றவை வைக்கப்பட்டிருக்கிறது. யானைகளின் முழு உடல், தந்தம், காட்டெருமை, சிறுத்தையின் தத்ரூப தோற்றம் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது….

Read More

சிங்காநல்லூர் மேம்பாலம் பணி அடுத்த மாதம் துவக்கம்…

கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, திருச்சி ரோடு சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது . ரோட்டின் இரு புறமும் சுமார் 3 கி.மீ தூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று மெதுவாக நகர்ந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இங்கே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த சில ஆண்டாக திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுபாட்டில் உள்ள இந்த ரோட்டில் மேம்பாலம் அமைக்க கடந்த 2022ம் ஆண்டில் 110…

Read More

சிறுவாணி அணையில் தூர் எடுப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை 22.46 சதுர கிலோமீட்டர் பரப்பில் நீர்த்தேக்க திறனுடன் அமைந்துள்ளது. இந்த அணை கடந்த 1982 ஆம் ஆண்டு கட்டப்பட்டது . அதிலிருந்து இப்போது வரை அணை தூர்வாரப்படவில்லை . அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 15 மீட்டர் அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அணையின் நீர்மட்டம் உச்ச அளவை எட்டாமல் இருப்பதால் முழு அளவில் குடிநீர் எடுக்க முடியாத நிலைமை…

Read More