நல்லாகுமா நல்லாம்பாளையம் ரோடு…

நம்ம கோயம்புத்தூர்ல பாதாள சாக்கடை போட்ட பின்னாடி மூடுன ரோடு எல்லாம் ரொம்ப மோசமான நிலைமையில் இருக்கு. ‌ குறிப்பா தார்தளம் போடாததனால பள்ளமா மாறிடுச்சு. இதை சரி செய்யுங்க. லாரி போச்சுன்னா பள்ளத்துல இறங்குது. நல்லாம்பாளையம் பகுதியில் அதிகாரிகள் கவனிச்சா நல்லா இருக்கும் அப்படின்னு மக்கள் பேசிக்கிறாங்க..

Read More

கோவையில் 34 லட்சம் பேருக்கு ரேஷன் அரிசி…!

கோவை மாவட்டத்தில் 1401 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. மாவட்ட அளவில், 11,58,798 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. நடப்பாண்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கூடுதலாக ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன்கார்டுகள் தடையின்றி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழங்கல் துறையினர் சார்பில் புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் ரேஷன் பொருட்கள் பயனாளிகளாக 34,25,505 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 34,06,543 பேரின் ஆதார் பதிவுகள் பெறப்பட்டிருக்கிறது. ரேஷன் பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகமாகி…

Read More

கோவை கலெக்டர் ஆபீஸ் 150 ஆண்டு பிரிட்டிஷ் கட்டிடம் விரைவில் இடிப்பு..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பழைய அலுவலகம் 3 தளங்களுடன் செயல்படுகிறது. 5 ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட புதிய அலுவலகம் 3 தளங்களுடன் அருகே செயல்படுகிறது. இந்த இரு அலுவலகங்களிலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி முகமை, உணவு வழங்கல் பிரிவு ஆதிதிராவிடர் நலத்துறை, சர்வே, கனிம வளம், பிற்பட்டோர் நலத்துறை, வேளாண்மை. சமூக நலத்துறை, இ சேவை மையம், ஆதார் மையம், நிலம் எடுப்பு, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம், சத்துணவு பிரிவு…

Read More

மக்களை காக்கும் மாகாளி ஆத்தா..

உக்கடம் என் ஹெச் ரோடு பகுதியில் கண் திறந்த நிலையில் பக்தர்களுக்கு அருள் காட்சி தந்த மாகாளியம்மன். அம்மன் கண் திறந்த நிலையில் அங்கே பக்தர்கள் ஏராளமானவர்கள் குவிந்தனர்.

Read More

ஆத்தா ”கண்” பார்த்தா..

உக்கடம் என் ஹெச் ரோடு பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் அம்மன் சாமிக்கு இன்று பூஜை நடந்தது. அப்போது அம்மன் கண் திறக்கப்பட்டதாக அங்கே இருந்த பக்தர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோயிலில் கூட்டம் குவிந்தது. அம்மன் சிலையில் கண் திறந்தது எப்படி என அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் விசாரித்தனர். ஆத்தா கண் திறந்தால் அனைத்து கஷ்டங்களும் தீரும் என பக்தர்கள் பரவசத்துடன் தெரிவித்தனர்.

Read More

கோவைக்கு வந்தாச்சு 11 சர்வேயர்கள்..

கோவை மாவட்டத்தில் நில அளவை பிரிவிற்கு தமிழக அரசு மூலமாக 11 சர்வேயர் மற்றும் 7 டிராஃப்ட் மேன் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நில அளவைத் துறை உதவி இயக்குனர் சரவணன் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். மாவட்ட அளவில் பல்வேறு தாலுகாக்களில் இவர்கள் பணியாற்ற உள்ளனர். புதிதாக பொறுப்பேற்ற சர்வேயர்களுக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Read More

உப்பிலிபாளையம் மேம்பாலம் ரூ.16 கோடியில் பெருசாகுது

கோவை மில் ரோடு, புருக்பாண்ட் ரோடு, நஞ்சப்பாரோடு , கூட் செட் ரோடு சந்திக்கும் உப்பிலிபாளையம் மேம்பாலம் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. புவியியல் தகவல் அடிப்படையில் இந்த மேம்பாலம் கட்டப்படவில்லை. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பள்ளமாக இருப்பதால் மழை காலங்களில் குளம் போல் நீர் தேங்கி விடுகிறது. மேலும் இந்த மேம்பாலத்தில் இட நெருக்கடி இருக்கிறது. சமீப காலமாக பிரச்சினை அதிகமானதால் இதனை 16 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்து கட்ட தேசிய நெடுஞ்சாலை…

Read More

படையப்பா வேணாம்பா காசு கொடுப்பா..

கோவையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படையப்பா சினிமா படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இன்று சினிமா பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் படத்தில் சவுண்டு எதுவும் கேட்காத ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர். அப்போதும் சவுண்ட் எபெக்ட் வேலை செய்யவில்லை. சினிமா தியேட்டர் நிர்வாகம் ஏதோ செய்து பார்த்தும் சவுண்ட் கேட்கவில்லை. இந்த நிலையில் மௌன ராகமாக படம் ஓட்டப்பட்டது. கொதிப்படைந்த ரசிகர்கள் படையப்பா வேண்டாம் பணத்தை குடுங்க என வாக்குவாதம் செய்தனர். ஆனால் தியேட்டர் நிர்வாகம் பணம் திரும்பி…

Read More

ரேஷன் கார்டு வேண்டுமா

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கோயம்புத்துார் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகின்றன . அதன் தொடர்ச்சியாக டிசம்பர்-2025 மாதத்திற்கான சிறப்பு குறைதீர் முகாம் வருகின்ற 13.12.2025 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில்…

Read More

உங்களுக்கு ரேஷன் அரிசி வேண்டாமா. .

கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், தங்களது குடும்ப அட்டைகளுக்கு நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறவிருப்பமில்லை எனில், தங்களது உரிமத்தினை விட்டுக்கொடுப்பது தொடர்பாக www.tnpds.gov.in என்ற வலைதளத்தின் மூலமாகதங்களின் குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக (NO COMMODITY CARD) மாற்றிக்கொள்ளலாம். இந்த தகவலை கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

Read More