லங்கா கார்னரில் குழி தோண்டியாச்சு..

கோவை அரசு மருத்துவமனை ரயில்வே ஸ்டேஷன் லங்கா கார்னர் பாலம் பகுதியில் 24 மணி நேர குடிநீர் திட்ட பணி குழாய் மற்றும் பாதாள சாக்கடை பணி நடக்கிறது. ரோட்ட தோண்டி போட்டு இருக்காங்க இந்த வழியா போய் வருவது சிரமம். எனவே மாற்று வழி பாதையை தயவு செஞ்சு போங்க. சுங்கம் ரவுண்டானா பகுதியிலும் வேலை நடக்கிறது. ரோட்டில் குழி தோண்டி போட்டிருக்காங்க. பாத்து போங்க மக்களே..

Read More

வரும் ஜனவரி கடைசியில் மேற்கு பைபாஸ் ரோடு திறப்பு..

கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து மாதம்பட்டி வரை பதினொரு கிலோமீட்டர் தூரத்துக்கு 250 கோடி ரூபாய் செலவில் மேற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரோடு பணி முடியும் நிலையில் இருக்கிறது. மைல்கல் கோவைப்புதூர் சுண்டக்காமுத்தூர் கரடிமடை பேரூர் செட்டிபாளையம் மாதம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் இந்த ரோடு அமைக்கப்பட்டு இருக்கிறது. மைல்கல் பகுதியில் மட்டும் மேம்பாலம் பணி முடியவில்லை. இந்த பைபாஸ் ரோடு வழியாக கோவை கொண்டாட்டம், ஈசா யோக…

Read More

சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது

கோவை அன்னூர் ஓரைக்கால் பாளையம் பகுதியை சேர்ந்தவர் இம்ரான். தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரின் ஐந்து வயது மகனை சிலர் கடத்திச் சென்றனர். இம்ரான் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர்கள் பணம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தர வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மகனை கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். இது தொடர்பாக இம்ரான் அன்னூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது சிறுவனை கடத்தி சென்று…

Read More

பறவைக் காய்ச்சல் கோவை பார்டரில் அலார்ட்

கேரள மாநிலம் ஆலப்புழா உள்பட பல்வேறு மாவட்டங்களில் பறவை காய்ச்சல் தீவிரமாகி வருகிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கேரள மாநிலத்துக்கு அதிக அளவு கறிக்கோழி மற்றும் முட்டைகள் சப்ளை ஆகிறது சமீபகாலமாக கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகமானதை தொடர்ந்து சிக்கன் சாப்பிடுவதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர் கேரளாவில் பரவிய நோய் கோவை மாவட்டத்தில் அதிகரிக்காமல் தடுக்க மாவட்ட எல்லையான வாளையார் வேலந்தாவளம் மீனாட்சிபுரம் பகுதியில் கால்நடை பராமரிப்பு துறையினர் கண்காணிப்பு பணியில்…

Read More

ஆதிவாசி இறப்பு தொடர்பாக விசாரணை..

கோவை சாடிவயல் கவிதை சேர்ந்த பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து தமிழக பழங்குடியின மக்கள் ஆணையத்தின் சார்பாக இன்று விசாரணை நடத்தப்பட்டது. ஆர்டிஓ மாருதி பிரியா தலைமையில் நடந்த இந்த விசாரணையில் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்களிடம் பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.

Read More

ஆடுகளை வேட்டையாடும் சிறுத்தை..!

கோவை காரமடை சீலியூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஆடுகளை சிறுத்தை அவ்வப்போது வேட்டையாடி வருவதாக தெரிகிறது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினரிடம் அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் சிறுத்தை இதுவரை பிடிக்கப்படவில்லை. சிறுத்தை தொடர்ந்து ஆடுகளை கொன்று தின்பதாக அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இன்று மஸ்தான் என்பவரின் பட்டியில் இருந்த ஆடுகளை சிறுத்தை பிடித்து சென்றது. இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் சிறுத்தையை பிடிக்க சொல்லி திடீர்…

Read More

எஸ்பி வேலுமணியின் ‘வலது கரம்’ இன்ஜினியர் சந்திரசேகர் மீண்டும் அதிமுகவில்..!

கோவை மாவட்டத்தில் அதிமுகவில் தீவிரமாக பணியாற்றி வந்தவர் இன்ஜினியர் சந்திரசேகர். வடவள்ளி மற்றும் வடக்கு தொகுதி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் எளிதில் அணுகும் நபராக காணப்பட்டார். பல்வேறு அரசு திட்ட பணியை செய்வதற்கு உதவியாக இருந்துள்ளார். இவர் புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராகவும் பின்னர் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளராக பதவி உயர்வு பெற்றார். கடந்த ஆண்டு இவர் கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் இவர் கோவை மாவட்ட…

Read More

காட்டு பன்றிகளை சுட்டு தள்ளுங்க… விவசாயிகள் ஆவேசம்..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் வனத்துறை, மின் வாரியம், பொதுப்பணித்துறை, உள்ளாட்சிகள், வேளாண்மை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயி நாயக்கன்பாளையம் தேவராஜ் புகார் அளித்து பேசுகையில், “”வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்த வேண்டும். கடந்த 15 ஆண்டாக வன விலங்குகள் ஊருக்குள் வந்து செல்கின்றன. இப்போது உச்ச கட்டமாக அதிகமாகி…

Read More

தவெக லிஸ்டிலேயே இல்லையேப்பா…

கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியில் வெளியிடும் முன்னர் அரசியல் கட்சியினர் ஆலோசனை பெறப்பட்டது. மேலும் சிறப்பு முகாம் மற்றும் இறந்தவர்கள் பெயர் நீக்கம் தொடர்பாக நடந்த ஆய்வு கூட்டத்திலும் 12 அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் கோவை மாவட்டத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் எந்த கூட்டத்திலும் பங்கேற்கவில்லையாம். குறிப்பாக பூத் லெவல் ஏஜென்ட் 1, பூத் லெவல் ஏஜென்ட் 2 பட்டியலில் தமிழக வெற்றி கழகம்…

Read More

20 லட்ச வாக்காளர்களை நீக்கியது எப்படி… தேர்தல் கமிஷன் கோவையில் ஆய்வு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை தேர்தல் கமிஷனர் பானுபிரகாஷ் யக்ரூ, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் தொடர்பான பல்வேறு விவரங்களை கேட்டனர். பட்டியலில்…

Read More