வேட்பு மனு தாக்கல் செய்ய முன்பதிவு: கோவையில் அனைத்து கட்சி கூட்டத்தில் உத்தரவு..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் கலெக்டர் பவன் குமார் கோவை மாவட்ட எஸ் பி கார்த்திகேயன், துணை கமிஷனர் தேவநாதன் , தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி தாசில்தார் தணிகைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கோவை மாவட்ட அளவில் 90 பறக்கும் படை நிலையான கண்காணிப்பு படை வீடியோ படை அமைக்கப்பட்டு தொடர்ந்து பணி செய்து வருகிறார்கள். பொதுமக்கள் மற்றும்…

Read More

கோவை நகரில் அரசியல் போஸ்டர்கள் கிழிப்பு

கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று மாலை முதல் செயல்பாட்டுக்கு வந்தது இதைத்தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டி வைக்கப்பட்டிருந்த அரசியல் தொடர்பான போஸ்டர்கள் அறிவிப்புகள் பேனர்கள் அகற்றப்பட்டது. குறிப்பாக நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டி வைக்கப்பட்டிருந்த திமுக அதிமுக பாரதிய ஜனதா காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளின் போஸ்டர்கள் மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக கிழித்து அகற்றப்பட்டது. பிளக்ஸ் பேனர்களும் கழற்றி அகற்றப்பட்டது. தடையை மீறி யாரும் எந்த இடத்திலும் பேனர் போஸ்டர் வைக்க கூடாது…

Read More

கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்..!

தமிழக சட்டமன்றத்திற்கு இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் (model code of contact) உடனடியாக அமலுக்கு வந்தது கோவை மாவட்ட அளவில் ஏற்கனவே பறக்கும் படை நிலையான கண்காணிப்பு படை வீடியோ கண்காணிப்பு படை என 90 படைகள் உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 720 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று மாலை 6 மணி முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பவன்…

Read More

கோவையில் ஓட்டுக்கு லஞ்சம்: கண்டறிய கலெக்டர் தலைமையில் ஆலோசனை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான நுண்கண்காணிப்பு குழுவின் கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் , கோவை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். வருமானவரித்துறை, சுங்கவரித்துறை, மத்திய வருவாய் துறை, வணிகவரித்துறை, சரக்கு மற்றும் சேவை வரிகள் துறை, காவல் துறை, ரயில்வே காவல்துறை, ரயில்வே பாதுகாப்பு படை, மதுவிலக்கு பிரிவு காவல்துறை, துணை…

Read More

கோவையில் லோ அதாலத்: 7368 வழக்குகளுக்கு தீர்வு..

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி விஜயா தலைமையில் இன்று கோவை நீதிமன்றங்களிலும் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி வால்பாறை, சூலூர், அன்னூர் மற்றும் மதுக்கரை நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைப்பெற்றது. முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பாபுலால் வரவேற்றார். கடந்த 2024 ம் ஆண்டு எல் ஆண்டு டி பைபாஸ் ரோடு, மதுக்கரையில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்த ரஞ்சித்குமார் குடும்பத்தினருக்கு…

Read More

கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கட்டுப்பாட்டு அறை திறப்பு..

கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட இடிகரை, நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் டவுன் பகுதி, திருமலைநாயக்கன்பாளையம், சாமிசெட்டிப்பாளையம், கூ.கவுண்டம்பாளையம், கோவனூர், பாலமலை, 4 வீரபாண்டி சாமநாயக்கன்பாளையம், மத்தம்பாளையம், ஒன்னிப்பாளையம், காளிப்பாளையம் மற்றும் தொட்டிப்பாளையம் பகுதிகளில் 236 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த கேமராக்கள் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையை கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் இன்று துவக்கி வைத்தார். கோவை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், குமாரபுரம் முதல்…

Read More

கோவையில் மு க ஸ்டாலின் பிறந்தநாள்: சில்வர் ‘குண்டா’ பரிசு வழங்குவது தாமதம்..!

கோவை மாவட்டத்தில் அதிமுக மற்றும் திமுக பொதுமக்களுக்கு பல்வேறு பரிசு பொருட்களை தேர்தலை முன்னிட்டு வாரி வழங்கி வருகிறது. அதிமுக தரப்பில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழா என்ற பெயரில் சாப்பாடு தட்டு ஹாட் பாக்ஸ் வேட்டி சேலை போன்றவை வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் ரேஷன் கார்டு அடிப்படையில் அனைத்து வீடுகளுக்கும் குறிப்பாக 11.50 லட்சம் வீடுகளுக்கு பரிசு பொருட்கள் வாரி வழங்கப்பட்டதாக தெரிகிறது….

Read More

கோவையில் கள்ள சந்தையில் கேஸ் சிலிண்டர் விற்பனையா..? கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை..!

சமையல் கேஸ் சிலிண்டர் நுகர்வு தொடர்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள், அரசு துறை அலுவலர்கள், தனியார் ஓட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், பேக்கரி, தனியார் விடுதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆய்வு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் பேசுகையில், “ வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களை பதுக்கி கள்ள சந்தையில் விற்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான புகார்களை வழங்கல்…

Read More

கோவையில் அப்பார்ட்மெண்ட் மூதாட்டி கொலையில் மேலும் ஒருவர் கைது

தாமர் மற்றும் அவருடன் ஏற்கனவே கைதான இரண்டு பேர்.. கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு பிரபல அப்பார்ட்மெண்டில் கடந்த வாரம் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது . இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த வீட்டில் ஆயுர்வேத டாக்டர் ராம்குமார் குட்டி என்பவரின் தாய் கஸ்தூரி (80) கை கால் கயிறால் கட்டி போட்ட நிலையில் இறந்து கிடந்தார் . அவரது கழுத்து பகுதியில்…

Read More

கஞ்சா கடத்தல் வட மாநில பெண் கைது

கோவை கருமத்தம்பட்டி வேட்டைக்காரன் குட்டை பிரிவு பகுதியில் கருமத்தம்பட்டி போலீஸ் சார் சோதனை நடத்திய போது அங்கே சந்தேகப்படும் வகையில் பெண் ஒருவர் நடமாடிக் கொண்டிருந்தார் . அவரிடம் சோதனை செய்தபோது பிளாஸ்டிக் கவரில் 10 கிலோ கஞ்சா இருந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்தனர். அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த இஸ் மேதரா காதும் (26) என தெரிய வந்தது. அவர் சொந்த ஊரிலிருந்து கஞ்சா வாங்கி வந்து அதை கோவை கருமத்தம்பட்டி…

Read More