கோவை கோனியம்மன் கோயில்:4ம் தேதி தேரோட்டம், போக்குவரத்து மாற்றம்

கோவையின் காவல் தெய்வம் என அழைக்கப்படும் கோனியம்மன் திருக்கோவில் தேர் திருவிழா 04.03.2026 ம் தேதி நடைபெற உள்ளது . பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், அன்றைய தினம் குறிப்பிட்ட சில நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. பேரூர் ரோடு பேரூரிலிருந்து செட்டி வீதி, ராஜ வீதி வழியாக, நகருக்குள் வரும் வாகனங்கள் தடை செய்யப்படுகிறது. மாற்றாக, பேரூரிலிருந்து வரும் வாகனங்கள், செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகில், வலதுபுறம் திரும்பி, அசோக் நகர் ரவுண்டானா,…

Read More

கோவை வனக்கல்லூரி சுவரில் எழுதிய இந்தி வாசகங்கள் அழிப்பு

கோவை தடாகம் ரோட்டில் உள்ள தென்னக வனசரக கல்லூரி வளாக சுற்று சவரில் தமிழ் ஆங்கிலம் மற்றும் இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தது. இதில் ஹிந்தியில் எழுதப்பட்ட எழுத்துக்களை சிலர் கருப்பு மையினால் அழிந்துவிட்டனர். இந்தி எழுத்துக்களை அழித்தது யார் என ஆர் எஸ் புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீபகாலமாக இந்திக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தி திணிப்பு கூடாது என ரயில் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் மத்திய…

Read More

சிறுவாணி அணை சீரமைக்க நிதி தாமதம்

கோவை சிறுவாணி அணை மேற்கு தொடர்ச்சி மவையில் கேரள மாநில எல்லைக்குள் அமைந்துள்ளது. அணையில் இருந்து நீர் எடுத்து பயன்படுத்தும் உரிமை தமிழகத்திற்கும், பராமரிக்கும் பொறுப்பு கேரள அரசுக்கும் உள்ளது . அணையிலிருந்து தினமும் 10.1 கோடி லிட்டர் குடிநீர் பெற முடியும். அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால், குடிநீர் எடுப்பது வெகுவாக குறைந்து விட்டது. அணையின் நீர் மட்டம் வறட்சி நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அணையின் பக்க சுவரை பலமாக்குதல்,…

Read More

கோவையில் ஒரே ஆண்டில் 14432 பேருக்கு புதிய ரேஷன் கார்டு..!

கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடைகள் உள்ளது. 11,66,078 ரேஷன்கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. 34,42,968 பேர் ரேஷன் பொருட்கள் பயனாளிகளாக உள்ளனர். மாதத்திற்கு சுமார் 20 ஆயிரம் டன் அரிசி, 1200 டன் துவரம்பருப்பு, 600 டன் சர்க்கரை, 9.76 லட்சம் பாமாயில் பாக்கெட் போன்றவை ஓதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு கேட்டு குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. ஆன்லைன் மூலமாக புதிய கார்டு கேட்டும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள…

Read More

கோவையில் மகளிர் உரிமை தொகை கேட்டு கதறி அழுத பெண்கள்..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் இன்று நடந்தது. இதில் கோவை எஸ்ஐஎச்எஸ் காலனி மகாத்மா ரோடு பகுதியில் எப்எல்2 உரிமம் பெற்ற பார் திறக்க ஏற்பாடு செய்வது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகார் மனுவில், ” எங்கள் பகுதியில் எப் எல் 2 உரிமம் பெற்ற தனியார் பார் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறக்க போகிறார்கள். ஏற்கனவே இந்த பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை…

Read More

கோவை திமுக நிர்வாகிகள் விருப்ப மனு

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் திமுக சார்பில் போட்டியிட அந்த கட்சி நிர்வாகிகள் சென்னை அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்து வருகின்றனர். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மாணவர் அணி நிர்வாகி ராஜீவ் காந்தி விருப்ப மனு அளித்துள்ளார். இதேபோல் கோவை சிங்காநல்லூர் பகுதியில் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன் விருப்ப மனு அளித்துள்ளார். ஏற்கனவே இதே தொகுதிக்கு முன்னாள் மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் விருப்ப மனு…

Read More

கோவை வெள்ளலூரில் நிலத்தடி நீர் மஞ்சள் நிறமாக மாறியது..!

கோவை வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது. இதில் சுமார் 20 லட்சம் மெட்ரிக் டன் குப்பை 630 ஏக்கர் பரப்பளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை தொடங்கினால் வெள்ளலூர் கோண வாய்க்கால் பாளையம் மகாலிங்கபுரம் மேட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாகவும் காற்றில் துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். சமீபத்தில் கோண வாய்க்கால் பாளையம் வெள்ளலூர்…

Read More

கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கோவை மாவட்டத்தில் பீளமேடு பொள்ளாச்சி உள்பட 3 இடங்களில் பாஸ்போர்ட் சேவா கேந்திர அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை இந்த அலுவலகங்களுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் மூலமாக சோதனை நடத்தப்பட்டது. இதில் வழக்கம் போல் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. மர்ம நபர் ஒருவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு அடிக்கடி இமெயில் மூலமாக…

Read More

கோவையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு துவக்கம்

கோவை மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு இன்று காலை துவங்கியது. 130 மையங்களில் 36 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் இன்று தமிழ் மற்றும் மொழி தேர்வு எழுதினர். கோவை நகரில் பல்வேறு பகுதியில் உள்ள தேர்வு மையங்களில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தேர்வு மையங்களில் செய்யப்பட்டிருக்கிறதா விதிமுறை மீறல் நடந்துள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

Read More

கோவையில் சூப்பர் பாஸ்ட் விபத்து; கார் பைக் காலி..!

கோவை அவிநாசி ரோடு பீளமேடு வரதராஜா மில் பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று நள்ளிரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சூப்பர் பாஸ்ட் வேகத்தில் சென்ற இந்த கார் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. நிலை தடுமாறி அருகில் சென்ற பைக் மீது மோதியது. இதில் கார் மற்றும் பைக் நொறுங்கி போனது. பெட்ரோல் கசிவு ஏற்பட்ட நிலையில் கார் மற்றும் பைக் தீ பிடித்தது. இதைப் பார்த்து அந்த பகுதியில் இருந்த மக்கள் அதிர்ச்சி…

Read More