சிங்காநல்லூர் மேம்பாலம்: மண் ஆய்வு பணி துவக்கம்

கோவை சிங்காநல்லூரில் மேம்பாலம் பணிக்கான ஆயத்த வேலை துவங்கியது. மண் ஆய்வு பணி நடக்கிறது. விரைவில் பில்லர் அமைக்கப்படவுள்ளது. கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, திருச்சி ரோடு சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது. ரோட்டின் இரு புறமும் சுமார் 3 கி.மீ தூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று மெதுவாக நகர்ந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இங்கு மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த சில ஆண்டாக திட்டமிடல்…

Read More

கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு: ஒப்பந்ததாரர்கள் புகார்…

கோவை மாநகராட்சிக்குட்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மெய்நிகர் ஆய்வகம் (AR/VR Lab) அமைத்தல் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி வரும் 19ம் கோரப்பட உள்ளது . 11 பேக்கேஜ் என பிரிக்கப்பட்டு பணிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான டெண்டர் ஆவணத்தில், முன் அனுபவம் மற்றும் தகுதி தொடர்பாக பல்வேறு முரண்பாடான நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நிபந்தனைகள் பொதுவாக தகுதியான மற்றும் அனுபவமுள்ள அனைத்து நிறுவனங்களும் போட்டியிடுவதற்கு ஏதுவாக இல்லாமல், குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும்…

Read More

கோவையில் கல்லூரி நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை… மாணவர்கள் விடுதிகளில் சோதனை நடத்த உத்தரவு

கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி நிர்வாகங்கள் போலீசார் ஆலோசனைக் கூட்டம் இன்று இரவு நடந்தது. இதில் தமிழக மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கோவை சரக டிஐஜி சாமிநாதன் கோவை மாவட்ட போலீஸ் எஸ் பி பவன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கல்லூரி நிர்வாகத்தினருக்கு பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டது. கல்லூரி வளாகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்,…

Read More

பொதுப்பணி துறை ஆபீசுக்கே தண்ணீர் கஷ்டம்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ளது. கட்டுமானம், பராமரிப்பு, மின் பராமரிப்பு, பாய்லர், நிலத்தடி நீர்மட்டம் உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. பல நூறு ஊழியர்கள் இங்கே வேலை செய்து வருகிறார்கள். இந்த வளாகத்தில் போர்வெல் தண்ணீர் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் குடிநீர் வசதி செய்யப்படவில்லை. அலுவலர்களுக்கான குடிநீர் கேன் மூலமாக பெறப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பிஏபி, நொய்யல், பவானி என முக்கிய நீர் ஆதாரங்களை…

Read More

பொலிவுடன் தயாரானது கோவை குதிரை வண்டி கோர்ட்…!

கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் மேம்பாலம் பகுதியில் குதிரை வண்டி கோர்ட் செயல்பட்டு வந்தது. கடந்த 1863ம் ஆண்டு கால கட்டடத்தில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த போது இந்த கோர்ட் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதில் பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது, வஉசி சிறையில் அடைக்கப்பட்டது தொடர்பான வழக்குகளிலும் இந்த கோர்ட்டில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது. பெருமை வாய்ந்த இந்த கோர்ட் முடக்கப்பட்டாலும் இடிக்கப்படாமல் அப்படியே பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது பொதுப்பணித்துறையின் ஹெரிடேஜ்…

Read More

கோவையில் மூதாட்டி கொலை குற்றவாளியை பிடிக்க போலீசார் தனிப்படை…

கோவை பாப்பநாயக்கன் பாளையம் கருப்புக்கால் தோட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (58). இவரது கணவர் கிருஷ்ணன் இறந்து விட்டார். இவர்களுக்கு ராஜா (35) என்கிற மகனும், அமுதா (30) என்கிற மகளும் உள்ளனர். மகள் அமுதா திருமணமாகி பாலக்காட்டில் வசித்து வருகிறார். சாந்தி மகன் ராஜாவுடன் தங்கிருந்து அதே பகுதியை சேர்ந்த டாக்டர் ஒருவர் வீட்டில் சமையல் வேலை செய்து வந்தார். ராஜா வெல்டிங் ஓர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை ராஜா வேலைக்கு…

Read More

போலீஸ் மாஸ் ரீல்ஸ்

கோவை மாநகரில் பள்ளி, கல்லூரிகள் அருகே மற்றும் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் குறித்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் அடிப்படையில் 8,279 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருந்தன. அவற்றை அப்படியே வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பகுதியில் குழி தோண்டி புதைத்துள்ளனர். இந்த காட்சிகளை ‘ரீல்ஸ்’ எடுத்து அந்த வீடியோவை மாநகர காவல் துறையின் சமூக வலைத்தள பக்கத்தில்…

Read More

கல் குவாரிகளில் வெடி வைப்பதில் முறைகேடு…

கோவை மாவட்டத்தில் கல் குவாரிகள் அதிகமாக இயங்கி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் சிலர், புதிதாக குவாரிகள் துவக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குவாரிகள் துவங்க ஏகப்பட்ட கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை, போலீசார் என பல்வேறு துறையினர் ஆய்வு நடத்தி பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி ஒப்புதல் பெற்ற பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது. உரிய அரசு துறைகளின் தடையின்மை சான்று பெற்று தான் உரிமம் வழங்கவேண்டும். ஆனால்…

Read More

Gas cylinder புக்கிங் தாமதம் e Kyc இல்லாததால் நெருக்கடி…

கோவை மாவட்டத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன. பெரும்பாலான இணைப்புகள் பெண்களின் பெயர்களில் இருக்கிறது. காஸ் சிலிண்டர் நுகர்வோர் தங்களது சிலிண்டர் இணைப்பிற்கு ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி என்ற அடையாள சரிபார்ப்பை முடிக்க வேண்டும். வரும் 16ம் தேதிக்குள் இதை செய்யாவிட்டால் மானியம் கிடைப்பதில் தடை ஏற்படும். காஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. சிலிண்டர் இணைப்பு உள்ளவர்கள் நேரடியாக காஸ் சிலிண்டர் வழங்கும் விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரில் சென்று…

Read More

காலில் காயத்துடன் உயிருக்கு போராடும் நோயாளி…

கோவை உக்கடம் வின்சென்ட் ரோட்டில் 60 வயது மதிக்கதக்க நபர் காலில் காயங்களுடன் கட்டு போட்ட நிலையில் கிடந்தார். இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இலவச சேவை ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவ சேவை ஊழியர்கள் அங்கே சென்று பார்த்தனர். அவரிடம் அக்கம் பக்கத்தினர் விசாரித்தனர். அப்போது கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த வாசுதேவன் என தெரியவந்தது. இவர் ஏற்கனவே குறிச்சி குளம், வாலாங்குளத்தின் கரையில் தங்கியிருந்தவர் என தெரிகிறது. ஆதரவு இல்லாத இவர் பிச்சை…

Read More