கோவை மாவட்டத்தில் எஸ் ஐ ஆர் பணிகள் நிலவரம்; தேர்தல் பார்வையாளர் ஆய்வு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு தேர்தல் பார்வையாளர் ராகுல் நாத் இன்று வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணிகள் (எஸ்ஐஆர்)தொடர்பாக ஆய்வு நடத்தினார். கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்கள், நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் குறிப்பாக இறந்து போனவர்கள், ஆப்சென்ட் ஆனவர்கள் முகவரியில் இல்லாதவர்கள் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரித்தார் . மேலும் விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் அடுத்து வெளியாக உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் பணிகள்…

Read More

கோவையில் வரும் 8ம் தேதி குரூப் 2 தேர்வு..!

கோவை பெரிய கடை வீதிக செயின்ட் மைக்கேல்ஸ் மேல்நிலைபள்ளியில் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கு (தொகுதி-|| மற்றும் || A பணிகள்) தேர்வு நடத்தப்படும். வரும் 8ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடத்தப்படும். ஓஎம்ஆர் வகையில் கேள்விகள் கேட்கப்படும். 331 தேர்வர் பாடத் தாள் II பொதுப் படிப்புகள் பொது நுண்ணறிவு பகுத்தறிவு தேர்வு எழுதவுள்ளனர். அன்றைய தினம் 348 தேர்வர் மதியம் 2.30 மணி முதல்…

Read More

போதைப் பொருள் கடத்திய 4 பேருக்கு 12 ஆண்டு சிறை; கோவை கோர்ட் தீர்ப்பு..!

பிரதான குற்றவாளி முனீர்.. நீலகிரி மாவட்டம் மசினகுடி போலீசார் கடந்த 26-10-2023ம் தேதி கக்கநல்லா சோதனை சாவடியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் 4 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் பெயர் முகவரி கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனையடுத்து போலீசார் கார் மற்றும் 4 பேரையும் சோதனை செய்தனர். அதில், மலப்புரத்தை சேர்ந்த முனீர் (34) என்பவரிடம்…

Read More

கோவையில் வெளிநாட்டு பணம் என நூதன ஆசை காட்டி ரூ 2.50 கோடி மோசடி; 3 பேர் கைது

காஞ்சீபுரம் கோவூர் பகுதியை சேர்ந்தவர் ரவி ( 56). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- கோவை பட்டணம் பகுதியை சேர்ந்த முத்து, அவரது மகன் தீபக் (27) ஆகியோருடன் கடந்த 2019-ம் ஆண்டு முதல் அறிமுகம் ஏற்பட்டு பழகி வந்தோம். இந்த நிலையில் முத்து கடந்த 2022-ம் ஆண்டு இறந்து விட்டார். இதனிடையே தீபக் என்னை அணுகினார். தனது அப்பாவிற்கு…

Read More

கோவை அரசு மருத்துவமனை முன் சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு..!

திருப்பூர் வஞ்சிபாளையம் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (27 ). கிரேன் தொழிலாளி . இவர் கோவை அரசு மருத்துவமனையின் முன்பு இன்று மாலை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார் . அப்போது அவர் கூறுகையில்,” எனது தம்பி கதிரேசன் (25 ) தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று எங்களது வீட்டுக்கு தேவையான மளிகை சாமான் வாங்க அவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது திருப்பூர் 63 வேலம்பாளையம்…

Read More

படிக்கணுமா குடிக்கணுமா..!கோவை புளியகுளத்தில் பரபரப்பு போஸ்டர்..

கோவை புலியகுளம் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு மதுபான கடைகள் குறிப்பாக எப் எல் 2 உரிமம் பெற்ற தனியார் மதுபான கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். பள்ளி கல்லூரிகள் உள்ள பகுதிகளில் மதுபான கடைகள் அதிகரிக்க என்ன காரணம் மாணவர்கள் படிக்க வேண்டுமா குடிக்க வேண்டுமாஇது புலிய குளமா சாராய குளமாஇதுதான் திராவிட மாடல் என்ற வாசகங்களுடன் நாம் தமிழர் கட்சியினர் புளியகுளம் மற்றும் அதன் சுற்றிய பகுதிகளில்…

Read More

கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் மாயமான 2 சிறுமிகள் மீட்பு

கோவை, உக்கடம் பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு 2 சிறுமிகள் நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தனர். அப்போது, கோவை மாநகரில் ரோந்து சென்று பெண்களை கண்காணிக்கும் பிங்க் பெட்ரோல் வாகனத்தில் போலீசார் அங்கு சென்றனர். அவர்கள் 2 சிறுமிகளையும் அழைத்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் கேரளா மாநிலம் வாளையார் அருகே உள்ள கஞ்சிக்கோடு பனங்காடு பகுதியில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்தனர். மேலும், விசாரணையில் அவர்கள் 17, 14 வயதுடைய அக்கா, தங்கை என்பதும்,…

Read More

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் ஓட்டு செயல் விளக்கம் முடக்கம்

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3524 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. சூலூர் ,மேட்டுப்பாளையம் ,தொண்டாமுத்தூர் வால்பாறை சிங்காநல்லூர், கோவை வடக்கு ,தெற்கு உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டு போடுவது தொடர்பான செயல் விளக்கம் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதன்படி மாவட்ட வாரியாக ஆர்டீஓ அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓட்டு பதிவு மெஷின், கட்டுப்பாட்டு மெசின் , சின்னம் காட்டும் மெஷின் போன்றவற்றை வைத்து பொதுமக்கள் ஓட்டு போடுவதற்கு செயல்…

Read More

கோவை மாவட்டத்தில் சென்சிடிவ் ஒட்டு சாவடிகள் அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3563 ஓட்டு சாவடிகள் இருந்தது. சமீபத்தில் நடந்த அனைத்து கட்சி, தேர்தல் பிரிவினர் ஆலோசனை கூட்டத்தில் கடந்த கால வாக்காளர்கள் அடிப்படையில் அதிக ஓட்டு சாவடிகள் ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 3117 ஓட்டு சாவடிகள் இருந்தது. தற்போது 446 ஓட்டு சாவடிகள் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்ஐஆர் பணிகள் நடத்தப்பட்டது. இறந்த வாக்காளர்கள், முகவரி மாறியவர்கள் என 6.50 லட்சம் பேர் பட்டியலில்…

Read More