கோவையில் புதிதாக 302 சரித்திர பதிவேடு குற்றவாளிகள்..

கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ரவுடிகளின் பின்னணிகளை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டது. கடந்த காலங்களில் ரவுடியாக வலம் வந்தவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் தொடர்ந்து ரவுடிகளாக வலம் வருகிறார்களா, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்களா, உயிருடன் உள்ளார்களா திருந்தி வாழ்ந்து வருகிறார்களா போன்ற விபரங்களை போலீசார் சேகரித்தனர். அப்போது சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறை சென்று வந்து மீண்டும், மீண்டும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை…

Read More

கோவை மாநகராட்சியில் 126 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்..!

கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் , மேயர் ரங்கநாயகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் நடப்பு மாநகராட்சி பட்ஜெட்டில் 4915.50 கோடி ரூபாய் வருவாய் மற்றும் மூலதன வரவினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் செலவாக 5041.71 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது . 126 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் உக்கடம் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஸ்கை வாக் என்ற…

Read More

கோவையில் போதை கும்பல் தாக்குதல் ; 3 பேர் காயம்

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு ஈச்சனாரி கற்பகம் கல்லூரி அருகே எம் டி எஸ் பேக்கரி உள்ளது. இந்தப் பகுதியில் கஞ்சா மற்றும் போதை கும்பல் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. நேற்று நள்ளிரவு இந்த பேக்கரி அருகே இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர் . அப்போது போதையில் வந்த ஒரு கும்பல் அவர்களிடம் வாக்குவாதம் செய்து கொடூரமாக தாக்கியது. இதில் போத்தனூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ், மார்ட்டின், போஸ் ஆகியோர் காயமடைந்தனர் ….

Read More

சிறுவாணி அணை நீர்மட்டம் 50 சதவீதம் சரிவு குடிநீர் பற்றாக்குறை அபாயம்.. !

கோவை மாவட்டத்தில் சிறுவாணி குடிநீர், கோவை மாநகராட்சி மற்றும் 22 வழியோரகிராமங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அணையின் உச்ச பட்ச நீர் மட்டம் 50 அடி. இதில் 44,61 அடி வரை நீர் தேக்க பராமரிப்பு பணி நடத்தும் கேரள நீர் பாசனத்துறை அணுமதி வழங்கியுள்ளது. உச்ச அளவை எட்டும் முன் அணையில் இருந்து எந்த முன் அனுமதியும் இன்றி தண்ணீர் திறந்து விடுவது வாடிக்கையாக நடக்கிறது. நேற்று அணையின் நீர் மட்டம் 25.22 அடியாக இருந்தது. குடிநீர்…

Read More

கோவை மாவட்டத்தில் வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாக எஸ்ஐஆர் பார்வையாளர் ஆய்வு..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி (எஸ்ஐஆர் )தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் தேர்தல் பார்வையாளர் ராகுல் நாத் , கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணியின் போது கடந்த சில ஆண்டுகளில் இறந்த மற்றும் முகவரி மாறி சென்ற 6.5 லட்சம்…

Read More

கோவை மாவட்டத்தில் ஹாகா கிராமங்களில் மனை இடங்களுக்கு அனுமதி தாமதம்

கோவை மாவட்டத்தில் நரசீபுரம், வெள்ளிமலைப்பட்டணம், தேவராயபுரம், களிக்க நாயக்கன்பாளையம். இக்கரை போளுவாம்பட்டி, மத்வராயபுரம், ஆலாந்துறை, பூலுவப்பட்டி, தென்கரை, மாதம்பட்டி, தீத்திபாளையம். பேரூர் செட்டிபாளையம் சுண்டக்காமுத்தூர் எட்டிமடை, மாவுத்தம்பதி தொண்டாமுத்தூர் நாயக்கன்பாளையம், கூடலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், நஞ்சுண்டாபுரம், சின்னதடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம் போன்ற 23 கிராமங்கள் ஹாகா என அழைக்கப்படும் மலையிட பாதுகாப்பு எல்லைக்குள் இருக்கும் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இங்கே வீடு கட்டடங்கள் கட்ட உள்ளூர் திட்டகுழுமத்தின் அனுமதி வழங்கப்படுவதில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகள் எந்த வித…

Read More

கோவை மேற்கு பைபாஸ் ரோட்டில் விபத்து; மாணவி சாவு பொதுமக்கள் மறியல்..!

கோவை மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை புதிதாக பைபாஸ் ரோடு போடப்பட்டது . மேற்கு பைபாஸ் என அழைக்கப்படும் இந்த ரோட்டில் இன்னும் முறையான போக்குவரத்து துவக்கப்படவில்லை. இருப்பினும் மதுக்கரையிலிருந்து கோவைப்புதூர் சுண்டக்காமுத்தூர் பேரூர் பச்சாபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகிறது. இன்று ஆட்டோ ஒன்று ஐந்துக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த அனைவரும் காயமடைந்தனர் . ஆபத்தான நிலையில் மூன்று பேர்…

Read More

கோவை வனத்தில் 50 எக்டரில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம்..!

காந்திநகர் பத்ரகாளி அம்மன் கோயில் வனப் பகுதியில் அகற்றப்படும் மரங்கள்..! கோவை மதுக்கரை வன சரக எல்லைக்கு உட்பட்ட காந்திநகர் , ஷூட்டிங் ரேஞ்ச், சந்தோஷி மாதா கோயில் வீதி, மிலிட்டரி கேம்ப், மைல்கல் உள்ளிட்ட பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அதிகளவு அடர்ந்து வளர்ந்துள்ளது. இவற்றில் 50 எக்டரில் களை தாவரங்களான உண்ணி செடிகள் லேண்டனா வகை தாவரங்கள் சீமை கருவேல மரங்கள் அகற்றுப்பணி வனத்துறை மூலமாக இன்று துவங்கியது . இரண்டு ஜேசிபி மூலமாக…

Read More

திமுக ஆட்சி இருக்க கூடாது கோவையில் நயினார் நாகேந்திரன் பேட்டி..

கோவை வடவள்ளி பகுதியில் மோடி முகாம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என தெரியவில்லை. சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை 5 ஆண்டுகளாக முதலமைச்சர் ஸ்டாலின் செய்யவில்லை. திமுக அரசு 470 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.சொத்து வரி, மின்சார கட்டணம்…

Read More

கோவை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கோதுமை 2100 டன்னாக அதிகரிப்பு..!

கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடைகள் உள்ளது. 11.59 லட்சம் ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் 11.22 லட்சம் அரிசி கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. மாவட்ட அளவில், ரேஷன் அரிசி மட்டுமின்றி துவரம்பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் வழங்கப்படுகிறது. இதர அரசு துறைகளின் பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டேன்டீ நிறுவனத்தின் டீத்தூள், உப்பு மற்றும் சில உணவு பொருட்கள் விற்பனைக்கு இருக்கிறது. ரேஷன் அரிசியுடன், கோதுமை வினியோகம் அதிகரிக்க வேண்டும் என நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை…

Read More