காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த மாணவன்

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் ஜெகன் . 17 வயதான 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த இந்த சிறுவன் இன்று காலை சைக்கிளில் தனது வீட்டில் இருந்து காந்திபுரம் மேம்பாலத்துக்கு வந்தார். பாலத்தின் அடியில் சைக்கிளை நிறுத்திய ஜெகன் பாலத்தின் மீது ஏறி அங்கே இருந்து குதித்தார். இதில் கால் மற்றும் முதுகெலும்பு உடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவரின் தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்…

Read More

நகரை கலக்கும் நடிப்பு சக்கரவர்த்தி…!

கோவை நகரில் பல்வேறு இடங்களில் நடிப்புச் சக்கரவர்த்தி என்ற பட்ட பெயருடன் போஸ்டர்கள் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் ரஜினி கமல் விஜயகாந்த் அஜித் விஜய் எம்ஜிஆர் சிவாஜி என டாப் லெவல் சூப்பர் ஹீரோ படங்களும் இடம்பெற்றுள்ளது. குகன் சக்கரவர்த்தி என்பவர் வங்காள விரிகுடா என்ற பெயரில் சினிமா படம் எடுப்பதாக தெரிகிறது. இதற்கு மக்களை கவரும் வகையில் போஸ்டர் ஓட்ட வேண்டுமென நினைத்து இந்த மாதிரி செய்திருக்கிறார். கோவை நகரில் ரயில்வே ஸ்டேஷன் ஜிஎச் மற்றும்…

Read More

இந்து முன்னணியினர் சாலை மறியல்

திருப்பூர் ஈட்டி வீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற முயற்சித்த போது, இந்து முன்னணியினர் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம் அடைந்தார். கோவில் வருவாய்த்துறை புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி, அதை அகற்றும்படி அரசு அதிகாரிகள் கூறி வந்தனர். அதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கோவிலில் இருக்கும் சிலைகளை அகற்ற இன்று காலை வருவாய்த் துறையினர் அங்கு சென்றனர். அதற்கு…

Read More

அங்கன்வாடி ஊழியர்கள் வேலை நிறுத்தம்..

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி, சங்கங்களின் கூட்டமைப்பு கோவை மாவட்ட கிளை சார்பில் குறைந்தபட்ச சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கும் சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஊழியரின் பணி சுமையை கருதி உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற…

Read More

போலீசுக்கு பூங்கொத்து… ரவுடியாக மாற்றியதால் விவசாயிகள் கெத்து..!

கருமத்தம்பட்டியில் மக்கள் பிரச்சனைக்காக போராடிவரும் எங்களை கஞ்சா போதைப்பொருள் வியாபாரிகள் போல் ரவுடியாக சித்தரித்து விட்டார்கள். எங்களை ரவுடி பட்டியலில் சேர்த்து அசிங்கப்படுத்தி விட்டார்கள் என விவசாயிகள் சங்கத்தினர் கருமத்தம்பட்டி போலீசார் மீது புகார் தெரிவித்துள்ளனர். பலமுறை கூறியும் எங்களை ரவுடி பட்டியலில் இருந்து நீக்க மறுத்து விட்டார்கள் என புலம்பி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி பிரபாகரன் கூறுகையில், “போலீசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் மற்றும் தமிழக…

Read More

சிங்கமே, போர்வாளே… எஸ் பி வேலுமணிக்கு போஸ்டரில் பில்டப்..!

கோவை நகரில் ரயில்வே ஸ்டேஷன் கலெக்டர் அலுவலகம் உக்கடம் மேம்பாலம் அவிநாசி ரோடு மேம்பாலம் என பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் அதிகரித்து வருகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் எஸ்பி வேலுமணியின் ஆதரவாளர்கள் பல இடங்களில் அவரைப் பற்றி பில்டப் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அதிமுகவின் போர்வாள் சிறுபான்மையின மக்களின் போர் குரலே, பகைவர்களே ஓடுங்கள் சிங்கம் இரண்டு…

Read More

கோவையில் 4320 பேருக்கு லேப்டாப்..

கோவை மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் 4320 மாணவ மாணவிகளுக்கு இன்று லேப்டாப் வழங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் லேப்டாப் வாங்கி சென்றனர்.

Read More

சிறுவாணி விரிசல் அடைப்பு பணி எப்போ..?!

கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில், நீர்க்கசிவை தடுப்பதற்கு மறுசீரமைப்பு பணி மேற்கொள்ள, புனேவில் உள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் கடந்த ஆண்டு ஆய்வு நடத்தினர். அணை 22.60 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. அணையில் 15 மீட்டர் ஆழத்திற்கு நீர் தேக்கி வைக்க முடியும் அணை கட்டி 90 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் பக்க சுவரில் நீர் கசிவு கணிசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை தடுக்க பல்வேறு கால…

Read More

கோவையில் கட்சிக்காரங்க 2 நாள் ஓட்டு போடலாம்..

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3563 ஓட்டு சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளது. மாவட்டத்திற்காக 8391 ஓட்டு பதிவு மெசின்கள், 5245 கட்டுப்பாட்டு மெசின்கள், 5885 ஒட்டு சீட்டு சரி பார்க்கும் மெசின்கள் என 19,521 மெசின்கள் பயன்பாட்டில் இருக்கிறது, இவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் சேமிப்பு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மெசின்களில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பதிவான ஓட்டுக்கள், வேட்பாளர்களின் பெயர்கள், கட்சி மற்றும் சுயேட்சை…

Read More

டாய்லெட் இல்லைங்க.. பாத்ரூம் போக முடியல… பெண்கள் புகார்

கோவை மாநகராட்சி மதிமுக கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், “ கோவை மாநகராட்சி 26வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு அவிநாசி ரோடு மேம்பால பணி காரணமாக யூடர்ன் முறையில் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்து பீளமேட்டுக்குள் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது மேம்பால பணிகள் முடிவுற்று 6 மாதங்கள் ஆகி விட்டது. இன்னும் யூ டர்ன் முறையை மாற்றம் செய்யவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம்…

Read More