மருதமலை முருகனுக்கு 184 அடி உயர சிலை தொடர்பாக ஆய்வு

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 184 அடி உயரமுள்ள முருகர் சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த சிலை அமைப்பதற்கான பணியிலே இந்து சமய அறநிலையத் துறையினர் துவக்கி உள்ளனர். வனப்பகுதியில் கோயில் அமைந்திருப்பதால் அதற்கான பாதுகாப்பு சூழல் இருக்கிறதா என பல்வேறு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இன்று நீதிமன்ற குழுவினர் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் கோயிலில் சிலையை அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தினர். சிலை அமைக்கும் இடம் மற்றும் பாதுகாப்புகள் குறித்து…

Read More

தொழிலாளர்கள் புதிய சட்டம்; போராடிய 222 பேர் கைது

இந்திய தொழிற்சங்க மையத்தின் கோவை மாவட்டம் சி ஐ டி யு சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் இன்று நடந்தது . இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்பின் நிர்வாகிகள் பேசினர் . கடந்த 21 ம் தேதி மத்திய அரசு லேபர் கோட் திருத்தம் செய்து அறிவித்திருக்கிறது . இந்த அறிவிப்பில் பயன் அடைவது முதலாளி வர்க்கமாக இருக்கிறது. வேலை நேரம் 8 மணி நேரம் இல்லை அதற்கும் கூடுதலாக எவ்வளவு…

Read More

‘நக்சா சர்வே’ எப்படி பண்றது.. 3 நாளுக்கு பயிற்சி

கோவை மாவட்டத்தில் கணபதி பகுதியில் நில அளவைத்துறை சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் நக்சா என்ற புவியியல் தகவல் அடிப்படையில் நிலம் அளவீடும் செய்யும் பணி கடந்த பிப்ரவரி 18ம் தேதி துவங்கியது. கணபதி பகுதியில் உள்ள 7 வார்டுகளில் (மாநகராட்சி வார்டு எண் 19,20,29,30,31,47,48) 10:44 சதுர கி.மீ பரப்பளவிற்கு முன்னோடி திட்டமாக இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. டிரோன் மூலமாக நில அளவை செய்து, புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புலவரைபடங்களை உருவாக்கி,…

Read More

நீலாம்பூருக்கு புது போலீஸ் ஸ்டேஷன் வந்தாச்சு..

கோவை சூலூர் கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் கிராமங்கள் அதிகமாக இருந்தது .இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட சில கிராமங்களை தனியாக பிரித்து நீலாம்பூர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது இன்று முதல் இந்த போலீஸ் ஸ்டேஷன் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

Read More

6.50 லட்சம் பேர் இல்லை அப்புறம் எதுக்கு அத்தனை ஓட்டு சாவடி…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எஸ் ஐ ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணி தொடர்பான தேர்தல் பார்வையாளர் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது . இதில் அரசியல் கட்சியை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . அப்போது கட்சி நிர்வாகிகள் மாவட்ட அளவில் ஆறு லட்சத்து 50 ஆயிரம் பேர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள் .இந்த நிலையில் கூடுதலாக 446 ஓட்டு சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது .வாக்காளர்கள் அதிகமாக நீக்கப்பட்ட நிலையில் கூடுதல் ஓட்டு சாவடி எதற்கு….

Read More

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்க கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று நடந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு புகார் மனு அளித்தனர். நடப்பாண்டில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். குறை தீர்க்கப்படுகிறதோ இல்லையோ கூட்டம் குறையவில்லை. தொடர்ந்து ஒரே பிரச்சனைக்காக பலமுறை மனு கொடுக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. கால் கிடைக்க மக்கள் கூட்டமாக காத்திருக்கும் நிலையை பார்த்தால் அதிகாரிகள் எந்த அளவுக்கு வேலை செய்கிறார்கள் என தெரிந்துவிடும்….

Read More

19 முறையாக வெடிகுண்டு மிரட்டல்…

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை ஒரு இமெயில் வந்திருந்தது. அதில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த குண்டு விரைவில் வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இதே பெயரில் சில முறை இ மெயில் வந்திருந்தது. இதை தொடர்ந்து தொடர்ந்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் மோப்பநாய், மெட்டல் டிடக்டர் மூலமாக சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இதே போல் இமெயில் மூலமாக மிரட்டல்…

Read More

கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற தம்பதிகள்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் ஆலாந்துறை பகுதி சேர்ந்த வெங்கடாசலம் (55), இவர் மனைவி நாகமணி ஆகியோர் புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது தங்களது கையில் இருந்த கரசினை இருவர் தலைமீது ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றனர். அதற்குள் அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை பிடித்து தீப்பெட்டியை பறித்தனர். அவர்கள் கதறி அழுது கொண்டே போலீசாரிடம் கூறுகையில் எங்களுக்கு 45 ஆண்டுகளுக்கு…

Read More

குழந்தைகளுடன் நர்சுகள் போராட்டம்

கோவை அரசு மருத்துவமனையில் பணி நிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நர்சுகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் . இன்று நான்காவது நாளாக போராட்டம் நடந்தது . இதில் பங்கேற்ற நர்சுகள் தங்களது குழந்தைகளையும் போராட்டத்தில் பங்கேற்க வைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்..

Read More

ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்…

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் ஊதிய குழு கமிட்டி அமைக்க வேண்டும் தாயுமானவர் திட்டத்தில் உள்ள பிரச்சனையை சரி செய்ய வேண்டும் அனைத்து ரேஷன் ஊழியர்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் ரேஷன் கடை பணியாளர்கள் வரும் ஜனவரி 5ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துவதாக தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். இதன் முன்னோட்டமாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் சங்க தலைவர்…

Read More