கோவையில் ஜிடி நாயுடு சிலை திறந்தார் தமிழக முதல்வர்..!

தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள். நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இயந்திரவியல் மற்றும்…

Read More

கோவையில் ரேஷன் கடைகளில் மோடி படம்: தடையை மீறி போராடிய 49 பாஜகவினர் கைது..!

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது . மோடி அரசு மூலமாக ரேஷன் கடைகளுக்கு மாதம் இரண்டு லட்சம் டன் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விவரங்களை மறைத்து தமிழக அரசு தானே ரேஷன் பொருட்களை வழங்குவது போல் காட்டிக் கொண்டிருக்கிறது. அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. எனவே மத்திய அரசின் திட்டங்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ரேஷன் கடைகளில் பிரதமர்…

Read More

கோவையில் 44 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்.. பல்லி உணவு குறித்து விசாரணை..!

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று மதிய உணவு வழங்கப்பட்து. அப்போது, உணவில் பல்லி கிடப்பதாக தெரியவந்தது. இந்த உணவை சாப்பிட்ட 31 மாணவர்கள், 13 மாணவிகள் என 44 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே மாணவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் உடல் நலமுடன் இருப்பதாகவும் குணமாகியவுடன்…

Read More

300 அணிகளுக்கு ‘கிரிக்கெட் கிட் பேக்’ வழங்கினார் இன்ஜினியர் சந்திரசேகர்..!

கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, புரட்சித் தமிழர் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழாவாக அதிமுகவினர் கொண்டாடினர். வடவள்ளி பகுதியில் நடந்த விழாவில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் 300 கிரிக்கெட் அணிகளுக்கு 300 கிரிக்கெட் கிட் பேக் வழங்கினார். இதைப் பெற்றுக் கொண்ட கிரிக்கெட் அணி வீரர்கள் சந்திரசேகருக்கு நன்றி தெரிவித்தனர். இன்ஜினியர்…

Read More

கோவை கணுவாய் டாஸ்மாக் பாரில் புகுந்த யானை..!

கோவை கணுவாய் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் இன்று அதிகாலை 4.40 மணிக்கு ஆண் யானை ஒன்று புகுந்தது. பாரில் இருந்த சிமெண்ட் சீட்டு மற்றும் பல்வேறு பொருட்களை உடைத்து நாசம் செய்தது சத்தம் கேட்டு அங்கே வந்த பார் ஊழியர்கள் யானை நிற்பதை பார்த்து அலறி அடித்து ஓடினர். ஒருவர் யானை முன்பு தெரியாமல் நின்று கொண்டிருந்தார். பின்பு சுதாரித்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். தடாகம் காட்டுப் பகுதியில் இருந்து இந்த ஆண் யானை…

Read More

கோவை சர்க்கார் சாமக்குளத்தில் நாளை புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு

கோவை மாவட்டத்தில் 18 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது தற்போது கூடுதலாக சர்க்கார் சாமக் குளத்தில் 19வது சார் பதிவாளர் அலுவலகம் நாளை திறக்கப்பட உள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் முறையில் அலுவலக கட்டடத்தை நாளை திறக்க உள்ளார். பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அன்னூர் சார் பதிவாளர் எல்லைக்குட்பட்ட சில பகுதிகள் பிரிக்கப்பட்டு சர்க்கார் சாமகுளம் அலுவலக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அக்ரஹார சாமக்குளம் கொண்டையம் பாளையம் வெள்ளமடை கீரணத்தம் சர்க்கார் சாமக்குளம் போன்ற…

Read More

கோவையில் டெமோ மெஷினில் பல ஆயிரம் ஓட்டுப் பதிவு…!

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம். சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் என 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்களுக்கு ஓட்டு போட பயிற்சி வழங்கவேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது. தற்போது ஓட்டு மெசின்கள் சரி பார்ப்பு பணி முடிந்தது. இதில் பயன்படுத்தும் நிலையில் 15,117 மெசின்கள் இருப்பதும், பழுதான…

Read More

கோவை மாவட்டத்தில் வரும் 11ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவக்கம்

கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 11ஆம் தேதி (புதன்கிழமை) துவங்குகிறது. அன்றைய தினம் தமிழ் மற்றும் மொழிப்பாடத்திற்கான தேர்வும், 16-ம்தேதி ஆங்கிலம், 25-ம்தேதி கணிதம், 30-ம்தேதி அறிவியல் பாடத்திற்கான தேர்வு ஏப்ரல் 2-ம்தேதி சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடக்கிறது. ஏப்ரல் 6ம்தேதி விருப்ப பாடத்திற்கான தேர்வு நடக்கிறது. இத்தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி, மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இத்தேர்வை கோவை மாவட்டத்தில் 158 மையங்களில் 518 அரசு பள்ளிகள்,…

Read More

கோவை மாவட்டத்தில் மேலும் 20 ஆயிரம் பேர் வாக்காளர்களாக விண்ணப்பம்..!

கோவை மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் 11,00,889 ஆண் வாக்காளர்கள், 13,95,396 பெண் வாக்காளர்சகள், 528 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 26,96,813 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 25,74,608 பேர் வாக்காளர்களாக இருந்தனர். இந்த நிலையில் 1,22,205 வாக்காளர்கள் 2 மாதத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். கடந்த சில மாதங்களாக எஸ்ஐ.ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் நடந்தது….

Read More

கோவையில் வீடு வீடாக அதிமுக கொடுத்த பரிசு..!

கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் முப்பெரும் தலைவர்கள் பிறந்தநாள் விழா என்ற பெயரில் வீடு வீடாக பரிசு பொருட்கள் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது. கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு ஹாட் பாக்ஸ் மற்றும் சில்வர் தட்டு வழங்கப்பட்டது. சில்வர் தட்டில் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி எடப்பாடி யார் பெயர்களை எழுதி வைத்திருந்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரிசு பொருட்கள் வழங்கும் பணி நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. கோவை மாவட்ட…

Read More