உடல் கருகி போச்சு உசுரு வாழ உதவி பண்ணுங்க…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் செல்வபுரம் முத்துசாமி காலனியை சேர்ந்த சாந்தி (25) என்பவர் புகார் மனுவில், ” எனக்கு திருமணமாகி விட்டது. 2 குழந்தைகள் உள்ளனர். 4 ஆண்டிற்கு முன் என் கணவர் இறந்து விட்டார். நான் நிறுவனத்தில் வேலை செய்த போது தீ விபத்தில் என உடல் முழுவதும் கருகி போய் விட்டது. தோல் உரிந்து என்னால் வெளியே நடமாட முடியாத நிலையிருக்கிறது….

Read More

புதிய ஓய்வூதிய திட்டம்: தமிழக முதல்வர், நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு பாராட்டு

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு தலைமையில் ஜாக்டோ ஜியோ உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் டி ஏ பி எஸ் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருச்சி…

Read More

11.59 லட்சம் பேருக்கு 347 கோடி பொங்கல் பணம்

கோவை மாவட்டத்தில் 11,59,274 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. தமிழக அரசு அறிவித்துள்ளபடி பொங்கல் போனஸ் தொகை அனைத்து அரிசி ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. ஒரு கார்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் என மாவட்ட அளவில் 347 கோடி ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்படும். வரும் எட்டாம் தேதி முதல் டோக்கன் முறையில் பொங்கல் பரிசு தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் வழக்கம்போல் பச்சரிசி சர்க்கரை கரும்பு போன்றவையும் வழங்கப்படும். பொங்கல்…

Read More

மதுக்கரையில் வாகனத்தில் சென்றவரை கடித்து குதறிய கருஞ்சிறுத்தை ..!

கோவை பாலக்காடு மெயின் தோடு ரோடு மதுக்கரை குவாரி காலனி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க நபர் இன்று இரவு எட்டு மணியளவில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதி ஊருக்குள் இருந்து வேகமாக வந்த கருஞ்சிறுத்தை அந்த நபர் மீது பாய்ந்தது. கை மற்றும் வயிறு பகுதியில் கடித்து குதறியது. அதிர்ச்சியில் அந்த நபர் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கல் எடுத்து வீசி சிறுத்தையை விரட்டினர். சிறுத்தை அந்தப் பகுதியில் உள்ள சிமெண்ட்…

Read More

கோவை மாவட்டத்தில் 49 கொலை, 514 விபத்து சாவு…!

கோவை மாவட்டததில் கடந்த 2025ம் ஆண்டில் மொத்தம் 49 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடியிசம பழிவாங்கல் சமுதாயம், சாதி அல்லது அரசியல் காரணங்களால் எந்தக் கொலை வழக்குகளும் பதிவாகவில்லை. பதிவான கொலை வழக்குகளில் வாக்குவாதம் தொடர்பாக 13 கொலை, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 15 கொலை, பாலியல் காரணமாக 4 கொலை, குடும்பத தகராறில் 9 கொலை திருமணம் தாண்டிய உறவு தொடர்பாக 4 கொலை, காதல் விவகாரத்தில்…

Read More

ரூ.80 கோடி ரெடி பைபாஸ் ரோடு போட நிலம் வாங்க..

கோவை மேற்கு பைபாஸ் ரோட்டில் 3ம் கட்ட பணிக்காக 80 கோடி ரூபாய் நில ஆர்ஜித பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி துவக்கப்படும்.மாநில நெடுஞ்சாலைத்துறை திட்ட பிரிவு சார்பில் மதுக்கரை மைல்கல் முதல் நரசிம்ம நாயக்கன்பாளையம் வரை 32.43 கி.மீ தூரத்திற்கு பைபாஸ் ரோடு அமைக்கும் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் ரோடு பாலம் கட்டும் பணிகள் முடியும் நிலையில் இருக்கிறது….

Read More

ஓட்டு மெஷினை எங்க வைக்கலாம்.. அதிகாரிகள் ஆய்வு. .

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 3117 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 146 ஓட்டு சாவடிகள் அமைக்க, அதாவது 3563 ஓட்டு சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் கூடுதல் ஓட்டு சாவடிகள் தயார் செய்ய உத்தரவு வழங்கப்பட்டது. ஓட்டுமெசின்கள் சரி பார்ப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடக்கிறது. இந்த நிலையில் மாவட்ட அளவில் ஓட்டு எண்ணிக்கை நடத்தும் வகையில் ஓட்டு எண்ணிக்கை…

Read More

போன வருஷம் மழை கொஞ்சம் கம்மிதான்..

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் பெய்வது வழக்கம் . தென்மேற்கு பருவமழை 198 மில்லி மீட்டர் பெய்திருக்க வேண்டும் ஆனால் 184 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது இதேபோல் வடகிழக்கு பருவமழை சராசரியை விட சற்று குறைவாக பெய்தது. ஒரு ஆண்டில் 728 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும் ஆனால்667 மில்லி மீட்டர் மழை பெய்தது. வழக்கத்தை விட 61 மில்லி…

Read More

கோவையில் 23 கொலை, 477 திருட்டு கொள்ளை..

கோவை நகரில் 2025 ஆம் ஆண்டில் 477 திருட்டு வழக்குகளில் 35 வழக்குகளில் குற்றவாளியில் பிடிபட்டனர். இதர 704 வழக்குகளில் 486 பேர் பிடிபட்டனர். ஒரு ஆண்டில் 23 கொலைகள் நடந்தது 25 கொலை முயற்சி நடந்தது. இந்த வழக்குகளில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 கற்பழிப்பு வழக்கு 28 துன்புறுத்தல் வழக்கு 201 பெண்கள் வன்கொடுமை சட்ட வழக்கு 58 விபச்சாரம் வழக்குகள் பதிவானது. போக்சோ என்ற சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக…

Read More

பஸ் சக்கரத்தில் தலை வைத்து விபரீத தற்கொலை

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு டவுன் பஸ்ஸில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். அந்த பஸ் வாளையார் நோக்கி புறப்பட்டபோது அங்கே பேண்ட் சர்ட் அணிந்திருந்த சுமார் 25 வயது வாலிபர் திடீரென பின் சக்கரத்தில் தலை வைத்து படுத்து விட்டார். பஸ்ஸின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை சிதறி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரிக்கிறார்கள். பயணியில்…

Read More