கொடிசியாவில் புத்தக கண்காட்சி
கோவை கொடிசியாவில் ஆண்டு தோறும் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது . இந்த ஆண்டுக்கான புத்தக கண்காட்சி வரும் வெள்ளி துவங்கி 26ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது குறித்து கோவை புத்தக திருவிழா தலைவர் ராஜேஸ், கொடிசியா தலைவர் ரங்கசாமி ஆகியோர் கூறியதாவது: இளம் தலைமுறையினர் இடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், புத்தக வாசிப்பாளர்கள் பயனடையும் வகையில் கொடிசியா சார்பில் 10வது ஆண்டாக புத்தக கண்காட்சி கொடிசியா அரங்கில் வரும் வெள்ளிக்கிழமை துவங்குகிறது….
