டாஸ்மாக் கடையை மூட சொல்லுங்க… கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகார்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொது நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர் அதில் தடாகம் ரோடு கோவில் மேடு பஸ் ஸ்டாப் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது இதற்கு அருகே 3 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது.
சமீபத்தில் தமிழக அரசு பள்ளி வழிபாட்டுத்தலங்கள் அறிய உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்டது ஆனால் கோவில் மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை இந்த மது கடையில் மதுபானம் குடிப்பவர்கள் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் தகராறு செய்கிறார்கள் மது பாட்டில்களை பொது இடத்தில் வீசி செல்கிறார்கள் எனவே இந்த பகுதியில் உள்ள மூன்று டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
