கோவை மாவட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பதில் பின் தங்கும் தவெக கட்சி..

கோவை மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல்வேறு கட்சியினர் அரசியல் பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் தமிழக வெற்றி கழகத்தினர் எந்த அரசியல் வேலையும் செய்யாமல் ஒதுக்கி விட்டார்கள். ஜனநாயகன் படம் வரும் என கட்சி தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். படம் ரிலீசாகாத அதிருப்தியில் கட்சியினர் சுணக்கி போய் விட்டார்களாம். படம் வந்திருந்தால் விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் எழுச்சியுடன் வேலை செய்திருப்பார்கள். இப்போது ரொம்ப டல்லாக இருக்கிறார்களாம். என்ன செய்வது என தெரியாமல் பொறுப்பில்…

Read More

கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலத்தில் நாளை முதல் ஏ ஐ கேமரா..!

கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 1671 கோடி ரூபாய் செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழி பாதையாக 17.25 மீட்டர் அகலத்தில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் இரண்டாவது நீண்ட மேம்பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு.இந்த மேம்பாலத்தில் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை கண்காணிக்க கேமரா அமைக்கப்படவில்லை . மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் பாதிக்கப்படும் நிலைமை இருக்கிறது. மேலும் சிலர் வாகனங்களில்…

Read More

கோவையில் உயிருக்கு போராடிய கர்ப்பிணி யானை சாவு..!

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட குப்பனூர் பகுதியில் கடந்த 25ம் தேதியன்று ஒரு விவசாய நிலத்தில் இருந்த 50 வயதான ஒரு பெண் யானை சேற்றில் சிக்கி தவித்தது. இது குறித்து தகவல் அறிந்த சென்ற வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் கிரேன் மூலம் காட்டு யானையை சேற்றில் இருந்து மீட்டனர். பின்னர், அந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் அந்த யானையின் உடல் நிலை தேறியதை தொடர்ந்து கடந்த 26ம் தேதி…

Read More

கோவையில் பரபரப்பு.. பழிக்கு பழி வாங்க வாலிபரை விரட்டி அரிவாளால் வெட்டிய ரவுடி

கோவை அம்மன் குளம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரது மகன் பார்த்திபன் (26). கூலி தொழிலாளி. கடந்த 2016 ஆம் ஆண்டு அம்மன் குளம் ஹவுசிங் யூனிட் பகுதியில் கபடி போட்டி நடந்தது. அப்போது அங்கே கபடி விளையாடி கொண்டிருந்த பார்த்திபனின் நெருங்கிய கூட்டாளியான ஸ்பைக் என்கிற நவீன் குமார் (25) என்பவருக்கும்அம்மன் குளம் பகுதியை சேர்ந்த ஜப்பான் என்கிற ஹரிஹரன் (30) என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது . இதில் ஹரிஹரன் தனது கூட்டாளிகளுடன்…

Read More

கோவை மாவட்டத்தில் 39 ஓட்டு சாவடிகள் நீக்கம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவின் சார்பில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் இன்று இரவு நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தாசில்தார் தணிகை வேல், அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் பிரிவின் சார்பில், “கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சட்டமன்ற தேர்தலுக்காக கூடுதல்…

Read More

கோவையில் லவ் ஜோடி டூயட், டாய்லெட்க்கு பூட்டு

கோவை உக்கடம் வாலங்குளத்தில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பூங்கா உள்ளது. இங்கே இரண்டு நாட்களுக்கு முன் காதல் ஜோடி ஜாலியாக பேசிக் கொண்டிருந்தது. செல்போனில் போட்டோ வீடியோ பார்த்து ஜாலியாக இருந்த இந்த ஜோடி திடீரென ஆண்கள் கழிவறையில் புகுந்தது. அங்கே பாட்டு சத்தம் கேட்க இடையிடையே வேறு சத்தமும் கேட்டது. சந்தேகமடைந்த ஸ்மார்ட் சிட்டி பூங்கா செக்யூரிட்டி கதவை தட்டி விசாரித்தார். அப்போது ஆண்கள் கழிவறையில் இருந்து இளம்பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் எட்டிப் பார்த்தார்….

Read More

கோவை மாவட்ட எல்லையில் கனிமம் கடத்தல் கண்டறிய கேமரா

கோவை வழியாக கேரளாவிற்கு ஜல்லி கற்கள், செம்மண் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை, வருவாய் துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்ஒரு பகுதியாக கோவை-கேரள மாநில எல்லைகளான வாளையாறு, வேலாந்தாவளம் உள்பட 16 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதுதவிர ஊரக பகுதிகளான பேரூர், தொண்டாமுத்தூர், மதுக்கரை, சூலூர் உள்பட குவாரிகள், செம்மண் அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள்…

Read More

கோவையில் அனுமதியற்ற போஸ்டர்களை கிழிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

கோவை மாவட்டத்தில் அரசு துறை, அரசு சார்பு துறைகளின் சுவர்கள், பொது இடங்கள், மேம்பால சுவர்கள், மின்சார கம்பங்கள், மரங்கள் என ஏகப்பட்ட இடங்களில் அரசியல் கட்சி அறிவிப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் போஸ்டர்கள் அதிகமாகி விட்டது. மேம்பால சுவர்களில் கட்சிகளின் போஸ்டர்கள் அதிகமாகி விட்டது. கலெக்டர் அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம், தெற்கு, வடக்கு தாசில்தார் அலுவலகம், ஜிஎச், பொதுப்பணித்துறை அலுவலகம் என ஏகப்பட்ட அலுவலகங்களில் போஸ்டர்கள் அகற்றிய பின்னரும், மீண்டும் கட்சி போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக புகார்…

Read More

கோவை மாவட்ட வங்கிகளில் தேர்தலுக்காக அதிக பண பரிவர்த்தனை குறித்து விசாரணை..!

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவு சார்பில் ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்பட்ட வருகிறது .தேர்தல் கமிஷன் உத்தரவின்படி மாவட்ட அளவில்முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் மூலமாக கடந்த ஆறு மாதங்களில் அதிக அளவு பணம் ஷேர் செய்யப்பட்ட வங்கி அக்கவுண்ட் மற்றும் அதிக நபர்களுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட அக்கவுண்ட் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆறு மாத கணக்கு விவரங்களை வங்கி நிர்வாகங்கள் மாவட்ட தேர்தல் பிரிவு வசம்…

Read More

கோவையில் தெர்மோகோல் குடோனில் தீ..! பயங்கர புகையால் மக்கள் தவிப்பு

கோவை பீளமேடு கிரி அம்மன் கோவில் வீதி பகுதியில் காசி விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான குடோனில் இன்று மதியம் திடீரென தீ பிடித்தது. இந்த குடோனில் தெர்மோகோல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் கணபதி தீயணைப்பு நிலையம் மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் குடோனில் வைக்கப்பட்டிருந்த…

Read More