பவுண்டரி கழிவால ரொம்ப கஷ்டங்க..
கோவை கண்ணம்பாளையம் பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர். இதில் கோவையின் பிரபலமான பவுண்டரி நிறுவனம் தங்களது கழிவுகளை சுத்தம் செய்யாமல் வெளியே விடுவதாக புகார் தெரிவித்தனர். கருப்பு புகையால் அந்த பகுதி மாசடைந்து வருகிறது. நீரில் கழிவுகள் மிதக்கிறது. நிலத்தடி நீரும் மாசாகி வருகிறது. இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்..
