கோவையில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியர் கைது
கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் தபால் தந்தி அலுவலகம் கோர்ட் பள்ளிகள் பாஸ்போர்ட் அலுவலகம் ரயில் நிலையம் என பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது. அரசியல் மற்றும் சினிமா தொடர்பு நபர்கள் பெயர்களை குறிப்பிட்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி கேட்டு ஆட்சேபகரமான தகவல்களை வெளியிட்டு இந்த வெடிகுண்டு மிரட்டல் இமெயில்கள் விடப்பட்டிருந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்…
