கோவையில் கூலி தொழிலாளி அடித்து கொலை…? 2 பேரிடம் விசாரணை
கோவை வடவள்ளி வீரகேரளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (45). கூலி தொழிலாளி. இவர் மனைவி பாரதி கண்ணம்மா (33). சுரேஷிற்கு நீண்ட நாட்களாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த 12ம் தேதி பாரதி கண்ணம்மா உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக கேரளா சென்றார். மறுநாள் மாலை சுரேஷின் நண்பர் ராஜேஷ் என்பவர் சுரேஷை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது,…
