செந்தில் பாலாஜி வேட்பு மனு ஏற்பு… கரூர் குரூப் சுயேச்சைகள் காலி…!

கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக ,அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் உள்பட பல்வேறு கட்சி மற்றும் சுயேச்சையாக 61 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் இன்று 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. உடுமலையை சேர்ந்த செந்தில் பாலாஜி என்பவர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்திருந்தார் . இவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது .படிவம் 26 ல் இவர் சரியான விவரங்களை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி இவரது மனுவை…

Read More

கோவையில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்கள்…

கோவை மாவட்டத்தில் 450 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் முன்னாள் அமைச்சர் திமுகவின் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். சுமார் 3.17 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வைத்திருப்பது அபிடவிட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் விவசாய மற்றும் குடும்பத்தினரின் வட்டி தொழில் மூலமாக வருவாய் ஈட்டியதாக அபிடவிட்டில் குறிப்பிட்டுள்ளார். தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி லைசென்ஸ் உடன் வாங்கி இருப்பதாக வேட்பு மனுவில் தகவல் தெரிவித்துள்ளார். இதேபோல் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள்…

Read More

கோவை மாவட்டத்தில் 450 பேர் வேட்பு மனு… ஒரே நாளில் 172 பேர் மனு தாக்கல்…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இறுதி நாளாக வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில் மேட்டுப்பாளையம் தொகுதியில் 32 பேரும், சூலூரில் 18 பேரும், கவுண்டம்பாளையம் தொகுதியில் 18 பேரும், கோவை வடக்கில் 37 பேரும், தொண்டாமுத்தூரில் 43 பேரும், கோவை தெற்கில் 31 பேரும், சிங்காநல்லூரில் 28 பேரும், கிணத்துக்கடவில் 30 பேரும், பொள்ளாச்சியில் 19 பேரும், வால்பாறையில் 22 பேரும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். இன்று ஒரே நாளில், மாவட்ட…

Read More

கோவை மாவட்டத்தில் வரும் 10ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 26.98 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க ஆன்லைன், ஆப்லைன் மூலமாக பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டது. www.voters.eci.gov.in என்ற வெப்சைட்டில் ஆதாரங்களுடன் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எஸ்ஐ.ஆர் என்ற சுருக்க திருத்த பணிகள் முடிந்த சுமார் 1.22 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர். கடந்த ஆண்டிலிருந்து இதுவரை 6.50 லட்சம் பேர் பட்டியலிருந்து நீக்கப்பட்டனர். மாவட்ட அளவில் இறுதி வாக்காளர்…

Read More

கோவை மாவட்டத்தில் வரும் 12ம் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு மற்றும் கையேடு விநியோகம்…

கோவை மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 23ம் தேதி வாக்கு பதிவு நடக்கவுள்ளது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பூத் லெவல் ஆபீசர்கள் மூலமாக வீடு வீடாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் போட்டோவுடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்பட்டது. இப்போது போட்டோ பூத் சிலிப் கிடையாது. அதற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு போட்டோ இன்றி வழங்கப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகளுக்கான வாக்காளர் தகவல் சீட்டு…

Read More

வாக்குச்சாவடி பாதுகாப்பில் உஷார்… கோவை போலீசாருக்கு பயிற்சி வகுப்பில் உத்தரவு

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்களில் ஒட்டு சாவடி பணியில் உள்ள போலீசாருக்கான ஆலோசனை, பயிற்சி கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் மற்றும் பல்வேறு தேர்தல் பிரிவு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 500 க்கும் மேற்பட்ட தேர்தல் பணி போலீசார் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாநகர், மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஓட்டு சாவடிக்கும் ஒரு போலீசார் பணியில் இருப்பார்கள்….

Read More

தேர்தல் முறைகேடு வழக்குகளை பதிவு செய்யாத கோவை போலீசார்…!

Jayachandran – chief correspondent.. கோவை நகர், புறநகரில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது தவிர நகர், புறநகர் போலீசாரும் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் 15ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இருந்து இதுவரை சுமார் 8 கோடி ரூபாய்க்கு பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கட்சி சார்பில் பதுக்கிய அண்டா, குண்டா,…

Read More

ஓடியாடி உழைப்பது இன்ஜினியர் சந்திரசேகர்… ஜெயிக்க போவது வானதி சீனிவாசன்…

கோவை மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் அதிகமாக வாழும் பகுதி கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி. சங்கனூர் ,ரத்தினபுரி, கணபதி, மணியகாரன் பாளையம், கே கே புதூர், சாய்பாபா காலனி, நல்லாம்பாளையம் ,சீரநாயக்கன்பாளையம் ,வடவள்ளி, முல்லை நகர், மருதமலை, கலிக்கநாயக்கன்பாளையம், பொம்மணாம் பாளையம் போன்ற பகுதிகள் இந்த தொகுதியில் இருக்கிறது. 297 ஓட்டு சாவடி, சுமார் மூன்று லட்சம் வாக்காளர்கள் கொண்டது இந்த தொகுதி. இங்கே எந்த கட்சியினரும் எந்த வேலையும் செய்யவில்லை.அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணி…

Read More

கோவை மாவட்டத்தில் 100% ஓட்டுப்பதிவு சாத்தியமா…!?

கோவை மாவட்டத்தில் 27.12 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. வரும் 3ம் தேதி மாவட்டத்தில் ஓட்டு பதிவு நடக்க உள்ளது. தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் வாக்குப்பதிவு என்பதை வலியுறுத்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறது. மாவட்ட அளவில் ஹாரன் பில் பறவை தோற்றத்தில் ‘ஓட்டு வீரன்’ என்ற லோகோ உருவாக்கப்பட்டு பொது இடங்கள், கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் எஸ்ஐஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்கத்…

Read More

கோவை மாவட்டத்தில் 130 பேர் வேட்பு மனு தாக்கல்

கோவை மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் முதல் நாளான 30ம் தேதி 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடந்த 2ம் தேதி…

Read More