நகை பணம் எப்போ தருவாங்க… கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காத்திருந்த புகார்தாரர்கள்..

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட நகை பணம் மற்றும் பல்வேறு பொருட்களை மீட்டு ஒப்படைப்பதாக நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை மாநகர போலீஸ் ஏற்கனவே திருட்டு தொடர்பாக புகார் அளித்திருந்த புகார்தாரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இவர்களுக்கு முறைப்படி திருடு போன பொருட்கள் திரும்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. புகார் தாரர்கள் தங்களது பணம் நகை செல்போன் திரும்ப கிடைக்கும் என கமிஷனர் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர். போலீஸ் ஸ்டேஷன்…

Read More

கோவைக்கு துணை ராணுவ படை : 10ம் தேதி வருகை

கோவை மாவட்டத்தில் குலூர், சிங்காநல்லூர், கோவை தெற்கு வடக்கு, தொண்டாமுத்தூர். மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, கவுண்டம்பாளையம் என 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களை காட்டிலும் கோவைக்கு அதிக பாதுகாப்பு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. தேர்தலின் போது கோவை மாவட்டத்தில் 6 ஆயிரம் போலீசார் பணியாற்றவுள்ளனர். ஆயுதப்படை அதிரடிப்படை போலீசாரும் பணியில் ஈடுபடவுள்ளனர். பிற மாநிலங்களில் இருந்தும் போலீசார் குறிப்பாக துணை ராணுவ…

Read More

கோவை மாவட்டத்தில் 182 சென்சிடிவ் ஒட்டுச்சாவடிகள்..!

கோவை மாவட்டத்தில் 3563 ஒட்டு சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 1117 ஓட்டு சாவடிகள் இருந்தது. இப்போது கூடுதலாக 446 ஓட்டு சாவடிகள் அமைக்க உத்தரவு வழங்கப்பட்டது. ஒட்டு சாவடிகளை பல்வேறு வகையாக பிரித்து அந்த விவரங்களை தேர்கள் கமிஷனுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் வாரியாக சென்சிடிவ் ஓட்டு சாவடிகளை போலீசார், வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள். வனத்துறை போன்ற பல்வேறு துறைகள் மூலமாக இனம் காண அறிவுறுத்தப்பட்டது. கடந்த காலங்களில்…

Read More

கோவை மாவட்ட சட்ட மன்ற தேர்தலில் 90 கண்காணிப்பு படைகள் தயார்

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் மும்முரமாக நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படும். ஒரு ஓட்டு சாவடிக்கு 4 பேர் என 14,252 பேர், ரிசர்வ் நிலையில் 150 பேர். இதர பணிகளில் சுமார் 5 ஆயிரம் பேர் இருப்பார்கள். கோவை மாவட்ட அளவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்படும் போது கண்காணிப்பு பணியில் ஈடுபட 90 சிறப்பு கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது….

Read More

கோவை மாவட்டத்தில் 60 ஆயிரம் பேருக்கு தபால் ஓட்டு..!

கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல்.. கோவை மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 22,000 பேர் வரை இருப்பதாக தெரியவந்துள்ளது . இதேபோல் மாற்றுத்திறனாளிகள் 14,500 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் 85 வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி தபால் ஓட்டு போட தகுதியான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ஆய்வுப் பணி…

Read More

கோவை கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் 3 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை..!

கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளிகள்.. கோவை பீளமேடு விமான நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் நகர் காட்டுப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி கல்லூரி மாணவி தனது ஆண் நண்பரும் ஒருவருடன் நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் பேசிக் கொண்டிருந்தார். இருவரும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாக தெரிகிறது. அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் எதுவுமில்லை. இந்த நிலையில் அங்கே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கருப்புசாமி (31), கார்த்திக் என்கிற காளீஸ்வரன் (21) மதுரை மாவட்டத்தை சேர்ந்த…

Read More

கோவையில் போட்டியிட கமலஹாசன் தலைமையில் ஆலோசனை…!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மக்கள் நீதி மையத்தின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசன் மற்றும் துணைத் தலைவர் மௌரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் தமிழகத்தில் போட்டியிட சாத்தியம் உள்ள தொகுதிகள் குறித்து கட்சியினர் கருத்து கேட்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு தொகுதியில் கடந்த முறை கமலஹாசன் போட்டியிட்டார். இதில் சொற்ப வாக்கு…

Read More

கோவை பஸ் ஸ்டாண்டில் ரீல்ஸ்: அத்துமீறல் தொடர்பாக புகார்

கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இன்ஸ்டாகிராம் ஆர்வலர் ஜித்து ஷாஜி என்பவர் பெண் வேடமிட்டு எனது நண்பர் ஒருவருடன் சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடி இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளை இந்த ரீல்ஸில் அவர் காட்டியுள்ளதாக தெரிகிறது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் அத்துமீறி அனுமதி இன்றி இது போன்ற ரீல்ஸ் எடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read More

கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகள் இரண்டாக பிரிப்பு: 2 உதவி இயக்குனர் நியமனம்

கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகள் இருக்கிறது. இந்த ஊராட்சிகளின் நிர்வாகம் ஊராட்சி உதவி இயக்குனர் மேற்பார்வையில் நடைபெற்று வந்தது. திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு மற்றும் நிதி மேலாண்மை போன்றவை தணிக்கை உதவி இயக்குனர் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது கோவை மாவட்ட ஊராட்சிகளின் நிர்வாகம் இரண்டாக பிரிக்கப்பட்டது. ஊராட்சி உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் மாவட்ட அளவில் 12 ஒன்றியங்கள் என்றிருந்தது . இந்த நிலைமை மாறி இப்போது 6 ஒன்றியங்கள் 114 என மாற்றப்பட்டது. கோவை…

Read More

பாரதியார் பல்கலைக்கழகத்தில் 99.15 லட்ச ரூபாயில் டிஆர்டிஒ ஆராய்ச்சி திட்டம்

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு DRDO மூலம் ரூ.99.15 லட்சம் மதிப்பிலான முக்கிய ஆராய்ச்சி திட்டம் அங்கீகாரம் இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் (DRDO), நியூ டெல்லி நிறுவனத்தால், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய ஆராய்ச்சி திட்டம் ஒன்றிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. “Development of Novel Antidote(s) for Highly Toxic Organophosphorous Compounds” என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த ஆராய்ச்சி திட்டம், பாரதியார் பல்கலைக்கழகத்தின் DRDO Industry Academia – Centre of…

Read More