21 வயசு ஆயிருச்சா… டாஸ்மாக் கடைகளில் ஆதார் ஆதாரம் வாங்கி விற்பனை…
கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபான விற்பனையில் பல்வேறு கட்டுபாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
21 வயதிற்கு குறைவான நபர்கள் மது குடிப்பதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து 21 வயதிற்கு குறைவானர்களுக்கு மதுபாட்டில் தரக்கூடாது. வயது ஆதாரங்களை கேட்டு மது வழங்க உத்தரவிடப்பட்டது. மாவட்ட அளவில் இளம் வயதினர் மது வாங்க வந்தால் அவர்களிடம் ஆதார் கார்டு, வயதிற்கான ஆதாரங்கள் கேட்கப்படுகிறது.
இன்று புலியகுளம் தனியார் பார் மற்றும் சில டாஸ்மாக் கடையில் 21 வயதிற்கு குறைவாக மது பாட்டில் வாங்க வந்த சிலருக்கு மதுபாட்டில் வழங்கப்படவில்லை. இளம் குடிபிரியர்கள் மது வாங்க வந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.
கடந்த சில ஆண்டாக இளம் வயதினர் மது போதைக்கு அடிமையாக இருப்பதாக தெரிகிறது. மதுபான கடைகளில் 21 வயதிற்கு மேல் தான் மது பாட்டில் விற்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஆனால் இதை டாஸ்மாக் நிர்வாகத்தினர் கடை பிடிக்கவில்லை. புதிய அரசு இந்த வயது உத்தரவை தீவிரப்படுத்தி கடை பிடிக்கிறது. இந்த நிலையை மேலும் கடுமையாக கடை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
