நடக்க முடியாத நடை பாதைகள்

நடைபாதையை மீட்க எதிர்பார்ப்பகோவை அரசு மருத்துவமனை முன் உள்ள நடை பாதை, ஸ்டேட் பாங்க் ரோடு இரு பகுதியில் உள்ள நடைபாதை மற்றும் அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள நடைபாதைகள் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. சில இடங்களில் இந்த நடைபாதையை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதை தடுக்காமல் மாநகராட்சியினர், வாரம் ஒரு முறை பிளீச்சிங் பவுடர் போட்டு செல்கிறார்கள். நடைபாதையை மக்கள் பயன்படுத்த முடியாமல் ஆங்காங்கே கான்கிரீட் தடுப்பு, ஒயர், சில இடங்களில் பேரி கார்டு…

Read More

படிக்காதவர்களுக்கு மனு எழுதி தர ஆள் இல்லை…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் வாரந்தோறும் குறை தீர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் வயதான, எழுத படிக்க தெரியாதவர்கள் மனு எழுதி தர முடியாமல் இருக்கின்றனர். சிலர், ரோட்டோரம் உள்ள படிவம் விற்பனை செய்பவர்களிடம் மனு எழுதி வாங்கி வருகிறார்கள். இந்த விவரங்கள் அரசு அதிகாரிகளுக்கு சரியாக புரியாத நிலையிருக்கிறது. முறையான கோரிக்கையை விட்டு பல கோரிக்கைகளை குழப்பமாக எழுதி வருவதாக தெரிகிறது. அரசு துறை அதிகாரிகள் குறிப்பாக சமூக பாதுகாப்பு துறையில் உள்ளவர்கள் மூலமாக…

Read More

உயிருடன் இருந்தும் இறந்து விட்டதாக ஆதார் ரேஷன் கார்டில் பெயர் நீக்கியதாக புகார்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரங்கநாதன் (48) என்பவர் அளித்த புகார் மனுவில் எனது பெயரை எனக்கு தெரியாமல் ஆதார் கார்டில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. எனது ஆதார் எண் வைத்து பார்த்தால் அது `எரர்’ காட்டுகிறது. நான் இறந்து விட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும்…

Read More

கோவை மாநகரில் 940 ரவுடிகள் கண்காணிப்பு…

கோவை மாநகரில் கடந்த ஆண்டு 178 ரவுடிகள் ஆறு மாதங்கள் மாநகரில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டு இருந்தது. நடப்பாண்டில் 57 ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த உத்தரவை மீறி மாநகருக்குள் இருந்த ரவுடிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்தகட்டமாக வெளியேற்றப்பட உள்ள ரவுடிகளின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ரவுடிகள், வெளியே நடமாடி கொண்டு இருக்கும் ரவுடிகளை போலீசார் கண்காணித்து அவர்களின் கொட்டத்தை…

Read More

ரயிலில் ஓசி பயணம்; 2.19 கோடி ரூபாய் அபராதம்

சேலம் கோட்டத்தில் ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர டிக்கெட் சோதனைகளின் மூலம் ரூ.2.19 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ரயில்நிலையங்களில் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் சரவணகுமார் வழிகாட்டுதலின் பேரில், சேலம் கோட்ட டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து ஜூலை மாதம் முழுவதும் பல்வேறு ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். இதில், டிக்கெட் இன்றி பயணம், முறைகேடான பயணம், பதிவு செய்யப்படாத…

Read More

கோவையில் ரத்தம் தெளித்து மாந்திரீக பூஜையா… போலீசார் விசாரணை

கோவை கோவில்மேடு ராஜ கோபால் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மர்ம நபர் ஒருவர் ரகசியமாக சென்று ரத்தம் தெளித்து சென்றுள்ளார். அதிகாலையில் வீட்டை திறந்து பார்த்த குடும்பத்தினர் வீட்டின் முன் தெளிக்கப்பட்டிருந்த ரத்தத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சாயிபாபா காலனி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். ரத்த அபிஷேகம் செய்து மாந்திரீக பூஜை எதாவது நடத்தப்பட்டதா என விசாரித்தனர். மேலும் ரத்தம் தெளிக்கப்பட்ட இடத்தின்…

Read More

மூதாட்டி தூக்கம் தலையணை கீழே சாவி எடுத்து திருடிய கில்லாடி…

கோவை கணபதி, டி.பாலன் நகர், 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கஸ்தூரி (63). இவர், தனது பேத்தியுடன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 3ம் தேதி இரவு வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு, வீட்டின் முன் கதவைப் பூட்டி, இருவரும் படுக்கையறைக்கு தூங்க சென்றனர். அப்போது நள்ளிரவில் கதவின் தாழ்ப்பாளை திறந்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், படுக்கையறைக்குள் நைசாக நுழைந்துள்ளார். அந்த மர்ம நபர், மூதாட்டியும் அவரது பேத்தியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைப் பயன்படுத்தி மூதாட்டியின் தலையணைக்கு…

Read More

வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் கல்வித் திறன், ஆராய்ச்சி, புதுமை, தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வனவியல், வேளாண் உயிரித் தொழில்நுட்பம், சமூக அறிவியல், உணவுத் தொழில்நுட்பம், வேளாண் வணிகம், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் வேளாண் அறிவியலின் பிற வளர்ந்து வரும்…

Read More

கோவையில் அம்மா உணவகங்களில் 87.30 லட்ச ரூபாய்க்கு விற்பனை

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12 இடங்ளில் அம்மா உணவகங்கள் உள்ளது. இங்கு கடந்த 3 மாதங்களில் 87.30 லட்ச ரூபாய்க்கு உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குறைந்த விலையில் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அம்மா உணவகங்கள் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 12 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. கோவை மாநகராட்சியை பொறுத்தவரை சிங்காநல்லூர்,…

Read More

சாய்பாபா காலனி மேம்பால சர்வீஸ் ரோடு துண்டிப்பு… மாநகராட்சியால் மக்கள் தவிப்பு

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சுமார் 1 கி.மீ தூரத்திற்கு 74 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் உரிய கால அவகாசத்திற்குள் பணி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு பகுதியில் புதிதாக தார் தளத்துடன் தரமாக ரோடு போடப்பட்டது. இன்னொரு புறம் ரோடு பணி நடத்த திட்டமிட்ட நிலையில், புதிய தார் ரோட்டை மாநகராட்சியின் சார்பில் சூயஸ் நிறுவனத்தினர் 24…

Read More