26 டன் சோபா மெத்தை குப்பை..

கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள நூறு வார்டுகளில் ரோட்டோரம் மற்றும் பொது இடங்களில் சோபா மெத்தை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் குவிந்து கிடப்பதாக புகார் வந்தது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தினர் இன்று லாரி மூலமாக பயன்பாட்டின்றி கிடந்த பொருட்களை சேகரித்தனர். 5 மண்டலங்களிலும் 26. 22 டன் அளவிற்கு மெத்தை தலையணை சோபா சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

Read More

சர்வர் மக்கர் மக்களுக்கு டார்ச்சர்…

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் 2.22 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 3000 ரூபாய் வேட்டி சேலை ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு வழங்கும் பணி கடந்த எட்டாம் தேதி முதல் நடக்கிறது. இந்தப் பணியை முடக்கும் வகையில் ரேஷன் கடை ஸ்மார்ட் கருவிகள் சர்வர் தாமதம் ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு நியாய விலை பணியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறுகையில் தனியார் நிறுவனம் சர்வரை சரியாக…

Read More

மாதிரி ஓட்டு பதிவு முடிஞ்சிருச்சு மெஷின்களுக்கு சீல் வைப்பு

கோவை மாவட்டத்தில் பயன்பாட்டில் உள்ள 19521 ஓட்டு மிஷின்கள் சரியாக இயங்கி வருகிறதா என சரி பார்க்கும் பணிகடந்த ஒரு மாதமாக நடந்தது. இந்த பணி நிறைவடைந்தது. 397 மிஷின்கள் பழுதான நிலையில் இருந்தது தெரிய வந்தது. இந்த மிஷின்கள் நீக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் இன்றும் அரசியல் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. மூன்று கட்டமாக இந்த வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 200 மெஷின்களை வைத்து ஓட்டு பதிவு நடத்தினர். இதில் ஒவ்வொரு…

Read More

லங்கா கார்னரில் குழி தோண்டீட்டே இருக்காங்க..

கோவை ரயில்வே ஸ்டேஷன் லங்கா கார்னர் பகுதியில் குடிநீர் குழாய் பதித்தல் மற்றும் சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. சாக்கடை நீர் பாய ஸ்கொயர் கான்கிரீட் குழாய் பதிக்கப்பட்டது. இந்த வழியே ஏகப்பட்ட கேபிள் நிறுவனங்களின் ஒயர்கள் குவிந்து கிடக்கிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக குழி தோண்டி கோவை மாநகராட்சி நிர்வாகம் வேலை செய்து வருகிறது. ஆனால் பணி இன்னும் முடியவில்லை. இதற்கிடையே ரயில்வே நிர்வாகம் லங்கா கார்னர் பாலத்திலிருந்து தண்ணீர் ஒழுகுவதை தடுக்கும்…

Read More

கோவையில் காரில் தீப்பிடித்து உடல் கருகி வாலிபர் சாவு

கோவை குளத்து பாளையம் பகுதியை சேர்ந்தவர் விமல் . 22 வயதான தனியார் நிறுவன இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காளியாபுரத்திலிருந்து திருமலையாம்பாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டோரத்தில் பெட்ரோல் குழாய் பதிக்கும் பணி நடந்து வந்தது இதற்காக குழாய்களை ரோட்டோரம் வைத்திருந்தனர். எதிர்பாரா விதமாக அந்த குழாய் மீது கார் மோதியது . இதில் கார் உடனடியாக தீப்பிடித்தது. காரில் இருந்த இரண்டு பேர் உடனடியாக இறங்கி விட்டனர்….

Read More

கோவை மாவட்டத்தில் 90 தேர்தல் கண்காணிப்பு படை..!

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு பணி தீவிரமடைந்து வருகிறது. மாவட்ட அளவில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 18000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் கோவை மாவட்ட அளவில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்கண்காணிப்பு படைகள் தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதி இருக்கிறது .‌ இதில் 90 கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட…

Read More

காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த மாணவன்

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் ஜெகன் . 17 வயதான 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த இந்த சிறுவன் இன்று காலை சைக்கிளில் தனது வீட்டில் இருந்து காந்திபுரம் மேம்பாலத்துக்கு வந்தார். பாலத்தின் அடியில் சைக்கிளை நிறுத்திய ஜெகன் பாலத்தின் மீது ஏறி அங்கே இருந்து குதித்தார். இதில் கால் மற்றும் முதுகெலும்பு உடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவரின் தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்…

Read More

நகரை கலக்கும் நடிப்பு சக்கரவர்த்தி…!

கோவை நகரில் பல்வேறு இடங்களில் நடிப்புச் சக்கரவர்த்தி என்ற பட்ட பெயருடன் போஸ்டர்கள் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் ரஜினி கமல் விஜயகாந்த் அஜித் விஜய் எம்ஜிஆர் சிவாஜி என டாப் லெவல் சூப்பர் ஹீரோ படங்களும் இடம்பெற்றுள்ளது. குகன் சக்கரவர்த்தி என்பவர் வங்காள விரிகுடா என்ற பெயரில் சினிமா படம் எடுப்பதாக தெரிகிறது. இதற்கு மக்களை கவரும் வகையில் போஸ்டர் ஓட்ட வேண்டுமென நினைத்து இந்த மாதிரி செய்திருக்கிறார். கோவை நகரில் ரயில்வே ஸ்டேஷன் ஜிஎச் மற்றும்…

Read More

இந்து முன்னணியினர் சாலை மறியல்

திருப்பூர் ஈட்டி வீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற முயற்சித்த போது, இந்து முன்னணியினர் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம் அடைந்தார். கோவில் வருவாய்த்துறை புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி, அதை அகற்றும்படி அரசு அதிகாரிகள் கூறி வந்தனர். அதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கோவிலில் இருக்கும் சிலைகளை அகற்ற இன்று காலை வருவாய்த் துறையினர் அங்கு சென்றனர். அதற்கு…

Read More

அங்கன்வாடி ஊழியர்கள் வேலை நிறுத்தம்..

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி, சங்கங்களின் கூட்டமைப்பு கோவை மாவட்ட கிளை சார்பில் குறைந்தபட்ச சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கும் சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஊழியரின் பணி சுமையை கருதி உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற…

Read More