விநாயகர் சிலைகள் கரைக்க குளங்களுக்கு லாரி நீர் சப்ளை…!
கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வரும் 14ம்தேதி (திங்கள்) நடக்கிறது. அன்றைய தினம் மாநகரில் பல்வேறு பொது இடங்களில் இந்து அமைப்புகள் சார்பில் 6 அடி முதல் 12 அடி வரை உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் வழிபாடு நடைபெற உள்ளது. அதன்பிறகு, விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட்டு அந்தந்த அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட குளங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளது. மாவட்ட அளவில் சிங்காநல்லூர் குளம், வெள்ளக்கிணறு முத்தண்ணகுளம், குறிச்சி…
