பாதையில் தூங்கறாங்க, பரிதாபத்தில் கோவை ஜிஎச்…
கோவை அரசு மருத்துவமனையில் 1200க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பிரசவ வார்டு, குழந்தைகள் வார்டு, எலும்பு முறிவு வார்டு, நரம்பியல் வார்டு போன்றவற்றில் நோயாளிகள் அதிகமாக இருக்கிறார்கள். நோயாளிகளுடன் வரும் உறவினர்கள், பார்வையாளர்களாக மருத்துவமனை வளாகத்தில் தங்கி உதவி செய்ய வேண்டியுள்ளது. பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே மருத்துவமனையில் அனுமதி வழங்கப்படுகிறது. இவர்கள் தங்குவதற்கு மருத்துவமனை வளாகத்தில் போதுமான இட வசதி செய்து தரவில்லை. பிரசவ வார்டின் முன் பார்வையாளர்கள் கூட்டம்…
