பவுண்டரி கழிவால ரொம்ப கஷ்டங்க..

கோவை கண்ணம்பாளையம் பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர். இதில் கோவையின் பிரபலமான பவுண்டரி நிறுவனம் தங்களது கழிவுகளை சுத்தம் செய்யாமல் வெளியே விடுவதாக புகார் தெரிவித்தனர். கருப்பு புகையால் அந்த பகுதி மாசடைந்து வருகிறது. நீரில் கழிவுகள் மிதக்கிறது. நிலத்தடி நீரும் மாசாகி வருகிறது. இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்..

Read More

கோவை கலெக்டர் ஆபீஸ் முன் மறியல் 130 பேர் கைது

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் சிஐடியு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சுய உதவி குழு மற்றும் தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்தல் குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல் சம வேலைக்குசம ஊதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்தது. இதில் மறியலில் ஈடுபட்ட 130…

Read More

5 லட்சம் வாக்காளர்கள் காலி…. சீக்கிரம் ஒட்ட போறாங்க லிஸ்ட்

கோவை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்ஐஆர்) நடந்தது. இதில் மாவட்ட அளவில் 32,25,198 வாக்காளர்கள் கடந்த முறை வெளியான பட்டியலில் குறிப்பாக ஜனவரி மாத பட்டியலில் இடம் பிடித்திருந்தனர். எஸ்ஐஆர் பட்டியல் கணக்கெடுப்பு படிவம் வழங்கி திரும்ப பெற்ற பின்னர், 5,02,256 பேர் காணவில்லை என தெரியவந்தது. இறந்தவர்கள் 1,13,592 பேர், கணக்கெடுப்பின் போது இல்லாதவர்கள் (ஆப்சென்ட்) 76,096 பேர், வீடு, முகவரி மாறி சென்றவர்கள் 2,91,928 பேர், இரு முறை வாக்காளர்…

Read More

கோவையில் 1.13 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 32 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் எஸ் ஐ ஆர் என்ற சுருக்கத் திருத்த பணிகள் ஒரு மாதம் நடந்தது. இதில் இன்று இறந்த வாக்காளர்கள் குறித்த விவரங்கள் வெளியானது. மாவட்ட அளவில் 1,13,592 வாக்காளர்கள் இறந்து விட்டதாக கூறி பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். 2,91,928 பேர் முகவரியில் இல்லை என தெரியவந்துள்ளது. சுமார் 76096 வாக்காளர்கள் கணக்கெடுப்பின்போது இல்லை என…

Read More

எஸ்ஐஆர் படிவம் சந்தேகமா.. ஆபீஸர் செல் நம்பரில் பேசுங்க

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் நடக்கிறது. வரும் 11ம் தேதி வரை பணிகள் நடத்தப்படவுள்ளது. வாக்காளர்கள் தாங்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை ஓட்டு சாவடி நிலை அலுவலர் வசம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், வாக்காளர்களுக்கு தங்களது ஓட்டு சாவடி, வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய சட்டமன்ற தொகுதி வாரியாக உதவி மையங்கள்…

Read More

திருட்டு உலகமடா.. கொஞ்சம் திருந்தி நடந்துக்கடா…

கோவை நகரில் பிக் பாக்கெட் வழிப்பறி, கத்தியை காட்டி பணம் பறிக்கும் கும்பல் நடமாட்டம் இருக்கிறது. குறிப்பாக நகரின் மையப் பகுதியான ரேஸ் கோர்ஸ் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட திருடர்கள் சுற்றிக்கொண்டிருப்பதாக தெரிகிறது. கடந்த கால வழக்குகளில் சிக்கிய முக்கிய திருடர்கள் ஏமாற்று நபர்கள் குறித்த போட்டோவுடன் கூடிய போஸ்டர்கள் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப், அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பகுதிகளில் திருடர்கள் குறித்த போட்டோக்கள் இடம்…

Read More

சரஸ்வதி நாகரிகமா..?! கலெக்டரிடம் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிட கழகம், சிபிஐ, சிபிஎம் திராவிடர் கழகம், ஆதி தமிழர் பேரவை உட்பட 20க்கும் மேற்பட்ட இயக்கங்களை சார்ந்தவர்கள் இன்று புகார் அளித்தனர். இதில் திராவிட நாகரீகத்தை மறைத்து சரஸ்வதி நாகரிகம் என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் வரும் 12 மற்றும் 13ஆம் தேதி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்க உள்ளது. இந்த கருத்தரங்கம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக பாரதியார் பல்கலைக்கழக பதிவாளருக்கு…

Read More

பழைய பென்ஷன் கேட்டவர்கள் கைது

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட கிளை சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மறியல் போராட்டம் இன்று நடந்தது. இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும்.காலியாக உள்ள பல லட்சம் காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும் .ஊழியர்களுக்கு ஊதியம் சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும்.மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர்கள் பதவியை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் விடப்பட்டது…

Read More

இதோட 12 வது மிரட்டல்; கோவை கலெக்டர் ஆபீஸ் பீதி

கோவை மாவட்ட கலெக்டர் ஆபீஸ் க்கு கடந்த சில மாதங்களில் 11 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. டார்க் நெட் பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து மிரட்டல் மெயில் அனுப்பி வருவதாக தெரிகிறது. இந்த மிரட்டல் மெயில் அனுப்பும் மர்ம நபர்கள் யார் என கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் கண்டறிய முடியவில்லை. இன்று 12 வது முறையாக மிரட்டல் இமெயில் வந்தது. எதைத்தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் மூலமாக கலெக்டர் அலுவலக வளாகம்…

Read More