மதுக்கரையில் யானை தாக்கி விவசாயி சாவு…!
கோவை மதுக்கரை புதுப்பதி அருகே உள்ள சோளக்கரை வன எல்லை கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி நடராஜ் (60) என்பவர் இன்று காலை மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த யானை ஒன்று ஆவேசமாக நடராஜை தூக்கி வீசியது. அவரது காலில் மிதித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். யானை சென்றதும் அங்கே வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக…
