கோவை ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா..!

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இன்று காலை எட்டு மணி அளவில் தன்பாத் ஆலப்புழா ரயில் கோவை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் சுற்றிக்கொண்டிருந்தார். இதையடுத்து, போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த நபர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான 4 கிலோ…

Read More

கோவையில் மாரியம்மன் சிலை உடைப்பால் பரபரப்பு..

கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் மாரியம்மன் மற்றும் முனியப்பன் கோயில் உள்ளது. இன்று அந்த கோயிலில் மாரியம்மன் முனியப்பன் சிலை சேதம் செய்யப்பட்டிருந்தது. சுவாமி முகத்தில் மர்ம நபர்கள் சேதம் ஏற்படுத்தி இருந்தனர். இதே போல் கோயில் வளாகத்தில் இருந்த சூலம் சாய்க்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் பாபா கிருஷ்ணன் , செய்தி தொடர்பாளர் தனபால், குனியமுத்தூர் பகுதி பொறுப்பாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் அங்கே சென்று பார்வையிட்டனர். இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசில்…

Read More

கோவையில் 3 நகராட்சிகளில் ஆதார் மையம் துவக்கம்

கோவை மாவட்டத்தில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிரந்த ஆதார் மையம் இருக்கிறது. இது தவிர தாலூகா அலுவலகங்கள், ஆர்எஸ்புரம், பொள்ளாச்சி மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் வங்கி கிளைகளில், தலைமை தபால் அலுவலகம் போன்றவற்றில் ஆதார் மையங்கள் உருவாக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகங்களில் ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கூடுதலாக மதுக்கரை, கூடலூர், காரமடை நகராட்சி அலுவலகத்தில் நிரந்த ஆதார் மையம் துவக்கப்பட்டது. இந்த நகராட்சிகளில் உள்ள ஆதார் மையங்களை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தலாம் என…

Read More

கோவையில் பிளாட்பாரத்தை அபகரித்த கடைகள்.. வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்..!

பெரிய கடை வீதி போத்தீஸ் அருகே அபகரிக்கப்பட்ட பிளாட்பார பாதை.. கோவை மாநகர எல்லையில் 5 தேசிய நெடுஞ்சாலைகள், 57.2 கிலோ மீட்டர் நீளமுடைய 6 மாநில நெடுஞ்சாலை, 77 கிலோ மீட்டர் நீளமுடைய முக்கிய மாவட்ட சாலை மற்றும் 40.7 கிலோ மீட்டர் நீளமுடைய இதர மாவட்ட சாலை, மாநகராட்சி கட்டுபாட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதிகளில் ரோடுகள் அமைந்துள்ளது. போக்குவரத்து நிர்வாகம் மற்றும் சாலைப்பாதுகாப்பு குறித்து கோவை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளையும் புதிய…

Read More

நகை பணம் எப்போ தருவாங்க… கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காத்திருந்த புகார்தாரர்கள்..

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட நகை பணம் மற்றும் பல்வேறு பொருட்களை மீட்டு ஒப்படைப்பதாக நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை மாநகர போலீஸ் ஏற்கனவே திருட்டு தொடர்பாக புகார் அளித்திருந்த புகார்தாரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இவர்களுக்கு முறைப்படி திருடு போன பொருட்கள் திரும்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. புகார் தாரர்கள் தங்களது பணம் நகை செல்போன் திரும்ப கிடைக்கும் என கமிஷனர் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர். போலீஸ் ஸ்டேஷன்…

Read More

கோவை மாவட்ட சட்ட மன்ற தேர்தலில் 90 கண்காணிப்பு படைகள் தயார்

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் மும்முரமாக நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படும். ஒரு ஓட்டு சாவடிக்கு 4 பேர் என 14,252 பேர், ரிசர்வ் நிலையில் 150 பேர். இதர பணிகளில் சுமார் 5 ஆயிரம் பேர் இருப்பார்கள். கோவை மாவட்ட அளவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்படும் போது கண்காணிப்பு பணியில் ஈடுபட 90 சிறப்பு கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது….

Read More

கோவை மாவட்டத்தில் 60 ஆயிரம் பேருக்கு தபால் ஓட்டு..!

கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல்.. கோவை மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 22,000 பேர் வரை இருப்பதாக தெரியவந்துள்ளது . இதேபோல் மாற்றுத்திறனாளிகள் 14,500 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் 85 வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி தபால் ஓட்டு போட தகுதியான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ஆய்வுப் பணி…

Read More

கோவை பஸ் ஸ்டாண்டில் ரீல்ஸ்: அத்துமீறல் தொடர்பாக புகார்

கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இன்ஸ்டாகிராம் ஆர்வலர் ஜித்து ஷாஜி என்பவர் பெண் வேடமிட்டு எனது நண்பர் ஒருவருடன் சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடி இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளை இந்த ரீல்ஸில் அவர் காட்டியுள்ளதாக தெரிகிறது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் அத்துமீறி அனுமதி இன்றி இது போன்ற ரீல்ஸ் எடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read More

கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகள் இரண்டாக பிரிப்பு: 2 உதவி இயக்குனர் நியமனம்

கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகள் இருக்கிறது. இந்த ஊராட்சிகளின் நிர்வாகம் ஊராட்சி உதவி இயக்குனர் மேற்பார்வையில் நடைபெற்று வந்தது. திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு மற்றும் நிதி மேலாண்மை போன்றவை தணிக்கை உதவி இயக்குனர் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது கோவை மாவட்ட ஊராட்சிகளின் நிர்வாகம் இரண்டாக பிரிக்கப்பட்டது. ஊராட்சி உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் மாவட்ட அளவில் 12 ஒன்றியங்கள் என்றிருந்தது . இந்த நிலைமை மாறி இப்போது 6 ஒன்றியங்கள் 114 என மாற்றப்பட்டது. கோவை…

Read More

பாரதியார் பல்கலைக்கழகத்தில் 99.15 லட்ச ரூபாயில் டிஆர்டிஒ ஆராய்ச்சி திட்டம்

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு DRDO மூலம் ரூ.99.15 லட்சம் மதிப்பிலான முக்கிய ஆராய்ச்சி திட்டம் அங்கீகாரம் இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் (DRDO), நியூ டெல்லி நிறுவனத்தால், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய ஆராய்ச்சி திட்டம் ஒன்றிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. “Development of Novel Antidote(s) for Highly Toxic Organophosphorous Compounds” என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த ஆராய்ச்சி திட்டம், பாரதியார் பல்கலைக்கழகத்தின் DRDO Industry Academia – Centre of…

Read More