விஜய் ஆட்சியில் 15 லட்சம் கோடி கடன் உருவாகும்… மாநாட்டில் அண்ணாமலை பேச்சு…

கோவை பொள்ளாச்சியில் போதை இல்லாத தமிழகம் என்ற பெயரில் வீ தி லீடர்ஸ் மாநாடு இன்று நடைபெற்றது இதில் அமைப்பின் தலைமை சேவகர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது இந்த அமைப்பில் யாருக்கும் பொறுப்பு தலைவர் எதுவும் கிடையாது . அனைவரும் தன்னார்வலர்கள் தான்.இந்த அமைப்பை ஆரம்பிக்கும் போதே நாம் 50 சதவீதம் தாண்டி விட்டோம் மாணவர்கள் இங்கே உறுதிமொழி எடுத்தார்கள் போதைக்கு எதிராக நாம் இறங்கி வேலை செய்ய வேண்டும் இங்கே உறுதிமொழி எடுத்த மாணவர்…

Read More

கையேந்தும் சிறார்களை கரையேற்ற ஆளில்லை…

கோவை நகர், புறநகரில் ரோட்டோரம் சிலர் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். சிறார்களை வைத்து பிச்சை எடுக்க கூடாது. அப்படி செய்தால் வழக்கு பதிவு செய்து கைது செய்ய சட்டம் இருக்கிறது. இதற்காக ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் உள்ளூர் போலீசார் மூலமாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் நகர், புறநகரில் கைக்குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது அதிகமாகி விட்டது. வடமாநிலங்களில் இருந்து சிலர் கோவை வந்து குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கின்றனர்….

Read More

கோவை மாநகராட்சியில் குடிநீர் பஞ்சம் தீருமா…!?

கோவை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் வழங்க அதிக நாட்கள் காத்திருக்க வைப்பதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பில்லூர் 1, 3 திட்டம், சிறுவாணி, ஆழியாறு, அமராவதி, பவானி, பேரூர் கூட்டு குடிநீர், வடவள்ளி வீரகேரளம் கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குனியமுத்தூர் கிணத்துக்கடவு குடிநீர் திட்டம் என 13 குடிநீர் திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டிற்கு முன் ஒருங்கிணைந்த கூட்டு…

Read More

கோவை மாவட்டத்தில் செங்கல் சூளைகள் ஆரம்பிக்க தடை…

கோவை மாவட்டத்தில் செங்கல் சூளைகள் நடத்த கடும் தடை நீடிக்கிறது. செங்கல் உற்பத்தியில் முதன்மை இடத்தில் இருந்த கோவையில் ஒரே ஒரு செங்கல் சூளை தான் இருக்கிறது. கோவை மாவட்டத்தில் செம்மண் வளம் மிகுதியாக காணப்படுகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், எட்டிமடை பகுதியில் செம்மண் பூமி காணப்படுகிறது. கடந்த காலங்களில் இங்கே செங்கல் சூளைகள் அதிகமாக காணப்பட்டது. தடாகம் பகுதியில் 187 செங்கல் சூளைகள் இயங்கியது. முறைகேடாக…

Read More

மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு பணி வரும் 17ம் தேதி துவக்கம்

கணக்கெடுப்பு தொடர்பாக கலெக்டர் பவன் குமார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார் கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அடுத்த மாதம் 1ம் தேதி துவக்கப்படும். இதற்கு முன்னோட்டமாக வரும் 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை சுய கணக்கெடுப்பு பணி நடத்தப்படும். சுய கணக்கெடுப்பு பணி என்பது பொதுமக்கள் தங்கள் செல்போனில் https:/se.census.gov.in என்ற வெப்சைட்டில் தங்களை பற்றி சுய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். மாநிலம் என்ற பகுதியில் தமிழ்நாடு என தேர்வு…

Read More

கோயில் நிலங்களை பட்டா போட்டு தரலாமா …நயினார் நாகேந்திரன் பேட்டி

கரூர் கோவில் நில விவகாரத்தில் ஆய்வு செய்து பாஜக போராட்டம் நடத்தும் என கோவையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி: கோவை பீளமேட்டில் உள்ள பாஜக அலுவலகத்தில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கரூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நான்கு கோவில்களின் 3,085 ஏக்கர் நிலம் தொடர்பாக அவசரமாக பட்டா வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின்…

Read More

ரேஷன் கார்டில் 3.97 லட்சம் விரல் ரேகை காணோம்…கோவையில் வீடு வீடாக சோதனை

கோவை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை கார்டுகள் மற்றும் முன்னுரிமையற்ற கார்டுகள் பெற்றுள்ள ரேஷன்கார்டுதார்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் கைரேகை (Bio Metric) அல்லது கண்கருவிழி (Iris) பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டு பணி 95.03 சதவீதமும், முன்னுரிமை கார்டுகளில் 95.10 சதவீதமும் முன்னுரிமையற்ற கார்டுகள் 84.48 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. மாவட்டத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா…

Read More

கோவை வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு…டான்சா ஒப்படைப்பு ரத்து

கோவையில் மதுக்கரை மைல்கல் முதல் நரசிம்ம நாயக்கன்பாளையம் வரை 32.8 கி.மீ தூரத்திற்கு மேற்கு பைபாஸ் ரோடு பணிகள் துவக்கப்பட்டது. பேஸ் 1. 2. 3 என மூன்று கட்டமாக பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்ட பணிகள் மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 250 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்டது. இந்த பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வந்தது. இந்த நிலையில் 2ம் கட்டமாக மாதம்பட்டி முதல் கணுவாய் வரை பணிகள் நடத்த திட்டமிடப்பட்டது….

Read More

டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்…

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டாஸ்மாக் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். அதன்படி கோவை பீளமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை இன்று டாஸ்மாக் விற்பனையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாடு அரசை கண்டித்தும், தங்கள் கோரிக்கைகளை…

Read More

Coimbatore 4 battalion: எஸ்.பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…!

கோவை அருகேயுள்ள கோவைப்புதூரில் 4வது பட்டாலியன் படை பிரிவு உள்ளது. இங்கே எஸ்.பி ஆக பணியாற்றி வந்தவர் செந்தில்குமார் (54), இவர் கடந்த 2023ம் ஆண்டில் இருந்து இங்கே பணியில் இருந்துள்ளார். இவர் சில மாதம் முன் பட்டாலியன் பெண் போலீசாருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஏட்டு தப்பி அனைத்து மகளிர் போலீசில் புகார் தந்தார். போலீசார் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த மார்ச் மாகம் செந்தில்குமாரை கைது செய்தனர்….

Read More