கோவை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நோடல் ஆபீசர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது . இதில் தேர்தல் பொது பார்வையாளர்கள் கணக்கு பார்வையாளர்கள் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் மாவட்ட எஸ் பி கார்த்திகேயன் துணை கமிஷனர் தேவநாதன் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் பார்வையாளர்கள் தரப்பில் கூறியதாவது: இந்த கூட்டத்தில்…

Read More

கோவையில் பறக்கும் படை சோதனை: கட்டுக்கட்டாக பணத்துடன் சென்ற வியாபாரிகள்…!

கோவை மாவட்டத்தில் தேர்தலில் சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு பரிசாக பொருட்கள், பணம், நகை மற்றும் இதர பொருட்கள் வழங்குவதை தடுக்க சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 24 மணி நேரம் சோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படை நிலையான கண்காணிப்பு படை என 180 குழுவினர் மாவட்ட அளவில் சோதனை செய்கிறார்கள். வாகனங்களின் இயக்கம் ஜிபிஎஸ் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேர்தல் பணிகளில் கட்சி, வேட்பாளர்கள் ஈடுபடவில்லை. பொதுமக்கள், வியாபாரிகள், மருத்துவ தேவை, தொழில் அபிவிருத்தி…

Read More

கோவை மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் விரைவில் தயார்…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் 12 கட்சிகள் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்றுள்ளது. சில கட்சிகள் அங்கீகாரமில்லாத நிலையில் இருக்கிறது. அங்கீகாரம் இல்லாக பதிவு செய்த கட்சிகளுக்கு பொதுவான சின்னங்கள் வேட்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக வழங்கப்படுகிறது. சுயேட்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்த சின்னம் தான் பெற வேண்டியிருக்கிறது. சிலர் முன்னுரிமை அடிப்படையில் பட்டியலில் உள்ள சின்னங்களை பெற முடியும். கடந்த…

Read More

கோவை மாவட்டத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள நகை பணம் பொருட்கள் பறிமுதல்…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படையினர் சோதனை செய்து பறிமுதல் செய்து வருகிறார்கள். முதல் நாளான 16ம் தேதி 4 இடங்களில் நடந்த சோதனையில் 30,17,150 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 56,244 ரூபாய் மதிப்பிலான 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 17ம் தேதி நடந்த சோதனையில் லட்ச ரூபாய் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா 7.13 லட்ச ரூபாய் மதிப்பிலான சில்வர் ஆபரணம் போன்ற பரிசு…

Read More

கோவையில் 85 வயது முதியோருக்கு தபால் ஓட்டு சீட்டு விண்ணப்பங்கள் விநியோகம்

85 வயது முதியோர்களுக்கு தபால் ஒட்டு சீட்டு விண்ணப்ப படிவங்கள் சப்ளை கோவை, மார்ச் 20: கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 40 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு உள்ள மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமத்தினைத் தவிர்க்கும் பொருட்டு, தபால் ஓட்டு போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் விருப்பத்தினை பெற ஏதுவாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12டீ மற்றும் வாக்காளர்…

Read More

கோவை மாவட்டத்தில் தேர்தல் வேட்பு மனு தாக்கல் ஏற்பாடுகள் தீவிரம்…!

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு உரிய படிவங்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டுள்ளது கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சட்ட மன்ற தொகுதிகள் வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் எந்தெந்த சட்ட மன்ற தொகுதிக்கு எங்கு வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கவுள்ளது. அரசு விடுமுறை…

Read More

கோவை மாவட்டத்தில் 29 பூஜ்ஜிய ஓட்டு சாவடிகள்…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 26, 98,813 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 13,00,889 பேர் பெண் வாக்காளர்கள் 13,95,396 பேர், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 528 பேர் உள்ளனர், மாவட்ட அளவில், கடந்த காலங்களில் 3117 ஒட்டு சாவடிகள் இருந்தது. இந்த நிலையில் எஸ்ஐ.ஆர் என்ற சுருக்க திருத்த பணிகள் நடத்தப்பட்டது. இதன் மூலமாக மாவட்ட அளவில் சுமார் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். 33 லட்சத்திற்கும் மேல் இருந்த…

Read More

பொள்ளாச்சியில்அதிமுக மாஜி அமைச்சர் படங்களுக்கு பாவாடை ,செருப்பு மாலை…!

கோவை பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே சென்டர் சென்டர் மீடியன் பகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், சிவிசண்முகம், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் ஆகியோர் முழு உருவ படங்களுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் சீனிவாசன் படத்திற்கு செருப்பு மாலையுடன் பாவாடையும் அணிவிக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடந்த 17ம் தேதி நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் சேலை தொடர்பாக பேசிய போது…

Read More

கோவையில் பறக்கும் படை சோதனை: 1 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!

சூலூரில் கலாமணி என்பவர் குடோனில் சிக்கிய 800 பாத்திரங்கள்.. கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படையினர் சோதனை செய்து பறிமுதல் செய்து வருகிறார்கள். முதல் நாளான 16ம் தேதி 4 இடங்களில் நடந்த சோதனையில் 30,17,150 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 56,244 ரூபாய் மதிப்பிலான 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 17ம் தேதி நடந்த சோதனையில் 5. 85 லட்ச ரூபாய் மதிப்பிலான 10 கிலோ…

Read More

கோவையில் மாதிரி வாக்குச்சாவடி…

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவு சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இன்று நடத்தப்பட்டது .தனியார் கல்லூரியில் மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது . இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், கூடுதல் கலெக்டர் சங்கீத் பல்வந்த் வாகே தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர் . இதில் மாதிரி வாக்கு சாவடி அமைக்கப்பட்டது . இதில் மாணவிகள் ஓட்டு போட பயிற்சி தரப்பட்டது. ஓட்டு போடுவது…

Read More