கோவை பேரூராட்சிகளில் கழிவுகள் அகற்ற 14 வாகனங்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் கழிவு அகற்றும் பணிக்காக 14 வாகனங்கள் பெறப்பட உள்ளது. 63 லட்சம் செலவில் இந்த வாகனங்கள் வாங்கப்பட உள்ளது. கோவை மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக இதற்கான டெண்டர் அறிவிப்பு விடப்பட்டிருக்கிறது . வரும் 15ம் தேதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு வாகனங்கள் பெறப்படும். பேரூராட்சி பகுதியில் உள்ள குப்பை மற்றும் பல்வேறு திடக்கழிவுகளை அகற்றவும் உரம் தயாரிக்கும் கூடங்களுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

Read More

கோவை போலீசில் 1400 புதிய கேமரா..!

கோவை மாநகர போலீசில் 20 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகிறது. இது தவிர சிறப்பு யூனிட்டுகளும் உள்ளது. மாநகர் பகுதியில் பல்லாயிரம் கேமராக்களை போலீசார் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனை , கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம் காந்திபுரம் , உக்கடம் , சிங்காநல்லூர் மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு பஸ் ஸ்டாண்ட் மற்றும் மார்க்கெட், முக்கிய இடங்களை போலீசார் கண்காணிப்பு கேமரா அமைத்து பார்த்து வருகிறார்கள் இந்த நிலையில் மாநகரப்…

Read More

செம்மொழி பூங்கா நாளை திறப்பு

கோவை காந்திபுரம் சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. இது இரு வாரம் முன்பே திறக்கப்பட்டது. இந்தப் பூங்கா நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. பொதுமக்கள் பூங்காவில் நுழைந்து இயற்கை காட்சிகளை பார்வையிடலாம். பெரியவர்களுக்கு 15 ரூபாய் கட்டணம் சிறியவர்களுக்கு ஐந்து ரூபாய் கட்டணம்.

Read More

கோவை கலெக்டர் ஆபீசுக்கு 14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது .இதைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மோப்ப நாயுடன் வந்து சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் வந்த வகையில் இருக்கிறது . தற்போது 14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபர் ரமேஷ் என்ற பெயரில் டார்க் நெட் பயன்படுத்தி இமெயில் அனுப்பி…

Read More

என் புருஷனை கொலை செஞ்சவங்கள பிடிங்க…மனைவி போலீசில் புகார்

கோவை காருண்யா சாடிவயல் பகுதியை சேர்ந்த தனலட்சுமி (30) என்பவர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில், “என் கணவர் ராஜ துரை (35) நாங்கள் கூலி வேலை செய்து வந்தோம். எங்களுக்கு 7 பெண் குழந்தைகள் உள்ளனர் கடந்த மாதம் 6ம் தேதி இரவு என் கணவர் ஆலாந்துறை டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். அங்கே ராமர், லட்சுமணர் பணம் கேட்டு தாக்கி கள்ளி விட்டதில் என் கணவர் காயம்…

Read More

யானை காரிடாரில் டிஜிபிஎஸ் சர்வே..!

கோவை மாவட்டத்தில் 693 சதுர கி.மீ பரப்பில் வனம் அமைந்திருக்கிறது. இதில் யானைகளின் இடப்பெயர்ச்சி அதிகமாக இருக்கிறது. கேரள மாநிலத்திலிருந்து கோவை வனத்திற்கு யானைகள் அதிகமாக வந்து செல்கின்றன. வன எல்லையில் ஆனயிக தலங்கள் சுற்றுலா மையங்கள், கல்வி, பொழுது போக்கு நிறுவனங்கள் இருக்கிறது. அதிக கட்டடங்களின் யானைகளின் வலசை பாதை (காரிடார்) முடங்கி போய் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் சர்வே பிரிவின்…

Read More

கோவை வெஸ்டன் பைபாஸ் 2 பேக்கேஜில் மாற்றம்…

கோவை மேற்கு பைபாஸ் ரோடு பணி மதுக்கரை மைல்கல் பகுதியில் துவங்கி நரசிம்ம நாயக்கன்பாளையம் வரையில் 32.40 கிமீ தூரத்திற்கு 3 கட்டமாக 4 வழிப்பாதையாக நடக்கிறது. முதல் கட்டமாக 11.8 கி.மீ தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் இந்த பணிகள் முடியும் நிலையில் இருக்கிறது. மைல்கல் முதல் மாதம்பட்டி வரை இந்த பணிகள் நடக்கிறது. ஜனவரி மாதத்தில் இந்த ரோடு பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலை…

Read More

கோவையில் ரோடு மறியல் செய்த விவசாயிகள் கைது

கோவை தென்னம்பாளையம் பகுதியில் உருக்கு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அண்ணா சிலை முன்பு இன்று மறியல் போராட்டம் நடத்த முயன்ற போது போலீசார் 100 கற்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்.

Read More

சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

கோவை கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேரணி நடந்தது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Read More