மோசடி நபரை போலீசார் விசாரிக்கலை… ஆதிவாசி பெண்கள் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் இன்று நடந்தது. இதில் காரமடை கோபநாரி தோலம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆதிவாசி பெண்கள் முற்றுகையிட்டு குவிந்தனர். அப்போது அவர்கள் அளித்த புகார் மனுவில், ” எங்கள் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் எங்களிடம் நட்பாக பழகினார். அவர் எங்களிடம் தனித்தனியாக பணம் நகை வாங்கினார். சில நாட்களில் திருப்பி தருவதாக கூறி அவர் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் என பலரிடம் பணம், நகை வாங்கினார்….

Read More

போலீஸ் வாங்கிய லஞ்ச பணத்தை தர சொல்லுங்க… கோவையில் விவசாயிகள் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: கடந்த வாரம் கோவில்பாளையம் பகுதி விவசாய தோட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை செய்தார்கள். நீரா பானம், கள் விற்பனை செய்தால் அதற்கு லஞ்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் கேஸ் போடுவோம் என மிரட்டியுள்ளார்கள். நேரடியாக தோட்டங்களுக்கு சென்று மாமூல் கேட்கிறார்கள். 4…

Read More

தெரு நாய் தொல்லை… வண்டியோடு சுத்தும் கோவை மாநகராட்சி…

கோவை மாநகர பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக உக்கடம், கரும்புக்கடை, சிங்காநல்லூர், குனியமுத்தூர்,ராமநாதபுரம், புலியகுளம், சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் பணிக்கு செல்வோரை நாய்கள் கூட்டமாக துரத்துவது வாடிக்கையாக உள்ளது. மாநகரில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாய்களைப் பிடிக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டது. ஒரே மாதத்தில் 500க்கும் மேற்பட்ட நாய்கள்…

Read More

குளத்தில் ஆபத்தான முறையில் போட்டோ எடுக்கும் வாலிபர்கள்…

கோவை தடாகம் ரோட்டில் உள்ள முத்தண்ண குளம் கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டது. நடைபாதை, பூங்கா, செல்பி பாயிண்ட், விளையாட்டு கூடம் போன்றவை அமைக்கப்பட்டது. குளத்தின் மீது நின்று போட்டோ எடுக்கும் வகையில் |மிதவை பாலம் பகுதியும் ஏற்படுத்தப்பட்டது. இந்த பகுதியில் உயரமான இரும்பு தடுப்பு அமைக்காமல் விட்டதால் வாலிபர்கள் சிலர் அதன் மீது ஏறி நின்று ஆபத்தான வகையில் செல்போனில் போட்டோ எடுக்கிறார்கள். சிலர் கம்பி மீது ஏறி…

Read More

குவிந்து கிடக்கும் அஸ்தி, சடங்கு கலயங்கள்…!

கோவை சொக்கம்புதூர் பகுதியில் மாநகராட்சியின் மின் மயானம் உள்ளது. இந்த மயானம் வளாகத்தில் இருந்த சுற்றுச்சுவர் பழுதடைந்து இடிந்து விழுந்து விட்டது. இந்த பகுதியில் பாதையை ஒட்டி ஏராளமான அஸ்தி பானைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தாத அஸ்தி கலயங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளது. குப்பை குவியல்களுக்கு இடையே காணப்படும் இந்த கலயங்களை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலர் அஸ்தி கலயங்களை வாங்கிச் செல்லாமல் விட்டுவிட்டதாலும், ஏற்கனவே பயன்படுத்திய அஸ்தி…

Read More

கோவையில் குவியும் வெளி மாநில குற்றவாளிகள்…!

கோவை மண்டலத்தில் வெளிமாநில குற்றவாளிகள் பதுங்குவதை கண்டறியும் திட்டங்கள் முடங்கி போனது. விசாரணை நடத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் வேலை செய்வதற்காக வெளி மாநில தொழிலாளர்கள் வருகை அதிகமாகி விட்டது. திருப்பூர் பனியன், விசைத்தறி நிறுவனங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளி மாவட்ட, வெளி மாநில தொழிலாளர்களும், கோவை லேத் ஒர்க்ஷாப், பவுண்டரி, பம்பு, ஆட்டோ மொபைல், நகை பட்டறைகளில் 3 லட்ச வெளியூர்வாசிகளும், ஈரோட்டில் பெட்சீட், நெசவு தொழிற்சாலைகளில் 1 லட்சத்திற்கும்…

Read More

கோனியம்மன் கோயில் உண்டியல் கொள்ளை: 8 பேர் சஸ்பெண்ட்

காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில் கடந்த 15 ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அப்போது திருவிழா காலங்களில் பயன்படுத்தும் ஆறு உண்டியலில் ஒரு உண்டியலை காணவில்லை. அதை கோயில் ஊழியர்கள் ரகசியமாக கோயிலுக்கு பின்புறம் எடுத்துச் சென்று திறந்து அதில் உள்ள பணத்தை திருடி சென்று விட்டதாக பக்தர் ஒருவர் இந்து சமய அறநிலையத் துறையினருக்கு புகார் தெரிவித்தார். இதை தொடர்ந்து கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் விசாரணை…

Read More

கோவை ஜி ஹெச் : வெளி நோயாளிகள் பிரிவுகள் மூடல்…

கோவை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவு கடந்த 1974ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த பிரிவில் காலை முதல் மதியம் வரை அதிக கூட்டம் காணப்படுகிறது. பழைய கட்டடத்தில் 2 தளங்களில் இந்த பிரிவு செயல்படுகிறது. தரை தளத்தில் ஆண்,பெண் மருத்துவ பிரிவு, கட்டு கட்டுதல், ஊசி போடுதல் பிரிவு, முதல் தளத்தில் காது மூக்கு தொண்டை பிரிவு, குழந்தைகள் அறுவை அரங்கம், நரம்பியல் பிரிவு, இரண்டாவது தளத்தில் பால்வினை நோய் பிரிவு, தோல் மருத்துவம், நரம்பு, மன…

Read More

கோவையில் உடைந்து சாயும் மின் கம்பங்கள்

கோவை மாவட்டத்தில் வீடு, விவசாயம், வணிகம், வர்த்தகம், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு பிரிவினருக்கான மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது, மாவட்ட அளவில் 25 லட்சத்திற்கு மேற்பட்ட மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக போதுமான அளவு மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. மின்கம்பங்கள் பற்றாக்குறை காரணமாக மின் இணைப்புகள் வழங்கும் பணி தாமதமாகி வருவதாக தெரிகிறது. குறிப்பாக புதிதாக உருவாக்கப்படும் லே அவுட்கள், கிராம பகுதியில் தொலைதூரத்தில் உள்ள வீடுகள், விவசாய தோட்டங்கள், வணிக…

Read More

திமுக திட்டங்களை காப்பியடிக்கிறதா தவெக…

திமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை தமிழக வெற்றி கழகம் அப்படியே காப்பியடித்து பெயரை மாற்றி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் ஏற்கனவே உங்களுடன் ஸ்டாலின் முகாம் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. பழைய திட்டத்தை அதே பெயரில் அப்படியே செயல்படுத்தினால் தங்களுக்கு எந்த பெயரும் கிடைக்காது என தமிழக வெற்றி கழகத்தினர் பெயரை மாற்றி பழைய திட்டங்களை காப்பியடிக்கும் முயற்சியை தொடர்ந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 2 மாதம் முன் நடந்த ஜமாபந்தியில்…

Read More