கோவை மாவட்டத்தில் தேர்தல் செலவு ரூ. 6 கோடி…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதற்காக மாவட்ட அளவில் சுமார் 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 3540 ஓட்டு சாவடிகள் அமைப்பு, ஓட்டு சாவடி ஆவணங்கள், தேர்தல் பொருட்கள், வாகனங்கள், தள வாடங்கள், கேமராக்கள், உள் கட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டது. தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அந்த கல்லூரி வளாகத்தில் 300 கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. இரும்பு தடுப்புகள், கவுண்டிங் சென்டர் வளாகம் முழுவதும் பாதுகாப்பு…

Read More

கோவை மாவட்டத்தில் நாளை ஓட்டு எண்ணிக்கை…!

கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை காலை முதல் ஓட்டு எண்ணிக்கை அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜிசிடி) நடக்கவுள்ளது. மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3540 ஓட்டு சாவடிகளில், வாக்கு பதிவு நடந்தது. இதற்காக 15,223 ஓட்டு மெசின்கள் பயன்படுத்தப்பட்டது. பதிவான ஓட்டு மெசின்கள் அனைத்தும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொகுதிக்கு ஒரு இடம் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம்…

Read More

கோவையில் நகைக்காக மூதாட்டி கொலை…!

கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் . இவர் கோவை மண்டல பத்திரப்பதிவு துறையில் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ‌ இவரது மனைவி கோமதி (65). இவர் தனது அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் லண்டனில் வசித்து வருகிறார். நேற்று இவர் தனது தாயை பார்ப்பதற்காக லண்டனிலிருந்து கோவை வந்தார். அவர் ராமநாதபுரம் வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கே கோமதி கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பது தெரிய வந்தது. அவரது கழுத்திலிருந்த…

Read More

‘ஓட்டுக்கு பணம்’ எதுக்கு கவுண்டிங் … கோவை கலெக்டர் அலுவலகத்தில் கருப்பு துணி கட்டி போராட்டம்

மறுமலர்ச்சி மக்களை இயக்கம் சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அந்த இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சிலர் முகத்தில் இன்று கருப்பு துணி கட்டி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது பணநாயக தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒரு கேலி கூத்து என்பதை வலியுறுத்தும் வகையில் கண் காது வாய் என மூன்று புலன்களையும் கருப்புத் துணியால் கட்டி போராட்டம் நடத்துகிறோம் என ஈஸ்வரன் தெரிவித்தார். தொடர்ந்து ஈஸ்வரன் கூறியதாவது: கோவை…

Read More

கோவை ரயில் நிலையத்தில் 350 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்…

கோவை ரயில்கள் மூலமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து கோவை ரயில்வே போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வந்தனர் . நேற்று ரயில்வே பிளாட்பாரம் பகுதியில் நடந்த சோதனையில் 350 கிலோ எடையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் குறிப்பாக பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போதை பாக்குகள்கடத்தி வந்த நபர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றார்கள். வட…

Read More

கோவையில் மருத்துவமனை நடத்திய போலி டாக்டர் கைது

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ராம்ஸ் மெடிக்கல் என்ற பெயரில் மருத்துவமனை செயல்படுவதாகவும் இந்த மருத்துவமனையில் விதிமுறை மீறி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் புகார் வந்தது . இதைத்தொடர்ந்து சூலூர் அரசு மருத்துவமனையில் மூத்த டாக்டர் ராஜேஷ் என்பவர் அங்கே சென்று ஆய்வு செய்தார். கோவை மாவட்ட சுகாதார பணியில் இணை இயக்குனர் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில் மருத்துவமனையை நடத்தி வரும் ராமநாதன் என்பவர் முறையாக மருத்துவம் படிக்கவில்லை என தெரிய வந்திருக்கிறது. இவர்…

Read More

கோவையில் தற்கொலை செய்வதாக மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவி மாயம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கருகடம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்( 45). இவரது மகள் தேவிகா (23). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி ஆபரேஷன் தியேட்டர் மற்றும் ஆனஸ்தீசியா டெக்னாலஜி படித்து வருகிறார். கோவை புளியகுளம் பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் இவர் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வந்தார் . இந்த நிலையில் நேற்று இரவு இவர் தனது தந்தைக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். அதில் நீங்கள் தாயை…

Read More

கோவை மாவட்டத்தில் காற்றுடன் கனமழை…!

கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதமாக வெயில் தாக்கம் உச்சத்தில் இருந்தது. அதுவும் சமீப நாட்களில் 100 டிகிரி செல்சியஸ் அளவை தாண்டி வெயில் வெளுத்து வாங்கியது. பொதுமக்கள் ரோட்டில் நடமாட முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக தென்மேற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கன மழை பெய்தது. மேட்டுப்பாளையம் காரமடை சிறுமுகை பொள்ளாச்சி வால்பாறை கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில்…

Read More

ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல க்யூ ஆர் கோடு அடையாள அட்டை…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை வரும் நான்காம் தேதி நடக்க உள்ளது. தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் காலை 8:00 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும். இதில் எண்ணிக்கை நடத்த உள்ள அலுவலர்கள் அதிகாரிகள் போலீசார் மற்றும் அரசியல் கட்சியின் ஏஜென்டுகள் என 6 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 தொகுதிகளில் 183 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்ஒவ்வொரு தொகுதிக்கும் 14 முதல் 20 டேபிள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு…

Read More

கோவையில் வியாபாரி மாணவரிடம் 49 லட்ச ரூபாய் மோசடி…!

கோவை ராமநாதபுரம் அருகே உள்ள ஸ்ரீபதி நகர் முதலாவது தெரு விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் ( 53). இவரது மகன் மித்தேஸ்வரன். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இவர்களுக்கு செட்டிபாளையம் மெயின் ரோடு கோவில் கார்டன் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் ( 33) என்பவர் அறிமுகம் ஏற்பட்டது நன்றக பழகி உள்ளனர்ப. அப்போது செல்வகுமார் சீனிவாசனிடம் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் எனக்கு பழக்கம். நான் அவர்களிடம்…

Read More