கொடிசியாவில் புத்தக கண்காட்சி

கோவை கொடிசியாவில் ஆண்டு தோறும் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது . இந்த ஆண்டுக்கான புத்தக கண்காட்சி வரும் வெள்ளி துவங்கி 26ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது குறித்து கோவை புத்தக திருவிழா தலைவர் ராஜேஸ், கொடிசியா தலைவர் ரங்கசாமி ஆகியோர் கூறியதாவது: இளம் தலைமுறையினர் இடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், புத்தக வாசிப்பாளர்கள் பயனடையும் வகையில் கொடிசியா சார்பில் 10வது ஆண்டாக புத்தக கண்காட்சி கொடிசியா அரங்கில் வரும் வெள்ளிக்கிழமை துவங்குகிறது….

Read More

பைக் டாக்ஸி தடுக்கணும்… கால் டாக்ஸி டிரைவர்கள் போராட்டம்…

கோவையில் கால் டாக்சி டிரைவர்கள் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டரிடம் இது தொடர்பாக புகார் அளித்தனர். இதுகுறித்து டிரைவர்கள் கூட்டமைப்பினர் கூறுகையில்,“கோவையில் பைக் டாக்சி மற்றும் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவோர் அதிகமாகி விட்டனர். இதனால், எங்களை போன்ற கால் டாக்சி டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து கடந்த ஆண்டு கலெக்டரிடம் மனு அளித்தோம். இதையடுத்து இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களை வாடகைக்கு இயக்குபவர்களை கண்காணித்து நடவடிக்கை…

Read More

மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு … உண்மையான தகவல் எழுதுங்க…

கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அடுத்த மாதம் 1ம் தேதி துவக்கப்படும். இதற்கு முன்னோட்டமாக வரும் 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை சுய கணக்கெடுப்பு பணி நடத்தப்படும். சுய கணக்கெடுப்பு பணி என்பது பொதுமக்கள் தங்கள் செல்போனில் https:/se.census.gov.in என்ற வெப்சைட்டில் தங்களை பற்றி சுய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். மாநிலம் என்ற பகுதியில் தமிழ்நாடு என தேர்வு செய்து ‘கேப்ட்சா’ குறியீடு வழங்கினால் செல்போனிற்கு ஓடிபி வரும். இதில்…

Read More

ரேஷன் கார்டில் பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்…

கோவை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை கார்டுகள் மற்றும் முன்னுரிமையற்ற கார்டுகள் பெற்றுள்ள ரேஷன்கார்டுதார்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் கைரேகை (Bio Metric) அல்லது கண்கருவிழி (Iris) பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியின் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டு, முன்னுரிமை கார்டு, முன்னுரிமையற்ற கார்டுகள் என 95 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளது. மாவட்டத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுகள் 7033 முன்னுரிமை கார்டுகள்…

Read More

கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை…

கோவை கோவில்பாளையம் பகுதியில் உள்ள பிபிஜி பொறியியல் கல்லூரியில் பி டெக் ஐ டி படித்து வந்தவர் நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு பகுதியை சேர்ந்த ரகு என்பவரது மகள் மகாலட்சுமி (21). இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இன்று மதியம் இவர் கல்லூரி விடுதியில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக கோவில் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவி தற்கொலைக்கான…

Read More

கோவையில் 17ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்…

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 17ம் தேதி காலை |10 மணி முதல் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நேரிடையாக நடைபெற உள்ளது. இம்முகாமிற்கு 10 மற்றும் பிளஸ்2, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல்…

Read More

கள்ளிப்பால் கொலை காலத்தை மறக்காதீங்க… பெண் குழந்தைகளுக்கு அட்வைஸ்…

கள்ளிப்பால் கொடுத்து கொன்ற காலத்தை மறக்காதீங்க கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட சமூக நல அலுவலர் தாரணி, புலிய குளம் அரசு கல்லூரி முதல்வர் அனு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். |மாநகர் பகுதியை சேர்ந்த மாநகராட்சி, அரசு பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அதிகாரிகள் பேசும் போது, “ பெண்கள் பின் தங்கியிருந்த காலம்…

Read More

அம்மா உணவகத்தில் சேர் இல்லை… உட்கார்ந்து தான் சாப்பிடுறோம்…

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் 30 பேர் சாப்பிடும் வகையில் டேபிள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டேபிள் மீது தட்டு வைத்து நின்றபடி தான் சாப்பிட முடியும். மேலும் டேபிள் உயரமாக இருப்பதால், சிறுவர்களுக்கு எட்டுவதில்லை. வயதானவர்கள், நோயாளிகள் இந்த டேபிளில் நின்ற படி சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு நாற்காலி வசதி செய்யவில்லை. இதனால் தரையில் அமர்ந்தபடி சாப்பிடும் நிலையிருக்கிறது. தரையில் உட்கார கூடாது என ஊழியர்கள் எச்சரிப்பதால், உணவு…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் குட்டி மயிலை கடித்து கொன்ற நாய்கள்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நில அளவைத் துறை பயிற்சி வளாக கட்டடம் பின்புறம் புதர்கள் மண்டி கிடைக்கிறது. இன்று காலை மயில் ஒன்று தனது குட்டி மயிலுடன் அங்கே சுற்றிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த நாய்கள் கூட்டமாக மயில் மற்றும் குஞ்சு மயிலை படிப்பதற்காக விரட்டின. இதைப் பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நாய்களை விரட்டி விட்டனர் . மேலும் குட்டி மயிலை பிடித்து பாதுகாக்க முயன்றனர் . ஆனால் அதற்குள் நாய்கள் கடித்ததில் குட்டி…

Read More

மதுக்கரையில் யானை தாக்கி விவசாயி சாவு…!

கோவை மதுக்கரை புதுப்பதி அருகே உள்ள சோளக்கரை வன எல்லை கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி நடராஜ் (60) என்பவர் இன்று காலை மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த யானை ஒன்று ஆவேசமாக நடராஜை தூக்கி வீசியது. அவரது காலில் மிதித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். யானை சென்றதும் அங்கே வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக…

Read More