பழங்கால சின்னங்களை வைத்து சர்வே துறையினர் ஆய்வு..

கோவை மாவட்ட நில அளவை துறை சார்பில் கோவை மாவட்டத்தில் நில அளவை வரலாற்று சின்னங்கள் மற்றும் அடையாளங்கள் உள்ள பகுதிகளில் கள ஆய்வுப் பணி நேற்று நடந்தது. கோவை மாவட்ட நில அளவைத் துறை உதவி இயக்குனர் சரவணன் தலைமையில்புதிதாக சர்வேயர்களாக பணியில் சேர்ந்த 64 பேர் கள ஆய்வு மற்றும் பயிற்சி முகாமில் பங்கேற்றனர். பெரிய முக்கோணவியல் நிலையம் , பெஞ்ச் மார்க் என அழைக்கப்படும் கடல் மட்ட உயர எல்லைப் பகுதி, கோர்ஸ்…

Read More

சேற்றில் விழுந்து உயிருக்கு போராடும் யானை..

கோவை தொண்டாமுத்தூர் குப்பனூர் கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெண் யானை ஒன்று சுற்றி சுற்றி வந்தது. நடக்க முடியாமல் தள்ளாடிய அந்த யானை இன்று காலை நீர் தொட்டி அருகே உள்ள சேற்றில் கால் வைத்து தடுமாறி கீழே விழுந்தது. அதற்குப் பிறகு யானையால் எழுந்திருக்க முடியவில்லை. இது தொடர்பாக கோவை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜேசிபி மூலமாக சேறு இருந்த பகுதியை அகற்றி யானையை எழ வைக்க முயன்றனர். ஆனால்…

Read More

காட்டூர் கடையை சாம்பலாகிய வெல்டிங் ..

கோவை காட்டூர் ராஜரத்தினம் வீதி ஆட்டோ மொபைல் கடை மற்றும் குடோன் நேற்று தீ பிடித்தது. இதனால் கோவை நகர் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இந்த கோர தீ விபத்தின் பின்னணி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மூன்று தளங்கள் கொண்ட இந்த கடையில் மேல் தளத்தில் எலிவேஷன் ஃபைபர் அமைக்க வெல்டிங் பணி நடத்தப்பட்டு இருக்கிறது. ‌ பணி முடிந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீ பரவி உளளது. வெல்டிங் மூலமாக விழுந்த தீக்கனல்…

Read More

பைன் லிங்க் தொட்டீங்க கெட்டீங்க..!

கோவை கணபதி அருகே உள்ள சங்கனூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (40). இவரது மொபைல் எண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு வாகன போக்குவரத்து விதிமீறல் செய்து உள்ளீர்கள் என்றும் அதற்கு உரிய அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்து எஸ்எம்எஸ் மூலம் ஒரு தகவல் வந்துள்ளது. மேலும் அபராத தொகை செலுத்த லிங்க் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் சென்று அபராத தொகையை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த செல்வகுமார் செல்போனில் வந்த அந்த லிங்கை தொட்டுள்ளார்….

Read More

உச்சா போனா உதை.. நகை பணம் இழந்த வாலிபர்

கோவை சாய்பாபா காலனி பாலசுந்தரம் வீதி பகுதியை சேர்ந்தவர் நவீன் சக்கரவர்த்தி (23). இவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு தனது நண்பர் ஒருவருடன் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா வளாகத்திற்கு சென்றார். அங்கே மறைவான பகுதியில் சிறுநீர் கழிக்க சென்ற போது அந்த வழியாக காரில் வந்த ஒண்டிப்புதூர் எஸ் எம் எஸ் லே-அவுட் பகுதி சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (25)…

Read More

தீ பரவியது, புகையால் மூச்சு திணறியது..

கோவை விமான நிலையம் அருகே காலி இடத்தில் இன்று சிலர் பிளாஸ்டிக் தெர்மாகோல் மற்றும் சில பொருட்களை குவித்து தீ வைத்தனர். கரும் புகையுடன் தீ பரவியதால் அந்தப் பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அடிக்கடி இதே போல் வீணான பொருட்களை தீ வைத்து எரிக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

பலாத்காரம் செய்து படுகொலை செய்த பாவிக்கு ஆயுள்..

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் மகன் முத்துக்குமார் (42 ). கட்டட கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவருக்கும் நட்பு இருந்தது . இருவரும் ஒரே பகுதியில் வேலைக்கு சென்று வந்தனர் . இந்த நிலையில் அந்த பெண் தனது குடும்ப தேவைக்காக மூன்று பவுன் தங்க நகையை முத்துக்குமாரிடம் கொடுத்திருந்தார் . அதனை அடமானம் வைத்து பணம் பெற்று தருமாறு…

Read More

லவ் பண்ண மாட்டியா என மிரட்டி மாணவிக்கு கத்தி குத்து..!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 17 வயதான சிறுமி முதல் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் அதே கல்லூரியில் படித்து வந்த 18 வயது மாணவருக்கும் நட்பு இருந்தது. இந்த நிலையில் மாணவர் தன்னுடன் பழகிய மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதை அந்த மாணவி ஏற்கவில்லை. கடந்த இரண்டு மாதமாக மாணவர் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். மாணவி காதலை நிராகரித்ததால் கோபமடைந்த மாணவர் இன்று அவரிடம் பேசுவதாக கூறி வாக்குவாதம் செய்தார். பின்ன…

Read More

போஸ்டர் டர்ர்.., ஓட்டும்போது கொர்ர்ர்…!

கோவை அவிநாசி ரோடு மேம்பாலம், கலெக்டர் அலுவலகம், உக்கடம் மேம்பாலம் உள்பட பல்வேறு பகுதிகளில் அத்துமீறி அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனங்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர் . அரசு சுவர் மற்றும் அரசு சார்பு இடங்களில் போஸ்டர் ஒட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது . இருப்பினும் தடையை மீறி பல இடங்களில் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர் . அதுவும் அதிகார தோரணையில் அரசியல் கட்சியினர் தொடர்ந்து அத்துமீறி வருவதாக தெரிகிறது. மாநகர் முழுவதும் போஸ்டர் கலாச்சாரம் அதிகமானதை…

Read More

கோவை வடக்கு தொகுதி மக்களுக்கு வழிகாட்டும் அதிமுக..!

கோவை வடக்கு தொகுதி வட்டாரத்தில் அனைத்து பகுதி மக்களின் நம்பிக்கை முகமாக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் வலம் வருகிறார். தீவிர அரசியலில் இருந்து விலகி பின்னர் தீயாய் களமிறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறார். சீரநாயக்கன்பாளையம் , வடவள்ளி, மருதமலை, பொம்மனாம்பாளையம், ஓனாப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். உடல் நலம் பாதித்தவர்களுக்கு, கல்வி கற்க வழியில்லாதவர்களுக்கு உதவி வருகிறார். பொம்மனாம் பாளையம் தேவராஜ் என்பவர்…

Read More