கோவை துணிக்கடை வளாகத்தில் கஞ்சா செடி

கோவை காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் பிரபலமான துணிக்கடையின் வாகன நிறுத்துமிடம் இருக்கிறது. இங்கே 3 அடி உயரத்தில் கஞ்சா செடி இருந்தது. இது தொடர்பாக கஞ்சா செடியின் போட்டோவுடன் தகவல் பரவியது. ரத்தினபுரி போலீசார் அங்கே சென்று விசாரித்தனர். நன்கு செழிப்பாக வளர்ந்த கஞ்சா செடியை வேறுடன் பிடுங்கி நேற்று அகற்றினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா செடி விவகாரம் சமூக வலை தளங்களில் வீடியோ பதிவுடன் வைரலாகியது. செடியை…

Read More

இன்ஜினியர் சந்திரசேகர் தலைமையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா..!

கோவை வடவள்ளி வி என் ஆர் நகர் , பொம்மனாம்பாளையம், நவாவூர் பிரிவு உள்பட பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆர் 109 பிறந்தநாள் விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது. மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். அவிநாசி ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் செம வேலுச்சாமி, எம்எல் ஏ அம்மன் அர்ஜுனன் , கேஆர்…

Read More

செட்டிபாளையத்தில் முறைகேடாக மது விற்ற2 பேர் கைது

திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவை செட்டிபாளையம் மதுக்கரை நிலம்பூர் பைபாஸ் ரோடு பகுதியில் உள்ளடாஸ்மாக் கடை அருகே முட்புதர் மறைவில் மது பாட்டில்களை பதுக்கி வைத்துவிற்பனை செய்வதாக புகார் வந்தது. கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் செட்டிபாளையம் போலீசார் சோதனை நடத்தினர். மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்த தேவகோட்டையை சேர்ந்த பிரபு, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.இவர்களிடம்…

Read More

கோவையில் நெஞ்சு வலியில் தவித்தவரை ரோட்டில் விட்டு சென்ற கொடுமை…

கோவை ஆர்.எஸ்புரம் பகுதியில் நேற்று முன் தினம் அரசு பஸ் டவுன்பஸ் சென்ற போது அந்த பஸ்சில் இருந்த சுமார் 60 வயது பயணி ஒருவருக்கு நெஞ்சு வலிஏற்பட்டது . அவர் உட்கார்ந்த சீட்டில் இருந்து பஸ்சிற்குள் விழுந்தார். வாயில் நுரை தள்ள அவர் மூச்சு விடமுடியாமல் தவித்தார். இந்த நிலையில் பஸ் டிரைவர், கண்டக்டர் பஸ்சை நிறுத்தி அவரை பஸ்சிலிருந்து இறக்கி ரோட்டோரம் படுக்க வைத்து விட்டு சென்று விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த…

Read More

வறட்சியில் சிறுவாணி அணை

கோவை சிறுவாணி அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அணையின் நீர் தேக்க உயரம் 49.53 அடி இதில் நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 29.88 அடியாக இருந்தது. அணையில் இருந்து 10.14 கோடி லிட்டர் குடிநீர் பெற அனுமதி உண்டு. ஆனால் நீர் மட்டம் குறைவினால் அணையில் இருந்து 6.9 கோடி லிட்டர் மட்டுமே குடிநீர் எடுத்து சப்ளை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக குடிநீர் அளவு 25 முதல் 30 சதவீதம்…

Read More

ரூ 100 கோடியில் போத்தனூர் ரயில்வே பணிகள் தாமதம்

கோவை ஈரோடு மார்க்கத்தில் போத்தனூர், வடகோவை முக்கிய ரயில் நிலைய சந்திப்பாக இருக்கிறது. இதில் போத்தனூர் இரண்டாவது பெரிய ரயில் நிலையமாக இருக்கிறது.கோவை ரயில் நிலையத்தில் இட நெருக்கடி இருப்பதால் போத்தனூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு முனைப்பு காட்டியது. 100 கோடி ரூபாய் மதிப்பில் அமரித் பாரத் திட்டத்தில் பில் லைன்,யார்டு, டெர்மினல், பயணிகள் வசதிகள், பார்க்கிங், கழிவறை என கூடுதல் வசதிகள் செய்யப்படுகிறது. வரும் காலத்தில் கோவையை விட போத்தனூர் தான் முக்கிய…

Read More

காட்டுத்தீ தடுக்க பயர் லைன்..

கோவை வனக்கோட்டத்தில் 693 சதுர கி.மீ பரப்பில் வனம் அமைந்திருக்கிறது.வனத்தில் வெயில் தாக்கம் வரும் காலங்களில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வெயில் தாக்கத்தில் காட்டு தீ பரவல் தடுக்க பயர் லைன் என அழைக்கப்படும் தீ தடுப்பு கோடு அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. கோவை வனப்பகுதியில் கோவை, போளுவாம்பட்டி மதுக்கரை,பெரியநாயக்கன்பாளையம் காரமடை, மேட்டுப்பாளையம் வனசரக எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த காலங்களில் சுமார் 100 கி.மீ தூரத்திற்கு தீ பரவாமல் இருக்க பயர் லைன் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது தீ…

Read More

வேளாண் பல்கலையில் சமத்துவ பொங்கல்..!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடந்தது. இந்த விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிர் மேலாண்மை இயக்குநர் கலாராணி இந்தப் பொங்கல் விழா விவசாயிகளையும், விஞ்ஞானிகளையும் இணைக்கின்ற இனிய விழாவாக மலர்ந்திருக்கிறது என்றார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (பொறுப்பு), சுப்பிரமணியன் பேசுகையில், “மண் வளத்தை பெருக்க, விவசாயிகள் பசுந்தாழ் உரப் பயிர்களை கண்டிப்பாக வளர்க்க வேண்டும்‌ சந்தை சார்ந்து விவசாயம்…

Read More

மதுக்கரை பைபாஸ் ரோட்டில் ஆம்புலன்ஸ் கார் மோதல்..

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு போடி பாளையம் பிரிவு பகுதியில் இன்று காலை ஆம்புலன்ஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் மற்றும் ஆம்புலன்ஸ் ஓடி வந்த இரண்டு பேர் காயமடைந்தனர். இரண்டு வாகனங்களும் ஊருக்குலைந்து சேதமானது. ஏற்கனவே இந்தப் பகுதி விபத்து அபாய இடமாக இருக்கிறது. பைபாஸோட விரிவாக்கம் செய்யும் திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. தினமும் விபத்து ஏற்படுவதால் பைபாஸ் ரோட்டில் வாகனங்களில் செல்ல பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Read More

கோவை மாவட்டத்தில் பொங்கல் விழா..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பத்திரப்பதிவு உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அரிசி மாவில் கோலமிட்டு பொங்கல் வைத்து படையல் போட்டு புத்தாடை அணிந்து அரசு ஊழியர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கலெக்டர் அலுவலகத்தில் பாடல்களைப் பாடி அரசு ஊழியர்கள் அசத்தினர். கயிறு இழுத்தல் , உறியடித்தல் மற்றும் பல்வேறு கலை…

Read More