கோவை மாவட்டத்தில் வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாக எஸ்ஐஆர் பார்வையாளர் ஆய்வு..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி (எஸ்ஐஆர் )தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் தேர்தல் பார்வையாளர் ராகுல் நாத் , கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணியின் போது கடந்த சில ஆண்டுகளில் இறந்த மற்றும் முகவரி மாறி சென்ற 6.5 லட்சம்…

Read More

கோவை மாவட்டத்தில் ஹாகா கிராமங்களில் மனை இடங்களுக்கு அனுமதி தாமதம்

கோவை மாவட்டத்தில் நரசீபுரம், வெள்ளிமலைப்பட்டணம், தேவராயபுரம், களிக்க நாயக்கன்பாளையம். இக்கரை போளுவாம்பட்டி, மத்வராயபுரம், ஆலாந்துறை, பூலுவப்பட்டி, தென்கரை, மாதம்பட்டி, தீத்திபாளையம். பேரூர் செட்டிபாளையம் சுண்டக்காமுத்தூர் எட்டிமடை, மாவுத்தம்பதி தொண்டாமுத்தூர் நாயக்கன்பாளையம், கூடலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், நஞ்சுண்டாபுரம், சின்னதடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம் போன்ற 23 கிராமங்கள் ஹாகா என அழைக்கப்படும் மலையிட பாதுகாப்பு எல்லைக்குள் இருக்கும் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இங்கே வீடு கட்டடங்கள் கட்ட உள்ளூர் திட்டகுழுமத்தின் அனுமதி வழங்கப்படுவதில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகள் எந்த வித…

Read More

கோவை மேற்கு பைபாஸ் ரோட்டில் விபத்து; மாணவி சாவு பொதுமக்கள் மறியல்..!

கோவை மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை புதிதாக பைபாஸ் ரோடு போடப்பட்டது . மேற்கு பைபாஸ் என அழைக்கப்படும் இந்த ரோட்டில் இன்னும் முறையான போக்குவரத்து துவக்கப்படவில்லை. இருப்பினும் மதுக்கரையிலிருந்து கோவைப்புதூர் சுண்டக்காமுத்தூர் பேரூர் பச்சாபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகிறது. இன்று ஆட்டோ ஒன்று ஐந்துக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த அனைவரும் காயமடைந்தனர் . ஆபத்தான நிலையில் மூன்று பேர்…

Read More

கோவை வனத்தில் 50 எக்டரில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம்..!

காந்திநகர் பத்ரகாளி அம்மன் கோயில் வனப் பகுதியில் அகற்றப்படும் மரங்கள்..! கோவை மதுக்கரை வன சரக எல்லைக்கு உட்பட்ட காந்திநகர் , ஷூட்டிங் ரேஞ்ச், சந்தோஷி மாதா கோயில் வீதி, மிலிட்டரி கேம்ப், மைல்கல் உள்ளிட்ட பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அதிகளவு அடர்ந்து வளர்ந்துள்ளது. இவற்றில் 50 எக்டரில் களை தாவரங்களான உண்ணி செடிகள் லேண்டனா வகை தாவரங்கள் சீமை கருவேல மரங்கள் அகற்றுப்பணி வனத்துறை மூலமாக இன்று துவங்கியது . இரண்டு ஜேசிபி மூலமாக…

Read More

திமுக ஆட்சி இருக்க கூடாது கோவையில் நயினார் நாகேந்திரன் பேட்டி..

கோவை வடவள்ளி பகுதியில் மோடி முகாம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என தெரியவில்லை. சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை 5 ஆண்டுகளாக முதலமைச்சர் ஸ்டாலின் செய்யவில்லை. திமுக அரசு 470 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.சொத்து வரி, மின்சார கட்டணம்…

Read More

கோவை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கோதுமை 2100 டன்னாக அதிகரிப்பு..!

கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடைகள் உள்ளது. 11.59 லட்சம் ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் 11.22 லட்சம் அரிசி கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. மாவட்ட அளவில், ரேஷன் அரிசி மட்டுமின்றி துவரம்பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் வழங்கப்படுகிறது. இதர அரசு துறைகளின் பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டேன்டீ நிறுவனத்தின் டீத்தூள், உப்பு மற்றும் சில உணவு பொருட்கள் விற்பனைக்கு இருக்கிறது. ரேஷன் அரிசியுடன், கோதுமை வினியோகம் அதிகரிக்க வேண்டும் என நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை…

Read More

கோவை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணி; தேர்தல் பார்வையாளர் ஆய்வு..!

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றது . இந்த நிலையில் இன்று தேர்தல் பார்வையாளர் மகபீர் பிரசாத், கோவை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் . இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், ஆர்டிஓ .,கள் ராமகிருஷ்ணன் , மாருதி பிரியா தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி தாசில்தார் தணிகை வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் மற்றும் புதிதாக…

Read More

கோவையில் தொழிற் சங்கத்தினர் மறியல் போராட்டத்தினால் பரபரப்பு…!

மத்திய அரசு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும். மின்சார சட்டத்தை திருத்தக் கூடாது. அரசுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் பெயரை கட்டாயம் மாற்றக்கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்க மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டு நடவடிக்கை குழு சார்பில்…

Read More

கோவையில் தன்னைத்தானே உளியால் செதுக்கும் சிலைதிறப்பு..!

கோவை செஞ்சிலுவை சங்கம் ரவுண்டானா பகுதியில் கோவை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் தன்னை தானே உளியால் செதுக்கி கொள்ளும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. முயற்சி முன்னேற்றம் கடும் உழைப்பு போன்றவற்றை குறிக்கும் வகையில் இந்த சிலை உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட இந்த அழகிய சிலையை இன்று கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் திறந்து வைத்தார் .இவ்விழாவில் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோவை நகரில்…

Read More

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் முழு அளவில் தயார்..!

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆய்வு நடத்தினார். நாளை, மாநில அளவில் இந்திய தேர்தல் கமிஷனர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகே தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படும் நாட்கள், அதற்கான பணிகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளது. தேர்தல் தொடர்பான பணிகளுக்காக தலைமை தேர்தல் அதிகாரி, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி பவன் குமார் ,தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர்…

Read More