கோவையில் 20 கிலோ தங்க கட்டியை தடையின்றி அனுப்பிய தேர்தல் அதிகாரிகள்…!

கோவை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலையான கண்காணிப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வந்தது. அதனை சோதனை செய்து பார்த்தபோது தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் சந்தேகம் இருப்பதாக…

Read More

கோவையில் 5 பேரிடம் 72,000 ரூபாய் பறிமுதல்… தப்பு கணக்கு போட்டதாக தேர்தல் பிரிவில் புகார்..

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை 37.46 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 13 கிலோ போதை பொருட்கள் சிக்கியது. நிலையான கண்காணிப்பு படையினர் 18.65 லட்ச ரூபாய் பறக்கும் படையினர் 12.08 லட்ச ரூபாய் மதிப்பிலான தொகையை பறிமுதல் செய்துள்ளனர்….

Read More

கோவை ஜிசிடி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

கோவை, மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. வரும் 30ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடக்கவுள்ளது. இந்த நிலையில், மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தும் வகையில் ஓட்டு எண்ணிக்கை மையம் (கவுண்டிங் சென்டர்) தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை நடத்த…

Read More

கோவையில் வாக்குச்சாவடி தயார் செய்யும் பணி தாமதம்…

கோவை மாவட்டத்தில் மேட்டுபாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தெற்கு, சூலூர், சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்ட மன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3571 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் தற்போது 446 ஓட்டு சாவடிகள், 8 துணை ஓட்டு சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓட்டு சாவடிகளுக்கு மேப் உள்ளிட்ட தகவல் விவரங்களுடன் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஓட்டு சாவடிகளில் குடிநீர், கழிவறை, சாய்வு தளம், நிழற்கூரை உள்ளிட்ட வசதிகளை…

Read More

கோவை நகரில் சைபர் மோசடி கும்பலால் 2294 பேர் பாதிப்பு…

கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றவாளிகளின் கைவரிசையால் மக்கள் பணத்தை இழந்து வருகின்றனர். சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து பொதுமக்கள் பணத்தை இழக்காமல் இருக்க ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் சைபர் கிரைம் மோசடி தொடர்ந்து அதிகமாகி வருகிறது. கோவை மாநகரில் கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் ரூ.27 கோடியை மக்கள் இழந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை சைபர் மோசடி கும்பலிடம் 15…

Read More

கோவையில் தந்தை இறந்தது தெரியாமல் நாள் முழுவதும் தேடிய மகள்…!

கோவை மதுக்கரை சீரபாளையம் அர்ஜூன் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து (53). இவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 13ம் தேதி காளிமுத்து மனைவி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை காளிமுத்து மற்றும் அவரது மகள் சங்கீதா ஆகியோர் அருகில் இருந்து கவனித்து வந்தனர். கடந்த 18ம் தேதி காளிமுத்து மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்….

Read More

கோவையில் பிளாட்பாரத்தில் தூங்கியவர் கல்லால் தாக்கி கொலை…!

. கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (56). எலக்ட்ரீசியன். இவர் மனைவி இந்திராணி (50). தண்ணீர் பந்தல் பஸ் நிறுத்தம் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு மணிகண்டன் (30) மற்றும் பரமேஸ்வரன் (27) என்ற மகன்கள் உள்ளனர். மணிகண்டன் டிரைவராக பணிபுரிந்து சுந்தராபுரத்தில் மனைவியுடன் வசித்து வருகிறார். பரமேஸ்வரன் தாயாருடன் வசித்து வருகிறார். ரங்கநாதன் மது குடித்து வந்ததாகவும், குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக…

Read More

கோவை மாவட்டத்தில் இன்று 19115 ஓட்டு மெஷின்கள் தொகுதி வாரியாக தேர்வு

கோவை மாவட்டத்தில் 10 சட்ட மன்ற தொகுதிகளில் 3571 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. இவற்றில் 8,343 ஓட்டு பதிவு மெசின்கள் (இவிஎம்), 5200 கட்டுப்பாட்டு மெசின்கள் (கன்ட்ரோல் யூனிட்), 55/2 சின்னம் காட்டும் மெசின்கள் (விவி பேட்) என மொத்தம் 19,115 மெசின்கள் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த மெசின்கள், தெற்கு தாலூகா அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் கமிஷன் பாதுகாப்பு குடோனில் இருந்து சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து ஒப்படைக்கப்படும். அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கான தாலூகா அலுவலகத்தில்…

Read More

தேர்தல் பணிகளை ஏற்க மறுக்கும் அரசு அலுவலர்கள், சிபாரி செய்யும் உயர் அதிகாரிகள்…!

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்ட அளவில் 3571 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. ஒரு ஓட்டு சாவடிக்கு 5 பேர் பணியாற்ற வேண்டும். மாவட்ட அளவில் ஓட்டு சாவடிகளில் மட்டும் 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இது தவிர தேர்தல் பணியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். தேர்தல் பணி அலுவலர்களுக்கு பணி உத்தரவு விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் அலுவலர் சிலர்…

Read More

கோவையில் தேர்தல் சோதனை: ரூ 2.76 கோடி நகை பணம் பொருட்கள் பறிமுதல்…!

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இன்று வரை 2.76 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் நகை மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 528 லிட்டர் அளவிலான மது, 129 கிலோ எடையிலான போதை பொருட்கள் 32 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து குறிப்பிட்ட சில பகுதிகளில் பணம் மற்றும் பொருட்கள் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. ஆர்…

Read More