தேர்தல் பணிகளை ஏற்க மறுக்கும் அரசு அலுவலர்கள், சிபாரி செய்யும் உயர் அதிகாரிகள்…!

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்ட அளவில் 3571 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. ஒரு ஓட்டு சாவடிக்கு 5 பேர் பணியாற்ற வேண்டும். மாவட்ட அளவில் ஓட்டு சாவடிகளில் மட்டும் 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இது தவிர தேர்தல் பணியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். தேர்தல் பணி அலுவலர்களுக்கு பணி உத்தரவு விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் அலுவலர் சிலர்…

Read More

கோவையில் ஆதாரமற்ற பணம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை தீவிரம்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோடு பகுதியில் நேற்று காரில் சென்ற ஒரு நபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர் காரில் வைத்திருந்த 2 லட்ச ரூபாய் தொடர்பாக ஆதாரம் கேட்கப்பட்டது . உரிய ஆதாரம் இல்லாததால் அந்த தொகையை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோவை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதே போல் ஈச்சனாரி கற்பகம் கல்லூரி அருகே…

Read More

கோவையில் ஓட்டுக்கு பணம்: தேர்தல் செயலியில் புகார் பெற பயிற்சி

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் ஆணையத்தின் மூலமாக இஎஸ்எம்எஸ், சுவிதா, சி விஜில் இசிஐ நெட் வோட்டார் போன்ற செயலிகள் பயன்படுத்தும் முறை தொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கு இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி தரப்பட்டது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தொழில் நுட்ப பிரிவினர் , தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி தாசில்தார் தணிகைவேல் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த செயலிகள் மூலமாக பொதுமக்களிடம் இருந்து பல்வேறு…

Read More

கோவையில் கஞ்சா, சிந்தடடிக் டிரக்… வீடியோ கான்பரன்சில் துணை தேர்தல் கமிஷனர் விசாரணை

சமீபத்தில் கோவை ரயில் நிலையத்தில் வரும் முதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.. (பைல் படம்) கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய துணை கமிஷனர் பானு பிரகாஷ் யத்ரூ இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது ஆலோசனை கூட்டத்தில் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் கடந்த முறை தேர்தல் ஆணைய துணை கமிஷனர் தான் ஆய்வுக்கு…

Read More

கோவை மாவட்டத்தில் மேலும் 20 ஆயிரம் பேர் வாக்காளர்களாக விண்ணப்பம்..!

கோவை மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் 11,00,889 ஆண் வாக்காளர்கள், 13,95,396 பெண் வாக்காளர்சகள், 528 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 26,96,813 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 25,74,608 பேர் வாக்காளர்களாக இருந்தனர். இந்த நிலையில் 1,22,205 வாக்காளர்கள் 2 மாதத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். கடந்த சில மாதங்களாக எஸ்ஐ.ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் நடந்தது….

Read More

கோவை மாவட்ட சட்ட மன்ற தேர்தலில் 90 கண்காணிப்பு படைகள் தயார்

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் மும்முரமாக நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படும். ஒரு ஓட்டு சாவடிக்கு 4 பேர் என 14,252 பேர், ரிசர்வ் நிலையில் 150 பேர். இதர பணிகளில் சுமார் 5 ஆயிரம் பேர் இருப்பார்கள். கோவை மாவட்ட அளவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்படும் போது கண்காணிப்பு பணியில் ஈடுபட 90 சிறப்பு கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது….

Read More