கோவை குள வாய்க்கால் சீரமைப்பு பணிகள்… ஆய்வு செய்த கலெக்டர்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களில் மழைக் காலங்களில் நீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி சாலை நெசவாளர் காலனி பட்டணம் இட்டேரி பகுதியில் அமைந்துள்ள நீர் வரத்து கால்வாயில், மழைக்காலங்களில் தங்கு தடையின்றி நீர் செல்லும் வகையில் சுமார் 2.3 கி.மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதிகளில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் புதர்கள் அகற்றும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு…

Read More

கோவையில் ரயில் பாதையில் விளையாடிய சிறுவன் உயிர் பறிபோனது…

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் மனைவி ஜெயபிரியா. இவர்களது மகன் பிரகதீஷ் (8), அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் இன்று மதியம் பிரகதீஷ் வீட்டில் விளையாட செல்வதாக கூறி தனது சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே சென்றார். பின்னர், ஒண்டிப்புதூர் சவுடேஸ்வரி நகரில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றார். அங்கு ரயில் வருகிறதா? என தண்டவாளம் அருகே நின்று வேடிக்கை பார்த்தார்….

Read More

கோவையில் கூலி தொழிலாளி அடித்து கொலை…? 2 பேரிடம் விசாரணை

கோவை வடவள்ளி வீரகேரளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (45). கூலி தொழிலாளி. இவர் மனைவி பாரதி கண்ணம்மா (33). சுரேஷிற்கு நீண்ட நாட்களாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த 12ம் தேதி பாரதி கண்ணம்மா உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக கேரளா சென்றார். மறுநாள் மாலை சுரேஷின் நண்பர் ராஜேஷ் என்பவர் சுரேஷை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது,…

Read More

கோவையில் ஆன்லைன் டிரேடிங் என மூதாட்டியிடம் 1.66 கோடி ரூபாய் மோசடி…

கோவை வடவள்ளியில் 63 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டி தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் பார்த்து கொண்டு இருந்துள்ளார். அப்போது, அதில் ஆன்லைன் டிரேடிங் குறித்து ரீல்ஸ் வந்துள்ளது. அதன் விவரங்களை பார்ப்பதற்காக அவர் ரீல்சின் கீழ் இருந்த லிங்கை தொட்டுள்ளார். உடனே அவரது ‘வாட்ஸ் அப்’ எண் ஒரு வாட்ஸ் அப் குழுவில் மர்ம நபர்களால் இணைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த வாட்ஸ்…

Read More

சிறுவாணி அணையில் தூறல் மழை…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 49.53 அடி இதில் நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இன்னும் 3 மீட்டர் வரை மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தற்போது அணை நீர் மட்டம் டெத் ஸ்டோரேஜ் என்ற இறுதி கட்ட இருப்பு அளவை எட்டி விட்டது. அணையில் இருந்து 4 கோடி லிட்டர் அளவிற்கும் குறைவாக தினமும் குடிநீர் பெறப்படுகிறது. தினமும்…

Read More

ரூ 6 கோடியில் கோவை மைல்கல் ‘சுரங்க பாலம்’ கட்டும் பணி விரைவில் துவக்கம்…

கோவை மதுக்கரை மைல் கல் பகுதியில் இருந்து மாதம்பட்டி வரை 11.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் மேற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த பைபாஸ் ரோடு போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. மைல் கல் பகுதியில் 30 கோடி ரூபாய் செலவில் மஞ்சு பள்ள ஓடையின் மீது 30 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இந்த பணி முடிய மேலும் ஒரு ஆண்டு ஆகும் என…

Read More

கோவை காப்பகத்தில் மாணவர் மீது தாக்குதல்; கலெக்டரிடம் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுங்கம் பகுதியை சேர்ந்த காவியா என்பவர் இன்று புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் எனது மகன் ரித்திக்ராஜ் தங்கியிருந்து படித்து வந்தான். இந்த நிலையில் எனது மகனை கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு அழைத்து வந்தேன். அப்போது அவனது உடலில் காயங்கள் இருந்தது. இதுகுறித்து அவனிடம் விசாரித்த போது, காப்பகத்தில் இருந்த 2 மாணவர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்தான். இதனால்…

Read More

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி வேன் டிரைவர் கைது…!

கோவையை சேர்ந்த 6 வயதான சிறுமி, தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியின் தந்தை உயிரிழந்ததால், தாயார் சிறுமியை தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், அந்த சிறுமியின் தாயார் கோவை வந்தார். பின்னர் அவர் தனது மகளை தன்னுடன் பெங்களூருவுக்கு அழைத்துச்சென்றார். அவர் தனது மகளை கவனித்தபோது அவர் மிகவும் சோர்வுடன் இருந்தார். உடனே அவர் தனது மகளிடம்…

Read More

கோவையில் தேர்தல் காலத்தில் 834 புகார் மனுக்கள் குவிப்பு

கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் வாரம் தோறும் திங்கட்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மாவட்ட அளவில் குறை தீர்ப்பு முகாம்கள் மூலமாக 17,000க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் இதுவரை 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் மார்ச், ஏப்ரல் மாதங்களில் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் பெறுவதற்காக பெட்டி வைக்கப்பட்டது. இந்த…

Read More

கோவை மாவட்டத்தில் 4.76 லட்சம் மகளிர் உரிமைத்தொகைக்காக காத்திருப்பு…

கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருந்தது. கடந்த 2023ம் ஆண்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 4,25,705 பயனாளிகளுக்கு ரூ.1000 வீதம் ஒரு வருடத்திற்கு 510 கோடியே 84 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மகளிருக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஜீலை மாதம் முதல் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களின் மூலம்பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மகளிர் உரிமைத்தொகை கோரிய…

Read More