ரூ. 1800 கோடி ரெடி..6 வழிப்பாதை ஆகுது மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ்..

கோவை மாவட்டத்தில் பிரதான பைபாஸ் ரோடாக மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோடு அமைந்துள்ளது. கடந்த 1999 ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த பைபாஸ் தான் கோவை கேரளாவுக்கான இணைப்பு பாதையாக இருக்கிறது. இந்த பைபாஸ் ரோட்டில் சுங்க கட்டணம் வசூல் 5 மையங்களில் நிறுத்தப்பட்டது. மதுக்கரையில் மட்டும் சுங்க கட்டணம் பெறப்பட்டு வருகிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் (நகாய்) சார்பில் இந்த பைபாஸ் ரோடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பைபாஸ் பேராட்டில் வாகன நெருக்கம் அதிகமாகி விட்டது. 26.2…

Read More

கோவை மேற்கு பைபாஸ் ரோடு விரைவில் திறப்பு

கோவை மேற்கு பைபாஸ் ரோடு பணிகள் 250 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11 கிலோமீட்டர் தூரம் நடக்கும் இந்த பணிகள் 90 சதவீதம் வரை முடிவு பெற்றுள்ளது. இன்னும் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு கூடுதல் தார் தளம் அமைக்க வேண்டி இருக்கிறது. வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் மொத்த பணிகள் முடிந்து விடும். வரும் ஜனவரி மாதம் இந்த பைபாஸ் ரோட்டை திறக்க மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரம்…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் கல்வி கடன் வழங்கும் விழா

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன் மற்றும் பல்வேறு வங்கி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் கல்லூரி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் கல்வி பயில வங்கியில் சார்பில் கல்வி கடன் தொகை வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Read More

SIR பணிகளை 4ம் தேதிக்குள் முடியுங்க…

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 3117 ஒட்டு சாவடிகள் இருக்கிறது. சுமார் 32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஒரு ஓட்டு சாவடிக்கு ஒரு பூத் லெவல் ஆபீசர் (பிஎல்ஓ) என நியமிக்கப்பட்டு தேவையான படிவங்களை தேர்தல் பிரிவினர் வழங்கியுள்ளனர். பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று படிவங்களை வழங்கி பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவட்ட அளவில் இந்த பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. வரும் டிசம்பர்…

Read More

கோவையில் செம்மொழி பூங்கா திறப்பு தமிழக முதல்வர் பங்கேற்பு

முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்பு கோவை மாநகரில் காந்திபுரம் சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். சிறைச்சாலை வளாகத்திலேயே முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில், உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கு 208.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடத்தப்பட்டது. செம்மொழிப் பூங்காவில் தாவரவியல் பூங்கா, சூரியதகடு சிற்பங்கள். பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் செம்மொழி பூங்காவிற்கு எடுத்து வருதல்…

Read More

கோவையில்15 ஆயிரம் ஓட்டு மிஷின்கள் விரைவில் ரீ செட்டிங்..

கோவை மாவட்டத்தில் 3117 ஓட்டு சாவடி மையங்கள் உள்ளது. மாவட்ட அளவில் சுமார் 32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாவட்டத்திற்கான ஓட்டுப்பதிவு கருவிகள் தெற்கு தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் சேமிப்பு குடோனில் வைக்கப்பட்டுள்ளது.15 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓட்டு பதிவு கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த கருவிகளில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் சின்னங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் பதிவான வாக்குகள் குறித்த மொத்த…

Read More

மைசூர் ஆன மகிஷப்பட்டினம்

கொங்கு நாட்டின் வட எல்லையில் அமைந்த மலைகள் சூழ்ந்த பகுதி எருமையூர் என அழைக்கப்பட்டது. சங்க கால செய்யுள்களில் இந்த பகுதியை நாரரி நறவின் எருமையூரன், பேரிசை எருமை நன்னாடு, நுண்பூண் எருமை குடநாடு குறிப்பிட்டுள்ளார்கள். எருமை நாட்டில் இருந்து பாய்ந்த காட்டாறு அயிரி என அழைக்கப்பட்டது . அயிரை யாற்றடை கரை வயிரியின் நரலும் காடு என அயிரி ஆற்றை பற்றி பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்கள் . தலையாலங்கானம் என்ற ஊரில் பாண்டியன் நெடுஞ்செழியனுடன் சோழனும் சேரனும்…

Read More