கோவையில் 7 ஆண்டு தலை மறைவு கொலை வழக்கு குற்றவாளி கைது
கோவை பேரூர், சுண்டக்காமுத்தூர் வையாபுரி தெருவைச் சேர்ந்த கார்த்திக் (39). இவர் மீது பேரூர் போலீசில் கொலை, கொள்ளை மற்றும் வீட்டில் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி, சுண்டக்காமுத்தூரைச் சேர்ந்த கமலம் (70) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது, திருடும் நோக்கில் வீட்டுக்குள் புகுந்த கார்த்திக், அவர் கூச்சலிட்டதால் வீட்டிலிருந்த அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவர் அணிந்திருந்த 6 கிராம் தங்க…
