சட்டமன்ற தேர்தலில் முறைகேடு: ‘ஆப்’ மூலமாக புகார் பெற உத்தரவு..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள். உதவி அலுவலர்கள். பயிற்றுநர்களுக்கான ஆலோசனை மற்றம் பயிற்சி வகுப்பு இன்று நடந்தது. இதில் இந்திய தேர்தல் கமிஷன் டெக்னிக்கல் திட்ட இயக்குநர் சவுரவ் ராய் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக புரஜக்டரில் பயிற்சி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் ஆணையத்தின் மூலமாக இஎஸ்எம்எஸ், சுவிதா, சி. விஜில், இசிஐ நெட் வோட்டார் போன்ற செயலிகள் பயன்பாட்டில் இருக்கிறது. இசிஐ நெட் 40க்கும் மேற்பட்ட பல்வேறு தேர்தல் செயலிகளை…

Read More

கோவையில் வந்தாச்சு பாம்பு மீட்பு படை..!

கோவை நகரில் கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாம்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகமாகி விட்டது. வீடுகளில் பாம்பு புகுந்து விட்டதாக பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர் . சில நேரங்களில் தீயணைப்புத் துறையினர் வர தாமதம் ஏற்படுகிறது .மேலும் பல்வேறு இடங்களில் பாம்புகள் நடமாட்டத்தினால் பொதுமக்கள் வீடுகளில் வசிக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையை தவிர்க்க தன்னார்வ அமைப்பினர் உதவியும் மூலமாக கோவையை சேர்ந்த அமீன், விக்னேஷ் ஆகியோருக்கு இரண்டு இரு…

Read More

கோவையில் டிரேடிங் ஆப் மூலம் பல கோடி ரூபாய் மோசடி..!

கோவை நகரில் பொது மக்களுக்கு whatsapp மூலமாகவும் சோசியல் மீடியாக்கள் மூலமாகவும் டிரேடிங் சம்பந்தமான மெசேஜ் அதிகமாக வருகிறது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் மாதந்தோறும் அதிக வட்டி வழங்கப்படும். வீட்டில் இருந்தபடி அதிக பணத்தை பெற டிரேடிங் முதலீடு உதவியாக இருக்கும் என தெரிவிக்கிறார்கள் இதை நம்பி முதலீடு செய்பவர்களுக்கு ஓரிரு மாதங்கள் உரிய தொகை வழங்கப்படுகிறது. அதற்கு பின்னர் அதிக முதலீட்டை பெற்று ஏமாற்றி வருகிறார்கள். கோவை புதூர் பகுதியை சேர்ந்த சுசித்ரா…

Read More

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோவையில் ஆய்வு..!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று கோவை வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த முதல்வர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பிரம்மாண்டமாக 300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வரும் பெரியார் நூலகம் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். ஏழு தளங்களில் 7 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட வரும் இந்த நூலகம் பொதுமக்களுக்கு அதிக பயன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்கள் மற்றும் பொருட்களை முதல்வர் பார்வையிட்டு…

Read More

தமிழக முதல்வர் கோவை வருகை: பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்

தமிழக முதல்வர் இன்று கோவை வருகிறார். மாலை 4 மணி அளவில் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு சக்தி பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் மேற்கு மண்டல மாவட்டங்களுக்கான திமுக பாத முகவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேச உள்ளார். இதில் சுமார் 1.50 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு கருதி கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்பில்…

Read More

கோவை மாநகராட்சி கூட்டம் 10 நிமிடத்தில் 143 தீர்மானம் நிறைவேற்றம்

கோவை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது. இதில் மேயர் ரங்கநாயகி மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ரோடு சாக்கடை கால்வாய் மழை நீர் வடிகால் தெரு மின் விளக்குகள் பல்வேறு பராமரிப்பு பணிகள் செய்வது தொடர்பாக 143 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானங்கள் முழுமையாக படிக்காமல் பத்து நிமிடத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தீர்மான தலைப்புகளை படிக்க கூட அவகாசம் தராமல் அவசரமாக இத்தனை தீர்மானங்களை…

Read More

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு 36 ஆயிரம் மாணவர்கள் எழுதுகிறார்கள்..

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வினை 36 ஆயிரம் மாணவ, மாணவிகள்எழுதவுள்ளனர் தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 2ம் தேதி துவங்கி 26-ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இதில் மார்ச் 2ல் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வும், 5-ம் தேதி ஆங்கிலம், 9 ம் தேதி வேதியியல், கணக்கியல், புவியியல், 13-தேதி இயற்பியல், பொருளாதாரவியல், வேலைவாய்ப்பு திறன்,…

Read More

தமிழக முதல்வர் நாளை கோவை வருகை; 3000 போலீஸ் பாதுகாப்பு..!

கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாக முகவர்கள் கூட்ட அரங்கம் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவை வரவுள்ளார். கோவை விமான நிலைய வளாகத்தில் கட்சியினர், பொதுமக்கள் சார்பில் அவருக்கு வரவேற்பு வழங்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து முதல்வர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் பெரியார் நூலகம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்யவுள்ளார். இந்த நூலகம் கட்டுமான பணிகள் 7 தளங்களில் நடக்கிறது…

Read More

கோவையில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை..!

தூத்துக்குடி கோவில்பட்டியைச் சேர்ந்தவர் குமார் என்கிற மாரிமுத்து (40. இவரது மனைவி கற்பகவள்ளி(35). குமாரின் நண்பருக்கும், கற்பகவள்ளிக்கும் தகாதபழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து குமார் கண்டித்தார். இந்த நிலையில் கற்பகவள்ளி தனது இரண்டு குழந்தைகளையும் கணவருடன் விட்டு விட்டு, அந்த நபருடன் சென்றுவிட்டார். இருவரும் கோவை கருமத்தம்பட்டி அருகேயுள்ள சோலக்காட்டுப்பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கணவர் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். மனைவியை குமார் பல்வேறு பகுதியில் தேடினார். அவரின் இருப்பிடம் தெரியவந்த நிலையில் அவர் கருமத்தம்பட்டிக்கு…

Read More

கோவையில் வருவாய்த்துறையினர் 2வது நாளாக போராட்டம்..

வருவாய் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் இன்று 2வது நாளாக நடந்தது. இதில் பேசிய நிர்வாகிகள், நாம் மிகவும் கஷ்டப்பட்டு பணி செய்கிறோம். அனைத்து பாதிப்புகளும் நமக்கு தான் வருகிறது. நம் உயர் அதிகாரிகள் சொகுசான காரில் வருகிறார்கள். நமக்கு கிடைக்க வேண்டிய…

Read More