கோவையில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை வாழைமரங்கள், புடலை நாசம்…!

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளாக திடீர் மழை பெய்து வருகிறது.

கோடைக்கு முன்பே அதிக வெப்பம் காரணமாக திடீர் வெப்ப சலன மழை பெய்து வருவதாக தெரியவந்துள்ளது.அதுவும் மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை செய்து வருகிறது.

மழையின் காரணமாக சுண்டக்காமுத்தூர் பேரூர் தொண்டாமுத்தூர் ஆலந்துறை நரசிபுரம் தென்னமநல்லூர் துடியலூர் பெரியநாயக்கன்பாளையம் காரமடை மேட்டுப்பாளையம் மதுக்கரை கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் கொடி வகைகள் குறிப்பாக அவரை, புடலங்காய், பீர்க்கங்காய் பந்தல் அடியோடு சாய்ந்து நாசம் ஆகிவிட்டதாக விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதுபோல் பல இடங்களில் வாழை மரங்களும் சாய்ந்து விழுந்துவிட்டது. சுண்டக்காமுத்தூரில் 30 ஏக்கரில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து நாசமாகிவிட்டது‌ இது தொடர்பாக விவசாயிகள் தரப்பில் இருந்து வேளாண்மை துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *